RSS

டுபாகூர் ஜோசியம் - ரெட்டைவால்ஸ்


ஜோசியத்துல ஏகப்பட்ட வகை இருக்கு.இது என்ன வகைன்னு எனக்கே தெரியாது.கீழ கொடுத்திருக்கிற 10 கேள்விகளையும் பொறுமையா படிச்சுட்டு எதாவது பதிலை முதலில் டிக் பண்ணிட்டு முடிவுகளுக்குப் போங்க.. சினிமா டைட்டில் கார்டுல போடுவானுங்களே " இது உண்மை சம்பவம் இல்லை"னு ...அதை மாதிரி இது உண்மை ஜோசியம் இல்லை.

அ) தக்காளி என்பது
1. சாப்பிட உபயோகிக்கும் பொருள்
2. ஒரு பிரபலமான கெட்டவார்த்தைக்கு சப்ஸ்டிட்யூட்
3. எப்படியும் விலை ஏறும்.அதை வச்சு கலைஞரை திட்டலாம்

ஆ) இளைய தளபதி என்பவர்
1. பன்ச் டயலாக் பேசி நோகடிப்பவர்
2. தானை தலைவன், அடுத்த முதல்வர் ஃபிளாப் படங்களின் போது கூட)
3. கலாய்க்க உபயோகப்படும் இன்னொரு ஜென்மம்.

இ) பதிவுலகம் என்பது
1. திரையுலகம், பத்திரிக்கை உலகம் மாதிரி ஏதோ ஒரு எழவு
2. வருவோர் போவோரையெல்லாம் நக்கல் பண்ண ஒரு நல்ல இடம்
3. வீட்டில் மனைவியை திட்ட முடியாததால் மற்ற எல்லோரையும் திட்டுவதற்கு தோதான இடம்

ஈ) ஃபாலோயர்ஸ் என்பவர்கள்
1. ஒரு குறிப்பிட்ட தலைவரை , தத்துவத்தை பின் தொடர்பவர்கள்
2. கிறுக்குப் பயலுக...என்னத்த எழுதுனாலும் படிக்கிறவங்கே
3. பொண்டாட்டியையும் திட்ட முடியாமல், வெளியாட்களையும் திட்ட முடியாமல் இன்னொருத்தன் கலாய்ப்பதை வெறிகொண்டு ரசிப்பவர்கள்

உ) உதார் என்பது
1. வெத்து சவுண்டு
2. எவ்வளவு மிதி வாங்கினாலும் அலட்டிக்காம பண்ணுவது
3. எல்லாப் பதிவுலயும் பண்ணுவது

ஊ) திரை விமர்சனம் என்பது
1. பத்திரிக்கைகளில் வருவது
2. மொக்கை படத்துக்கு முதல் நாள் கைக்காசை அழிச்சு போயிட்டு வந்து படம் எடுத்தவனை வண்டி வண்டியா திட்டுவது.
3. படமே பார்க்காமல் அப்பப்போ செய்வது

எ) மாமனார் என்பவர்
1.மனைவியின் அப்பா
2.உலகத்துலயே மகா ஏமாளி.நம்மளை நம்பியும் பொன்னு கொடுத்த , கொடுக்கப்போற அப்பாவி
3. மாமான்னா ஏட்டைய்யா...மாமனார்னா , வயசான ஏட்டைய்யாவா?

ஏ)இத்தாலி ராணி எனப்படுபவர்
1. அப்படி யாரையும் தெரியாது
2. இத்தாலி ராஜாவுக்கு மொத பொண்டாட்டி...(ராஜாவோட செகண்ட் ,தேர்டு இவங்க ஃபோட்டொவெல்லாம் எந்த வெப்சைட்டுல கிடைக்கும்?)
3. காங்கிரஸ் தலைவர்.இலங்கை தமிழர் பிரச்சினைல இருந்து சிந்தாதிரிபேட்டை பிக்பாக்கெட் கேஸ் வரைக்கும் கலாய்க்க உபயோகப்படுபவர்

ஐ) சாரு நிவேதிதா என்பவர்
1. தன்னைத் தானே அடிக்கடி எழுத்தாளர் என்று சொல்லிக்கொள்பவர்.
2. யாரு சார் அந்த ஃபிகரு..? நம்பர் கிடைக்குமா?
3. அட நம்ம சாணி... மவனே வா நீ...உன்னை போட்டு தள்றேன் இருடி!

