கிருஷ்ணா கிருஷ்ணா...A tale of Past Present and Future!



கிருஷ்ணன் என்றதும் உங்கள் ஞாபக செல்களில் என்னவெல்லாம் ஓடுகிறது? வெண்ணை திருடுபவன், விளையாட்டுப் பிள்ளை, குருக்ஷேத்திரத்தின் சூத்திரதாரி, கோபிகைகள்,பிருந்தாவனம், மதுரா.

உப பாண்டவத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் நம்மை புனைவுக்குள் அழைத்துச் சென்றது போல கிருஷ்ணா கிருஷ்ணா எனும் இக்குறுநாவலில் புனைவிலிருந்து வந்து நம்முடன் உரையாடுகிறார் இந்திரா பார்த்தசாரதி.இது நாள்வரை புராணங்களின் மீதும் இதிகாசக் கதைகளின் மீதும் வைத்திருந்த அபிப்பிராயத்தை லேசாக அசைத்து விடுகிறது இந்நாவல். கிருஷ்ணனின் பால்யம், வாலிபம், அரசியல், முக்கியமாக கிருஷ்ணனின் அந்திம பொழுதுகளை கற்பனையோடோ அல்லது நிஜமாகவோ விவரிக்கிறது இந்நூல்.வாழ்க்கைக் குறிப்பாக அல்ல...சில பல தர்க்கங்களோடு.

ஜரா எனும் வேடனிடம் கிருஷ்ணன் அம்பெய்தப்படும் சூழ்நிலையில் கிருஷ்ணன் ஜராவிடம் தன் Auto-Biography யாக சொல்லும் விஷயங்களை வேடன் நாரதரிடம் கூறி நாரதர் நம்மிடம் உரையாடுவதாக எழுதப்பட்டிருக்கிறது. யாதவர்களின் முடிவும் மதுராவின் துரதிர்ஷ்டமும் இன்னும் பல நிகழ்ச்சிகளுக்கு காரண காரியங்கள் புராணங்களிலேயே விவரிக்கபட்டிருக்கும். ஆனால் அதன் உண்மையான அர்த்தம் காண விழைவதே புனைவின் சுவாரஸ்யம். உதாரணமாக சம்பவாமி யுகே யுகே என்று நம் சமூகத்தில் அடிக்கடி ஒரு வார்த்தை உதிக்கக் கேள்விபட்டிருப்பீர்கள்.அதாவது எங்கே அதர்மம் தலை தூக்குகிறதோ எட்சட்ரா எட்சட்ரா..நான் மீண்டும் வருவேன் என்று.அதன் மறு அர்த்தம் கிருஷ்ணனாகிய நான் எடுத்த அவதாரத்தை அந்தந்த காலங்களுக்கு ஏற்ப நீங்களே அர்த்தப்படுத்திக் கொள்ளுங்கள் என்பது தான்.இப்படியாக இ.பார்த்தசாரதி காட்டும் உள்ளர்த்தங்கள் நிறைய.

கிருஷ்ணன் நினைத்திருந்தால் குருக்ஷேத்திரமே நடந்திருக்காதே. எதற்காக அர்ஜுனனுக்கும் கர்ணனுக்கும் விஸ்வரூபத்தைக் காட்டி நமக்குக் கதை சொல்ல வேன்டும். இதெல்லாம் நீண்ட நாள் விடையில்லாமல் மனதை அரித்துக் கொண்டிருந்த கேள்விகள். அதற்கான விடையை கிட்டத்தட்ட நெருங்கியிருக்கிறது 'கிருஷ்ணா கிருஷ்ணா'.

Political Strategies எப்படி யுகம் யுகமாக ஆளுங்கட்சியையும் எதிர்க்கட்சியயும் அலைக்கழித்திருக்கிறது என்பதையும் அநாயசமாக விவரிக்கிறது இந்நூல். எல்லோருக்கும் பிடித்தமானவனாக கிருஷ்ணன் ஏன் அரசனாக இருக்க விரும்பவில்லை என்ற கேள்விக்கான பதில் அவன் வாழ்க்கையாக இருக்கிறது. கீதை எப்பொழுது பிறந்தது என்பதை நாம் அறிவோம். என்ன மாதிரியான சைக்கிக் டென்ஷனில் உருவானது என்பதையும் இ.பா அவருடைய மொழியில் அலசியிருக்கிறார்.

கடமையை செய்.பலனை எதிர்பாராதே என்பதன் உள்ளர்த்தம் யோசிக்க வைக்கிறது. அர்ஜுனனுக்கு ஏற்படும் Existentialistic Dilemmaவிலிருந்து அவனை காப்பாற்றி ஒரு போரை உருவாக்கி எதை விளக்குகிறான் கிருஷ்ணன்? எல்லாம் மாயை என்பதையா?.கிருஷ்ணனின் வாழ்க்கையில் இன்றைய அவசர உலகின் ஆதார கேள்விகளுக்கு பதில் தரும் சுவாரஸ்யத்தை எட்டிபிடித்திருக்கிறார் இ.பா. கிருஷ்ணனை ஒரு சமுதாயக் கனவு என்று அறிவித்துவிட்டே நாரதரை நம்முடன் உரையாட விட்டிருக்கிறார்.நாரதரும் தேவ பாஷையில் பேசுவதில்லை.நம் மொழியிலேயே பேசுகிறார்.அவரது உரையாடலில் இண்டர்நெட் வருகிறது.Weinberg வருகிறார். போருக்காக தூது செல்லும் கிருஷ்ணனை Ambassador at Large என்றழைக்கிறார்.

