RSS

My name is Khan & கலைஞரின் பன்ச் சாங்




கரண் ஜோஹர் டைரக்ஷனில் ஷாருக் நடித்தால் பாடல்கள் எப்படி இருக்கும் என்று ஒரு உங்களுக்கே ஒரு யூகம் இருக்கும். அதில் இம்மி பிசகாமல் பாடல்களை கொடுத்திருக்கிறார்கள் ஷங்கர்- எசான் - லாய். குச் குச் ஹோதா ஹையில் வரும் துஜே யாத்ன மேரி போல் இங்கே சஜ்டா என்றொரு பாடல். ஜோதா அக்பரில் வரும் க்வாஜா பாடலை கொஞ்சம் தொட்டு சென்றிருக்கிறார்கள்.ரஹத் ஃபதே அலி கான் பாடியிருக்கிறார்.பிரபல நஸ்ரத் ஃபதே அலி கானின் மருமகனாம். தேரெ நெய்னா என்ற பாடலை வேறு எந்த ஷாருக் படத்துக்குள்ளும் நுழைத்து விடலாம். அவரும் அதே போல் தலையை ஆட்டி ஆட்டி ஆடப் போகிறார்.
அட்னன் சாமியும் ஷங்கர் மகாதேவனும் பாடியிருக்கும் நூர்-ஏ-குதா என்ற பாடல் தான் கிளாஸ்.இரண்டாவது முறை கேட்கும் போதே உருக்குகிறது. அட்னான் சாமி குரலில் என்னத்தைத் தடவி பாடுகிறார் என்று தெரியவில்லை. இவரை அதிகமாக தமிழில் பயன்படுத்த மாட்டேன்கிறார்கள். பிறகு அல்லா ஹி ரஹெம் என்று ரஷீத் கான் பாடிய பாடல். படத்தோடு பார்த்தால் ரசிக்க முடியும். சூரஜ் பாடலின் ஸ்டைலயும் பீட்டுகளையும் நிறைய ஆங்கிலப் படங்களில் பார்த்திருக்க முடியும்.ஸ்ட்ரிங்ஸில் குழையும் தீம் ம்யூசிக் அருமை. எல்லாமே அக்மார்க் ஷாருக் பட பாடல்கள்.
ஷாருக் கஜோல் கரண் என்று மெகா வசூல் படங்களை கொடுத்த கூட்டணி.சாதாரணமாவே ஷாருக் கொன்சம் உணர்ச்சி குவியல்.இதில் ஆட்டிஸம் வந்தவராக வேறு நடிக்கிறார். படத்தின் ஸ்டில்களையும் ட்ரெய்லரையும் பார்த்தால் சென்டிமென்ட் கடலில் மூழ்கடித்து விடுவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.லேசாக Forrest Gump வாடையும் அடிக்கிறது. My name is khan தீவிர ஷாருக் கஜோல் ரசிகர்களுக்காக ஷங்கர் எசான் லாய் கொடுத்திருக்கும் கஸாட்டா ஐஸ்கிரீம்.

***************************************************************************************



வா வா தலைவா என்றொரு பாடல். ஹாரிஸ் ஜெயராஜ் இசை. உன்னி மேனன் ஹரி சரண் என்று வழக்கமாக ஹாரீஸின் இசையில் கௌதம் மெனன் படத்தில் பாடுவது போல் ஒரு பாடலை பாடியிருக்கிறார்கள்.மைக்கேல் ஜாக்ஸன் விஜயலக்ஷ்மி நவனீதகிருஷ்ணன் பாடல்களைப் பாடினால் எப்படி இருக்கும் ? அப்படி முதல்வரை வாழ்த்தி ஒரு பாடல் . விஜய் அஜித் எல்லாம் தோற்றுப் போவர்கள். அப்படியொரு ஓபனிங் சாங் நம் முதல்வருக்கு.கருமம் நம் சமூகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்று நினைத்தால் பயமாக இருக்கிறது. ஒரு மனிதருக்கு எவ்வளவுதான் பாராட்டுதல்கள் பிடிக்கும். அவருக்கே சலிப்பு தட்டாதா.. இல்லை புகழ்பவர்களுக்குதான் கொஞ்சம் கூட கூச்சமே இருக்காதா? உங்களுக்குப் பாராட்டு விழாவும் பஞ்ச் பாடல்களும் போட்டுக் குஷிப்படுத்தினால் தான் வேலைக்கு ஆகுமென்றால் பொதுமக்களாகிய நாங்கள் என்ன செய்யவேண்டும் கலைஞரே?
  1. Anonymous

    Friday, February 12, 2010

    எங்க தலைவர எல்லாரும் புகழ்ந்து பாடினாத்தான் அவரு இளமை நல்ல முறையில் கழிந்து.... இன்னும் பல ஆண்டுகாலம் வாழ்வாராம். இது அவரின் குடும்ப மருத்துவர் சொல்லியது... எந்த குடும்ப மருத்துவர் என்று கேட்ககூடாது.