ஒ) தமிழன்.....?
1. நாட்டில் எவ்வளவு பிரச்சினை இருந்தாலும் நமீதாவுக்கு அடுத்து யார் என்று யோசிப்பவன்
2. விஜய் படம். வக்கீலா வருவாப்லயே..!கரெக்டா?
3. தன்னை தான் ஓட்டறான்னு தெரியாமலேயே கமெண்ட் ஏரியாவுல கூட சேர்ந்து கும்மி அடிப்பவன்.

முடிவுகள்:

அனைத்து கேள்விகளுக்கும் எண் 3 ஐ டிக் செய்தவர்களுக்கு :

நீங்கள் அநியாயத்துக்கு நல்லவர்கள்.கிழிந்திருந்தாலும் பட்டாபட்டியை மட்டுமே அணிந்து கொள்வீர்கள்.உங்கள் ராசிக்காரர்களுடன் அன்பாயிருப்பீர்கள்.நீங்கள் அமர்ந்தபடி பீடி குடிக்கும் ஸ்டைலிலேயே எதிர்கால சந்ததியினர் உங்களுக்கு சிலை வைக்க வாய்ப்புண்டு.நக்கீரனிலோ தட்ஸ்தமிழிலோ ஏதாவது செய்தி படித்தவுடன் ரட்சகன் நாகார்ஜுன் மாதிரி உங்களுக்கு நரம்பு புடைக்கும்.இந்த உலகத்தையே மாற்றவேண்டுமென்று துடிப்பீர்கள்.ஆனால் அது உங்களால் முடியாது என்று தெரிந்தவுடன் நொந்துபோவீர்கள்.அப்பாவி மக்கள் மீது ரொம்பவும் கரிசனாமயிருப்பீர்கள்.குறிப்பாக தமிழ் அப்பாவிகள் என்றால் உங்களைக் கட்டுப்படுத்த முடியாது.இன்னும் மன்னராட்சியில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். எல்லாவற்றின் மேலும் வெறுப்பு வந்து ஓட்டலில் சர்வர் இட்லிக்கு தேங்காய் சட்னி ஊற்றினால் கூட அது கருணாநிதி குடும்பத்தின் அராஜகமாகத் தோன்றும் வாய்ப்பு இருக்கிறது.ஒரு நாள் கூட சும்மாயிருப்பது உங்களுக்குப் பிடிக்காது.அதற்கு தோதாக நித்தி , சாரு , ராமதாஸ் என உங்களுக்கு நூசு(?) கிடைத்துக் கொண்டே இருக்கும்.எதைப் பற்றியாவது கருத்து சொல்லவேண்டுமே என மனசு அடித்துக் கொள்ளும்.கமெண்ட் அடிப்பதில் நீங்கள் கில்லாடிகள்.ரெ,வெ என தொடங்கும் பெயர் கொண்ட ஆசாமிகளிடம் கவனமாக இருக்கவும்.அவர்கள் உங்கள் பட்டாபட்டியை உருவவும் வாய்ப்பிருப்பதால் நித்யானந்தாவின் ஸ்பெஷல் பூஜையில் கலந்து கொண்டு தோஷத்தை நீக்கவும்.
அதிர்ஷ்ட எண் : 1800-ங்கொய்யாலே
அதிர்ஷ்ட நிறம் : ஏதோ ஒரு கலர்.தெரிஞ்சு என்ன சாதிக்கப் போறீங்க?

