ஜக்குபாய் - ஒரு கண்ணீர் காவியம்


சரத்குமாரை நினைச்சா கண்ணீர் தாரை தாரையா ஊத்துது...பின்னே என்னங்க..இந்தப் படத்தையாடா நெட்ல ரிலீஸ் பண்ணீங்க? புதை குழிக்குள்ள விழறதுக்கு அப்படி என்ன அவசரம்?

சரி போகட்டும் விடு..நம்ம கதைக்கு வருவோம். படம் முடிஞ்ச உடனே விவாதக்குழுன்னு ஒரு நாலு பேரோட பேர் போட்டானுக... விவாதம் பண்ணானுகளா இல்லை ப்ரொட்யுசர் காசுல உக்காந்து எகத்தாளம் பண்ணானுகளான்னு தெரியலை.

ஹீரோ ஹீரோவோட பொண்டாட்டி, கவுண்டமணி இன்ட்ரொடக்ஷன் எல்லாம் முடியறதுக்குள்ளேயே நமக்குக் கண்ணெல்லாம் இருட்டிக்கிட்டு வருது...அப்புறமா இந்த ஷ்ரியா.. தமிழ் சினிமால வர்ற அக்மார்க லூஸூ..அம்மாவோட பொணத்தை வீட்ல போட்டு பப் ல வந்து போதையைப் போட்டு ஆடுது..அடடா..என்ன மேதைங்கடா நீங்க.அப்புறமா கொஞ்சம் சண்டை கொஞ்சம் சென்டிமெண்ட் ஒரு பாட்டு அப்புறமா திரும்ப ஒரு சண்டைனு இந்த நூற்றாண்டிலேயே ரொம்ப வித்தியாசமான படம் இது தான்.

வில்லன் காமெடி பெருங்காமெடி. கடத்தல் கார வில்லன் எப்படியிருப்பான்னு எம்.ஜி.ஆர் படம் போட்டுப் பாத்திருப்பாய்ங்க போல..சை! உங்களையெல்லாம் ஏண்டா சுனாமி தூக்கலை! எடிட்டிங் பண்ணவருக்கு டைரக்டர் மேல என்ன கோவம்னு தெரியலை, சும்மா தமாஷ் பண்ணிருக்கார்.

மியூசிக் எல்லாம் ரொம்ப கஷ்டம் பாஸ்! செகண்ட் ஹாஃப்ல ரொம்ப போர் அடிச்சதுனால தலைகளை எண்ணிக்கிட்டு இருந்தேன். மொத்தமா தியேட்டர் ல 36 பேர் இருந்தோம். நடுவுல எந்திரிச்சுப் போனவங்களையும் சேத்து தான் 36 பேரு. கே.எஸ்.ரவிகுமார் கமல் படங்கள்ல வேலை பார்த்துட்டு இயக்கம்னு பேரை மட்டும் போட்டுக்கலாம். கஷ்டபட்டு டைரக்ஷன்லாம் செஞ்சு நம்மளையும் சோதனை பண்ணி....

சரத்குமார் தான் ரொம்ப பாவம்..கட்சி போணியாகாம நடிக்க வந்தா சனீஸ்வர பகவான் கே.எஸ்.ஆர் ரூபத்துல சீட் பெல்ட் போட்டு பக்கத்தில் உக்காந்துருக்கார் போல.. கவுண்டமணி ரொம்பக் கஷ்டப்பட்டு அப்பப்போ சிரிக்க வைக்கிறார். ஆனா சரத்தோட மாமனார் சாகும்போதும் அவர் வொய்ஃபா வர்றவங்களும் 'நடிக்கும்போது' நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார்கள்

நாங்கதான் நீங்க மரத்தடில உக்காந்து தீர்ப்பு சொல்றா மாதிரி படம் எடுத்தா நூறு நாள் ஓட்டுறோம்ல..அப்புறம் ஏன்யா ஏன்?

. Bookmark the permalink.

10 Responses to ஜக்குபாய் - ஒரு கண்ணீர் காவியம்

  1. அட.. இதுக்குத்தான் ராதிகா மேடம்,
    கண்ண கசக்கிட்டு அழுதாங்களா?...
    உடுங்க மேடம்.. அடுத்த படத்த நாம
    எடுக்காமலேயே ரிலிஸ் பண்ணிடலாம்...

  2. அட மானம்கேட்டவனே..இத நீ தியேட்டர்ல வேற போய் பார்த்தியாடா..நான் போன வாரமே சப் டைட்டிலோட பார்த்துட்டேன்..

  3. தனியா சிக்குவேனா...இன்னொரு கோழியும் சிக்கிச்சு...ராதிகாவைப் பார்த்து ஒரு கேள்வி கேட்கணும் டா..

  4. தமிழ் பதிவர்கள் யாரும் ஏன் இந்த "தத்துவ படத்தை" கண்டுக்கலை என இப்போ தான் (போன பதிவில்) எழுதினேன். இவ்ளோ கஷ்ட பட்டுடீன்களா? ஆனா செம காமெடியா எழுதி இருக்கீங்க

  5. ஹலோ மோகன் இந்தப் படத்தை பார்த்த கொஞ்ச பேர்ல நீங்களும் ஒருத்தரா..அப்பாடா...நான் தனி ஆள் இல்ல...

  6. ரெட்டை..
    //சலாமியா தேசத்து மன்னர் என்னை சந்திக்க வந்துள்ளதால் பட்டாபட்டி பற்றிய அரிய தகவல்களோடு இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு பிரஸ் மீட்டில் சந்திக்கிறேன்.//

    யோவ்.. மன்னனான பக்கத்து தேசத்து மன்னர்களை மீட் பண்ணுவன பாத்தா,
    போயி லோக்கல் நாட்டாமைய பாத்துட்டு வந்துருக்கே..

    மகளிர் அணி 'Singapore Lion Dance ' ஆட வந்துகிட்டு இருக்காங்க மன்னரே.....

  7. வாலு தியேட்டர்ல பாத்திகளா? இதுதான் சொந்த செலவில் சூன்யம் வெச்சுக்கறது.
    என்னோட பத்து வயசு பையன் குட எவ்வளவு கெஞ்சினாலும் முழுசா பக்க மாட்டேன்னுட்டான்.

  8. நீ வேற ஏன்யா வயித்தெரிச்சலை கொட்டிக்கிற,,? சொந்த செலவுல சூன்யம் இல்லை சூன்யத்தோட தாத்தாவை வச்சிகிட்டேன்

  9. கனிஸ்டன் says:

    ஏன் ஏன்டா இப்படி ஒரு டார்சர் ??.....

  10. jakku boy sariyana makku boy.........

Facebook Share