RSS

வெளியூர்காரனும் வெத்து ஃபிகருங்களும்



வெளியூர்காரனுக்கு ரெண்டு விஷயம் ரொம்ப பிடிக்கும். ஒன்னு பால்கோவா , இன்னொன்னு பால்கோவா மாதிரியான ஃபிகர். ஆனா பாருங்க இவனுக்கு ஃபிகருங்களை எவ்வளோ பிடிக்குமோ அதுல அஞ்சு பர்சன்ட் கூட ஃபிகருங்களுக்கு இவனை பிடிக்கிறதில்லை.ஏன்னு காரணம் கேட்டா என்னத்தை சொல்றது? மாப்ள ராசி அப்படி! வடிவுக்கரசி மாதிரி இருக்கற ஃபிகருங்க கூட இவனை மதிக்கிறதில்லைன்னா மனுஷனுக்கு எப்படி இருக்கும்?


ஃபிகர் உஷார் பண்றது ஒரு கலை.அதுவும் ஆய கலைகளில் ஃபர்ஸ்ட்.அதுக்குன்னு வாழ்க்கைல நிறைய இழக்க வேன்டி வரும்.காலைல நேரமே எழுந்து குளிக்கனும்,குறிப்பா பல் தேய்க்கணும்.இதுலயெல்லாம் நம்ம ஆளு செம கில்லாடி. ஃபிகர் வர்றதுக்கு முன்னாடி மேக்கப் எல்லாம் போட்டுக்கிட்டு பஸ் ஸ்டாப்ல போய் நிப்பான்,ஆனா அவ இவனைப் பார்த்து கேவலமா ஒரு லுக் விடும் பாரு...நீயா இருந்தா தொங்கிடுவ...பட் மாப்ள கவலைப்பட மாட்டான்.எனக்கு தெரிஞ்சு டெடிகெஷன்னா அது வெளியூர்காரன் தான்.

இப்படிதான் ஒரு நாள் கீழ்பாக் கார்டன் ஸ்டாப்ல நின்னுக்கிட்டு இருந்தோம்.நல்லா பேசிட்டு இருந்தவன் திடீர்னு ஜே.டி சாலிங்கர் , ஓ.ஹென்றின்னு என்னென்னவோ பெனாத்துனான்,சைட்ல பாத்தா ஒரு சக்கை ஃபிகர்.சரி அடிச்சு விடுறான்னு நானும் விட்டுட்டேன்.

அப்படியே கொஞ்சம் கொஞ்சமா கொஞ்ச நேரத்துல கரெக்ட் ஆயிடுச்சி... இவன் ஜாதகத்துல இப்படி நடக்க வாய்ப்பே இல்லையேன்னு யோசிச்சா இந்த பக்கமா ஒருத்தன் வந்து ரேட் பேசிட்டு இருக்கான். சே...ஐட்டம் உஷார் பண்ண ஓ.ஹென்றி பத்தி பேசுன ஒரே ஆளு நம்மாளுதான்யா!

சரி அதாவது போகட்டும்...ஒரு நாள் ரங்கநாதன் தெருவுல சுத்திட்டு இருந்தோம்.தீபாவளி கூட்டம் வேற. ஃபிகருங்க கூட்டம் கூட்டமா சுத்திட்டு இருக்காங்க.மாப்ளைக்கு எதை எடுப்பது எதை விடுப்பதுன்னே தெரியலை.ஒரு வழியா கூட்டத்துக்கு வெளியில வந்து வாங்கினதெல்லாம் பைக்குள்ளதான் இருக்கான்னு பாத்துட்டு இருக்கேன். போலீஸ்காரர் ஒருத்தர் எல்லாரையும் வெரட்டிக்கிட்டு இருந்தார். சரி வாடா போகலாம்னு திரும்பறதுக்குள்ள சார் ஏதோ பொண்ணைப் பார்த்து வழிஞ்சிட்டு இருக்கார்.டென்ஷன்ல போலீஸுக்கும் கூட்டத்துக்கும் தகராறு நடக்க , அந்த தள்ளுமுள்ளுல " இந்த போலீஸ்கார ....... மவனுங்களே இப்படிதான்டா"ன்னு கத்திக்கிட்டே ஒரு ஆட்டோக்குள்ள போய் விழுந்தான்.ஆட்டோ ல ஒருத்தர் முடியைப் பிடிச்சி மேல தூக்கினார்.பார்த்தா அவரும் போலீஸ். ஷ்ஷ்...யப்பா அவனால நானும் தீபாவளியை வேடிக்கை தான் பாக்க முடிஞ்சது.கொண்டாட முடியலை.அப்பப்போ காதுல ஜெட் ஏர்வேஸ் போகும் ரெண்டு பேருக்குமே.

இவ்வளவு ஏங்க ! கிரடிட் கார்ட் வேணுமான்னு கேட்ட பொண்ணுக்கிட்டு நம்பர் கேட்டு உஷார் பண்றேன்னு அவளை நேர்ல பாக்கப் போய் பேஸ்த் அடிச்சமாதிரி வந்தான். ஃபிகர் எப்படி இருந்துச்சுன்னு கேட்டா ஒன்னுமே சொல்லலை. ஒரே புலம்பல். கூட போனவன் கிட்ட எப்டிடா இருந்தா ஃபிகர்னு கேட்டோம். மேடம் கருணாஸ்க்கு லேடி கெட்டப் போட்டமாதிரி இருந்திருக்காங்க. சரி இன்னிக்கு குவார்ட்டருக்கு மேட்டர் கிடைச்சிடுச்சினு சந்தோஷமா இருந்தா மேட்டர் அது இல்லையாம். இவன் ஃபோன்ல பம்பாய் அரவிந்த்சாமி மாதிரி இருப்பேன்னு புருடா விட்டிருக்கான்..கடைசில அது கோவிச்சுட்டு போயிடுச்சாம்..