மிகவும் ஆச்சரியப் பட வைத்த விஷயம், கிருஷ்ணனின் முடிவு. தன் அந்தியில் பிரியத்துக்குரிய ராதாவை தேடிச் செல்கிறான் கிருஷ்ணன்.பால்யத்தில் ராதாவுடனான லீலைகள் திரும்பவும் நடுக்குமா என்ற நப்பாசையில்.எல்லாம் தலைகீழாக இருக்குமென்ற எதிர்பார்ப்புடன் செல்பவனுக்கு அங்கே ஆச்சரியம்.சிறுவர்கள் குழலூதிக்கொன்டிருக்கிறார்கள்.எல்லோரும் கிருஷ்ணனாக மாறிவிட்டிருக்கிறார்கள். கிருஷ்ணனும் குழ்லூத முயற்சிக்கிறான். இசை வருவதில்லை. அங்கு ராதாவை வயாதான மூப்படைந்தவளாகப் பார்க்கத் தைரியமில்லாமல் ஜராவிடம் அம்பை (மரணத்தை) வாங்கிக் கொள்ள காட்டுக்குத் திரும்புகிறான். கிருஷ்ணனின் வாழ்க்கை இவ்வளவு சுவாரஸ்யமா என்று வியப்படைய வைக்கிறது இ.பா வின் புனைவு. கிருஷ்ணா கிருஷ்ணா சமுதாயக் கனவின் சமகால நீட்சி என்பதோடல்லாமல் வருங்காலத்துக்குமான புனைவுமாகிறது.

வரலாற்றிலிருந்து கொஞ்சமாக விலகி சரடு விடுவதை விட கஷ்டமானது புராணங்களிலிருந்து Logic ஐ எடுத்து நம்மை தர்க்கிக்க வைப்பது.

கிருஷ்ணா கிருஷ்ணா is that kind of one.

. Bookmark the permalink.

11 Responses to கிருஷ்ணா கிருஷ்ணா...A tale of Past Present and Future!

  1. நான் தூத்துக்குடிகாரன்யா.இப்போ சென்னைல தான் இருக்கேன்.இந்த சலம்பலு அங்க இருந்து வந்தது தான்.

    //அதே மாதிரி நம்ம பயலையும் உள்ள புடிச்சுப் போட்ருவோம் என்ன சொல்லுத?//

    இதை நான் வழிமொழிகிறேன்.அட்லீஸ்ட் பதினாலாம் தேதி மட்டுமாவது அந்த பன்னாடைய உள்ள தூக்கி போடும் மன்னரே.....
    கழுத,பிகுரே இல்லாம அது பண்ற அலும்பு தாங்கல...

  2. வெளியூரு.. நான் அப்பவே சொல்லலே..
    மன்னரு புராண காலத்துக்கு போயிட்டாரு..
    போட்டு தள்ளிட்டு ஆட்சியப் பிடிக்கலாமுனு...

    ( நீரு விமானம் வாங்கப் போறீரு.. மன்னரு வில்லு, அம்பு காலத்துக்கு போயிட்டு இருக்காரு)

    என்னய்யா நடக்குது?

  3. நம்ம மகளிர் அணிக்கு , டிரஸ் கோட் மாத்தலாமுனு பார்த்தேன்..
    எவ்வளவு நாளக்குத்தான் , புடவையிலே போகச்சொல்லுவது..

    சினிமாக்காரிக மாறி , டிரஸச மாத்தனும் அப்புகளா..

  4. Excellent buddy..Classic review..Write something on Ubapandavam..Eager to read that in your words... :)

  5. @வரலாற்றிலிருந்து கொஞ்சமாக விலகி சரடு விடுவதை விட கஷ்டமானது புராணங்களிலிருந்து Logic ஐ எடுத்து நம்மை தர்க்கிக்க வைப்பது...///
    Engada pudikkara intha vaarthaigalayellaam...Enakku kedaikka matenguthu..thargikka vaippathunaa justify panrathaa...???

  6. @கிருஷ்ணனின் வாழ்க்கை இவ்வளவு சுவாரஸ்யமா என்று வியப்படைய வைக்கிறது இ.பா வின் புனைவு. கிருஷ்ணா கிருஷ்ணா சமுதாயக் கனவின் சமகால நீட்சி என்பதோடல்லாமல் வருங்காலத்துக்குமான புனைவுமாகிறது.///
    நெஜாமவே நல்லாருக்கா..?.இல்ல வழக்கம் போல வக்காலத்து வாங்குரியா...நம்பி வாங்கலாமா மச்சி...?...ராமாமிர்தம் மாதிரி குழப்பி விட்ற போறாரு மச்சி இந்திரா...எனக்கு எஸ்.ராமக்ரிஷ்ணனுக்கே மூச்சு எரைக்கும்....!! :)

  7. Engada pudikkara intha vaarthaigalayellaam...Enakku kedaikka matenguthu..thargikka vaippathunaa justify panrathaa...???/////

    தர்க்கம் பண்ண வைப்பது...அல்லது விவாதம் பண்ண வைப்பது.

  8. நல்ல அறிமுகம்.

  9. this is suitable topic for aathmaa too.thambi nee oru pala pattadai chokkanathar ...............

  10. dei ennada aachu unakuthideernu ippadi thathuvama alli viduraye un appa romba thititaro

  11. ரெட்டைவாலின் முதல் வால் எனக்கு ஏற்கனவே பரிச்சயம். இரண்டாவது வாலைப் பற்றியும் தெரிந்துகொண்டேன். :-)

    புத்தகங்கள் நிறைய வாசிக்க வேண்டும் என்று நினைத்து மிகக் குறைவாகவே வாசித்து வருகிறேன். :-(

    சென்னை வரும்போது சந்திக்கிறேன் நண்பா.

Facebook Share