    அவருக்கு இருக்குற வியாதிகளுக்கெல்லாம் இது தான் மருந்து. இவங்க புகழ்ந்து பாடலையினா, எங்க மதுரை அண்ணன் சினிமாக்காரங்களுக்கு ரெண்டு கையும் இல்லாம் பாத்துடுவாறு...

  1. அழகிரி

    Friday, February 12, 2010

    அவருக்கு இன்னொரு பொண்ணு பார்த்துக்கிட்டு இருக்கம். அதுக்குள்ள என்ன உங்களுக்கு பொறாமை?

  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Friday, February 12, 2010

    பொதுமக்களாகிய நீங்கள் 9 ஓட்டைகளையும்
    அடைத்துக்கொண்டு ,
    கடினமாக வேலை செய்து ,
    பொருளாதார நிலையை( சத்தியமா தமிழகத்திற்கு ).. மேம்படுத்த
    பாடுபடவேண்டும்..

  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Friday, February 12, 2010

    ஏய்யா.. இவ்வளவு பெரிய மாலை போடுறீங்களே..
    அவருக்கு முதுகு வலி வராம என்ன பண்ணும்?

  1. sakthivenkat

    Friday, February 12, 2010

    ஜால்ரா போட்டாதான் பொழப்பு நடத்த முடியும். முக்யமா இதனை கமல் நன்கு உணர்ந்து உள்ளார்.( விழாவில் கமலுக்கு கண்கள் பனித்ததாமே அப்ப யாருக்கு இதயம் இனித்ததோ?)

  1. வெளியூர்க்காரன்

    Friday, February 12, 2010

    எவ்ளோ அழகான இசை விமர்சனம்...தரமான வார்த்தைகளோட...அத பத்தி யாருமே பாராட்டி எழுதல பார்த்தியா...நான் உன்கிட்ட சொல்லல தரமான எழுத்துக்களுக்கு வாசகர்கள் கம்மின்னு...எல்லாருக்கும் கீழ இருக்கற கலைஞர் பத்தின வரிகள்தான் தெரிஞ்சிருக்கு....வருந்தத்தக்க உண்மை மச்சி...இந்த பதிவுக்காக சொல்லல.....நல்ல வாசகர்கள் நல்ல எழுத்துக்கள வாசிக்க மறுக்கறாங்க...நான் வாசிச்ச மிக சிறந்த தரமான பதிவுகள் எல்லாத்துலயும் பின்னூட்டங்கள் குறைவா இருந்துருக்கு, அல்லது பின்னூட்டங்களே இல்லாம இருக்கு.....என்ன எழுதறதுன்னு தெரியாம விடறாங்கள...இல்ல வாசிக்க புடிக்காம அசல் விமர்சனம் பத்தி படிக்க போயிட்ராங்கலான்னு தெரில...இத பத்தி ஒரு பதிவு எழுதுடா...என் சின்ன வேண்டுகோள்...நல்ல பதிவு...இசை ரசனை உள்ளவங்களுக்கு ரொம்ப புடிக்கும்.. :)

  1. Rettaival's Blog

    Friday, February 12, 2010

    My name is khan பற்றி விவாதிக்க ஒன்றுமில்லை என்பது தான் எனது கருத்தும். ஆனால் வாழ்த்துப் பாடலை விமர்சிக்கத்தான் நானும் விரும்புகிறேன். ஹீரோயிசத்தின் மேல் உள்ள பிடிப்பை மாநிலத்தின் தலைவரும் காப்பாற்றி வருகிறார் என்றால் விஜய்களையும் சிம்புக்களையும் கிண்டலடித்து என்ன பிரயோஜனம்?

  1. வெளியூர்க்காரன்

    Friday, February 12, 2010

    எவ்ளோ நேக்கா டாபிக்க மாத்துனாலும் கலைங்கர விட மாட்ரீங்கலேடா...ச்சே...என் தலைவன் வரலாருடா...வரலாறா எல்லாரும் வாழ்த்தி பாடறாங்க..இதுல என் ஓய் உமக்கு வைத்தெரிச்சல்...தலைவர்ட்ட சொல்லி ப்ளாக் எழுத்தாளர்கள விட்டு ஒரு பாராட்டு விழா நடத்த சொல்லணும்..பாராட்ட வரலைனா ப்ளாக தடை பண்ண சொல்லணும்...அப்பதண்ட நீங்கல்லாம் அடங்குவீங்க...ஒரு ரூவைக்கு அரிசி குடுத்து ஏழைங்களோட பசிய தமிழ்நாட்லேர்ந்து ஒழிச்ச என் தங்க தலைவன எவ்ளோ பாராட்னாலும் தகும்...இதே பத்தாதுங்கறேன் நான்..!!

  1. வெளியூர்க்காரன்

    Friday, February 12, 2010

    @ஹீரோயிசத்தின் மேல் உள்ள பிடிப்பை மாநிலத்தின் தலைவரும் காப்பாற்றி வருகிறார் என்றால் விஜய்களையும் சிம்புக்களையும் கிண்டலடித்து என்ன பிரயோஜனம்?.////
    அழகிரி அண்ணனுக்கு எஸ்எம்எஸ் பண்றேன்...நீ இப்டி எழுதுனேன்னு... !!