இப்போ பிளாகுல வந்து என்னை சைனா ஃபிகர் டேட்டிங் கூப்பிடுது ஆஸ்திரேலியா ஃபிகர் பார்ட்டிக்குக் கூப்பிடுதுன்னு கலர் கலரா ரீல் விட்டுட்டு அலையுது. அட! சேட்டுக் கட்டை வேணாம்..ஒரு நாட்டுக்கட்டை...ம்ஹூம்...

இவனைப் பத்தி இன்னும் கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கு. அது இன்னொரு எபிசோட்ல.
  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Tuesday, February 02, 2010

    மன்னாரு.. இன்னைக்கு நைட்டு , டீ - கடைய சீக்கிரம் மூடிட்டு ..
    .
    ஏன் தலை..
    .
    இல்ல .. ரெட்டை வாலுக்குக்கும் , வெளியூர்காரனுக்கும் , திருப்பவும் கட்ட பஞ்சாயத்து நடக்கப்போகுது..
    அப்புறம் , பக்கிரிகிட்ட சொல்லி கல்லாவை க்ளின் பண்ணச்சொல்லு..
    கன்பார்மா , இந்த தடவை 10,000 ரூபா வாங்கிடலாம்..
    .
    @வெளியூர்காரனுக்கு..
    அப்பவே சொன்னேன்.. இதயத்தில இடம் வேண்டாம்.. டம்மி போஸ்ட் ஏதாவது கொடுக்கலாமுனு..
    சொன்னா கேட்டுப் பழகுங்க .. அப்பு..


    @ரெட்டை வால்ஸ்
    உங்களுக்கு டெல்லி வரை செல்வாக்கு உள்ளது என தலைமைக்கு தெரிய வந்துள்ளதால் ,
    இன்றிரவு , பொதுக்குழு கூடி நல்ல முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம்...

  1. வெளியூர்க்காரன்

    Tuesday, February 02, 2010

    உஸ்.அப்பாடா...மாப்ள...நல்ல வேலை...நம்ம கூட வேலை பார்த்த பொண்ணு என் லவ் லேட்டர படிச்சு பார்த்துட்டு நீங்க என் பெரியப்பா மாதிரின்னு சொன்ன மேட்டர எல்லாம் நீ எழுதல. என் மானம் போயிருக்கும்...(டேய்..மயிறு...அது ஐட்டம்னு எனக்கு எப்டிடா தெரியும்..சினேகா டச்ச்ல இருந்தாலேன்னு அப்ரோச் பண்ணேன்...அவ நெஜமாவே சினேகா போலருக்கு...அதுக்கு நான் என்ன பண்ணுவேன்.அப்பறம் அந்த கிரெடிட் கார்டு பிகர் என் அழகு புடிக்காம கோச்சுகிட்டு போனத சொல்லிடான அந்த பய லோகு..யார்கிட்டையும் சொல்லிடாதடானு சரக்கெல்லாம் வாங்கி குடுத்தனேடா .ச்சே...இந்த பிரெண்ட்ஸ்சுங்களே இப்டிதான் பாஸ்...)

  1. அண்ணாமலையான்

    Tuesday, February 02, 2010

    என்ன வெளியூர் உள்ளூர்ல இப்டி மானம் பறக்குது..?

  1. வெளியூர்க்காரன்

    Tuesday, February 02, 2010

    அண்ணாமலையான் said...@என்ன வெளியூர் உள்ளூர்ல இப்டி மானம் பறக்குது..?////
    அங்குன பருப்பு வேகலைனுதான அண்ணாமலை சார் வெளியூருக்கு வந்து வெளியூர்காரனானோம்..இதுக்கே இப்டி சொல்றீங்க..மாப்ள எதோ மூட் அவுட்ல எழுதிருக்கான்....நல்ல மூட்ல குஷில எழுதிருந்தா இந்நேரம் நான் கடைய காலி பண்ணிட்டு ஸ்வீடன்ல இருக்கற என்னோட கேர்ள் பிரெண்டோட போய் செட்டில் ஆயிருக்க வேண்டியதுதான்.டோடல் டேமேஜ் ஆயிருக்கும்..நானே தப்பிச்சோம்டா சாமின்னு நேனைசுகிற்றுக்கேன் நீங்க வேற.... :)

  1. Rettaival's Blog

    Tuesday, February 02, 2010

    @ரெட்டை வால்ஸ்
    உங்களுக்கு டெல்லி வரை செல்வாக்கு உள்ளது என தலைமைக்கு தெரிய வந்துள்ளதால் ,
    இன்றிரவு , பொதுக்குழு கூடி நல்ல முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம்.../////

    யோவ் பட்டாபட்டி...பொதுக்குழுவுல அவனை நம்பாத...ஒரு லெமன் ஜூஸுக்காக நாட்டையே காட்டிக் குடுப்பான். உள்துறையாவது குடுங்கைய்யா..கை அரிக்குது!

  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Tuesday, February 02, 2010

    அடுத்த ப்ளாக்கர் யாரு ரெட்டை வாலு...

    ஆட்டோ எடுத்துட்டு வரேன்...

  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Tuesday, February 02, 2010

    வேல்... வேல் .. வீர வேல்...
    http://pattapatti.blogspot.com/2010/02/blog-post_728.html

Post a Comment