எல்லாக் கேள்விகளுக்கும் எண் 2ஐ தேர்வு செய்தவர்களுக்கு :

ஜாலி பேர்வழியான நீங்கள் எதற்கும் அலட்டிக்கொள்ள மாட்டிர்கள்.எந்த அளவுக்கு என்றால் எதாவது ஒரு ஃபிகரிடம் செருப்பாலேயே அடிவாங்கினால் கூட "ஹீல்ஸ் ரொம்ப ஹார்டா இருக்கும்மா...உன் கால் வலிக்கப்போகுது " என்று கொஞ்சும் அளவுக்கு மானமுள்ளவர்கள்.அழகான ஜிகுடிகளை, அஜ்ஜும்மா,புஜ்ஜும்மா,உச்சிமாங்காளி என செல்லம் கொஞ்சுவதில் உங்களை மிஞ்ச ஆள் கிடையாது.வலிக்காத மாதிரியே நடிப்பதில் வல்லவர்கள்.உங்கள் ஏரியாவில் ஆண்கள் பின்னூட்டமிட வந்தால் உங்கள் முகம் சரக்கடித்து வாந்தி எடுத்தது போல் ஆகி விடும்.அவர்களை அடித்து விரட்ட ஆசைப்படுவீர்கள்.அதே சமயம்,சில பொன்னுங்க வந்து பின்னூட்டமிட்டால் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அவர்களுடன் ஸ்விட்சர்லாந்திலும் ஸ்பெய்னிலும் டூயட் ஆடிக்கொண்டிருப்பீர்கள்.எதற்குமே லாயக்கில்லாத வெத்து டோமர்களுக்கு ரசிகர்களாயிருப்பீர்கள்.அவர்கள் படம் எவ்வளவு மொக்கையானாலும் ஓடிவிடாதா என ஏங்குவீர்கள்.மாமனார் மேல் மிகுந்த அன்பு(?) வைத்திருப்பீர்கள்.வெறும் வாயில் உதார் விட்டு அடுத்தவனை சண்டைக்கு இழுப்பது உங்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு.ரசிக்கும்படியான புதிய புதிய கெட்ட வார்த்தைகளை கண்டுபிடிப்பீர்கள்.உங்களை யாராவது பாராட்டினால் அவனை கண்டமேனிக்கு ஓட்டுவீர்கள்.அதே சமயம் யாராவது உங்களை கலாய்த்தால் ரசிப்பீர்கள்.உள்ளூரில் நிறைய ஃபிகர்களிடம் ஒரு ரவுண்டு அடி வாங்கி முடித்துவிட்டு வெளியூர்காரனாக அடி வாங்க முடிவெடுத்துள்ளீர்கள்.நீங்கள் நினைத்தது நடக்கும்.
அதிர்ஷ்ட எண் : ஃபிகர்களின் ஃபோன் நம்பர்.
அதிர்ஷ்ட நிறம் : அந்த கருமத்தை பத்தி உங்களுக்குக் கவலையே கிடையாது.

எல்லாக் கேள்விகளுக்கும் எண் 1 ஐ தேர்வு செய்தவர்களுக்கு :

உங்களுக்கு சம்மந்தமில்லாத இடத்தில் வந்து ஜல்லியடித்துக் கொண்டிருக்கிறீர்கள்.போங்க..! போய் உருப்படியா உங்க ஜோலியை பாருங்க
****************************************************************************

பெருநகரத் தனிமைகள்



முகவரி அற்ற கடிதங்களின் தொகுப்பு

ஜன்னல் வழி பறக்க எத்தனிக்கும் காகிதங்கள்

கனவுகளில் முட்டி மோதும் நினைவலைகள்

மையப்புள்ளி விலகிகொண்டே இருக்கிறது

அறை முழுக்க பரவி வரும் தனிமை

தனிமை மறக்க நிகழும் சந்திப்புகள்

சந்திப்புகள் தரும் அலுப்பு

அலுப்புகள் தரும் அனுபவங்கள்

ஊடுபாவும் ஒற்றைக் கதிரின் சலனம்

டம்ளரில் அடங்கிவிடும் தண்ணீர்

ஒளிவிலகல் பற்றிய எவனோ ஒருவனின் குறிப்புகளில்

மனவிலகல் பற்றியும் ஏதேனும் இருக்கக்கூடும்...

முன்னிரவு தரும் போதை

பின்னிரவு தரும் தத்துவம்

அதிகாலை தரும் ஆர்ப்பரிப்புகள் என

பெருநகரத் தனிமைகள் யாவும் பிரசித்தி பெற்றவை!

***************************************************************************