  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Friday, February 12, 2010

    வெளியூரு.. திருந்திட்டீரா?..
    ஒரே அட்வைஸ் மழையாயிருக்கு..

    உடம்பு சரியில்லையினா சொல்லுங்க அப்பு.. நாங்க வந்து பார்க்கிறோம்..
    பி.கு..

    அழகிரிக்கு SMS அனுப்பு விரும்பினால, அழகுத் தமிழில் அனுப்பிமாறு கேட்டுக்கொள்கிறேன்..

  1. ILLUMINATI

    Friday, February 12, 2010

    //Hi Guys..Sorry...Held up with tremendous Work pressure..Catch you back very soon...//

    அது என்ன வேலைன்னு எங்களுக்கும் தெரியும் ஓய்......
    14 க்குள்ள ஒரு பிகற மடிச்சுரனும்னு நீரு ஆபீசுக்கு லீவ் போட்டுட்டு தெரு தெரு சுத்துறதா கேள்விப்பட்டேன்?உண்மையா வெளி?

    //வெளியூர்காரனுக்கு பொண்ணு கெடைக்கலன்னு பொதுவுல சொல்லி மானத்த வாங்கதையா யோவ்...//

    ஊருக்கே தெரிஞ்ச உண்மைய போதுவுல சொன்னா என்ன?தனியா சொன்னா என்ன?

    ///பொண்ணு சீனாவா? கொரியா ?///

    //யாருப்பா அது ..கேப்ல கலாசறது..ச்சே...வெளியூர்காரன திருந்தி அமைதியா வாழ விட மாட்டாங்கே போலருக்கு...என்ன கொடுமை குசேலா.. //

    யோவ்!நீரு விரக்தியில சுத்துறதுக்கு பேரு திருந்தி வாளுரதா?உம்ம அலும்புக்கு ஒரு அளவே கெடையாதா?

    ஆங்!எல்லாரும் உசாரா இருந்துக்கங்க அப்புகளா.......
    அடுத்த பதிவு ரெடி ஆகிட்டே இருக்குது.....
    பட்டு சார்!உங்க ஆர்வம் என்ன புல்லரிக்க வைக்குது சார்.
    ஆட்டோட தலைய வலுக்கட்டாயமா பிடிச்சு வெட்டுவாய்ங்க பாத்துருக்கேன்.ஆடே இப்டி ஆர்வமா தலைய நீட்டி இப்போ தான் பாக்குறேன்......

  1. Thameez

    Friday, February 12, 2010

    Rahet Fateh ali is SON of Nusrat Fateh not Marumagan as said

  1. அஹோரி

    Friday, February 12, 2010

    அதுகளுக்கு சூடு சுரணை இருக்குமா ?

  1. Rettaival's Blog

    Saturday, February 13, 2010

    Thameez said...
    Rahet Fateh ali is SON of Nusrat Fateh not Marumagan as said
    ////////////////////////////

    It was told by my friend. wikipedia also confirms the same.Any body please give the right information here if u know

  1. Rettaival's Blog

    Saturday, February 13, 2010

    அஹோரி said...
    அதுகளுக்கு சூடு சுரணை இருக்குமா ?
    //////////////////////////////////
    சுரணையா..அதெல்லாம் இருந்திருந்தா சினிமாக்காரர்கள் பாராட்டும் போதே போய் நல்ல படம் எடுங்கடா என்று அனுப்பிவிட்டிருப்பாரே...
    *********************************************
    அழகிரிக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புபவர்கள் கவனத்துக்கு...நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஒரு 3 நிமிடம் வேஸ்ட் செய்கிறீர்கள் அன்பர்களே...போய் நிம்மதியாக வாலன்டைன்ஸ் டே கொண்டாடுங்கள்.

  1. மாயாவி

    Saturday, February 13, 2010

    //சுரணையா..அதெல்லாம் இருந்திருந்தா சினிமாக்காரர்கள் பாராட்டும் போதே போய் நல்ல படம் எடுங்கடா என்று அனுப்பிவிட்டிருப்பாரே...//

    கருணா(நாய்)நிதிதான் யாராவது பாராட்றாங்க அப்படீன்னா வேட்டியை உருவுறதுகூட தெரியாம ஆஆஆன்னு வாயை பொளந்துகிட்டு இருக்கிற ஒர் ஆளாச்சே!!

  1. கனிஸ்டன்

    Sunday, February 14, 2010

    தம்பி வாழ்க தமிழ் வாழ்க என் குடும்பம் என்ரு ஆடம்பரம் விரும்பாத அவர ,, ச்சை

  1. senthilkumar

    Sunday, February 14, 2010

    kalaignarukku kidaikkum paarattu evvalavu athigamo kidaikku thittukkalum athigam {watch jaya news daily} ambathu varusa arasille ithellam satharanamappa......anju thadavai chief minister anthukkapparam thitto paratto pazhagipona visayam avrukku.

  1. Anonymous

    Wednesday, March 03, 2010

    My name is Khan - Very Nice Film. everyone must see this film. Still house full shows in Dubai and Germany

Post a Comment