RSS

ரெட்டைவால்ஸின் பிரஸ் மீட்.


சலாமியா தேச மன்னருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்ட கையோடு ரெட்டை வால்ஸ் அளித்த பிரஸ் மீட்டின் சிறப்புப் பகுதிகள்..இதோ...

தினக் குசும்பு நிருபர் : நீங்க எப்போ மன்னரானீர்கள்?

ரெட்டைவால்ஸ் : பட்டாபட்டியை கைது செய்வதுடன் என் பணி நின்றுவிடவில்லை. மக்களைக் காப்பாற்ற மீண்டும் எமெர்ஜென்ஸி கொண்டு வரலாம் என நினைத்தேன். அதை விட மன்னராட்சியே பெட்டர் என்று வெளியூர்காரன் சொன்னதால் நானே மன்னராகி விடுவது என்று முடிவு செய்து விட்டேன்.

தி.கு நிருபர் : பட்டாபட்டியின் கதி என்ன?

ரெ.வா : பட்டாபட்டிக்கு லிம்ஃபோசாடயரியகோமா வந்துவிட்டதால் அவரை மெண்டல் ஹாஸ்பிட்டல் அனுப்பிவிட்டோம். கிளின்டன் மோனிகாவெல்லாம் அவருடன் பேசுவதாக நினைத்துக் கொண்டுள்ளார். விட்டா என்.டி.திவாரிக்கு சரக்கு சப்ளை பண்ணேன்னு கூட சொல்வார். பட்டாபட்டி மெண்டலானது காலத்தின் கட்டாயம்...

தி.கு.நிருபர் : வெளியூர்காரனை என்ன செய்தீர்கள்?

ரெ.வா : அவன் தானங்க இப்போ ராணுவ தளபதி( சே! அவனையும் சீக்கிரம் போட்டு தள்ளணும்..இல்லாட்டி என்னிக்காவது பொது வேட்பாளரா நின்னு உயிரை வாங்குவான்)

தி.கு. நிருபர் : மக்களுக்கு என்ன சொல்ல வற்ரீங்க?

ரெ.வா : போய் புள்ளகுட்டியை படிக்க வைங்க என்பது பழைய டயலாக்காக உள்ளதால் ...போய் சரக்கைப் போட்டு சாய்ஞ்சிடுங்க..

தி.கு நிருபர் : பட்டபட்டி அணிந்திருந்த பட்டாபட்டியை என்ன செய்தீர்கள்?

ரெ.வா :அதை ஆராய்ச்சி செய்த நம் விஞ்ஞானிகள் அது அணுக்கழிவுக்கு ஒப்பானது என்று தெரிவித்துள்ளனர். அதனால் அதை ராணுவதளபதி ஆஃப்கானிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்வது என்று முடிவு செய்துள்ளார்.

இதனிடையில் ஹாஸ்பிட்டலில் நர்ஸுகளீடம் பட்டாபட்டி அவர்கள் நிறைய சில்மிஷம் செய்து வருவதாக செய்தி வந்துள்ளது . இந்த ராஜ துரோகக் குற்றத்துக்கு துபாய் பாணி தண்டனை வழங்கப் போவதாக ரெட்டைவால்ஸ் அறிவித்தார். அதுவும் வெளியூர்காரனைக் கொண்டே "அதை" வெட்டப் போவதாக அறிவித்துள்ளார்.
  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Wednesday, February 03, 2010

    யோவ் ரெட்டை..
    யாருப்பா இந்த பட்டாபட்டி?..
    என்ன நடந்துட்டிருக்கு..?
    ஆமா . காந்தி தண்டி-ல உப்பெடுக்கப் போனாறே..
    நம்ம மீன் பாடி வண்டிய அனுப்பஸ் சொன்னேனே ?..

    அனுப்புங்க அப்பு...

  1. வெளியூர்க்காரன்

    Wednesday, February 03, 2010

    உத்தரவிடுங்கள் மகாராஜா..நம்மை நாடு கடத்த முயன்ற பட்டாபட்டியை துண்டு துண்டாக வெட்டி அரண்மனை கோழிகளுக்கு போட்டு விடுகிறேன்...(ங்கோயல,யோவ் பட்டாபி... சிக்குனடி நீ என்கிட்டே..உன் கிளைமாக்ஸ் கூடிய சீக்கிரம்டி...)

  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Wednesday, February 03, 2010

    ஆமா.. யாருப்பா இந்த வெளியூர்காரன்..
    ஆங்கிலேயனா?..
    சும்மா கவிச்ச பேச்சா பேசிட்டுருக்காப்ல...

  1. Rettaival's Blog

    Wednesday, February 03, 2010

    அவன் ஆங்கிலேயன் இல்லைடி கண்ணு..உனக்கு அவந்தான் டெர்மினேட்டரு. உன் மண்டைல ஹோல் போட்றதுக்கு ஸ்பெஷல் ஆயுதம் கவர்மென்ட்ல இருந்து குடுத்திருக்கோம்டி

  1. ராஜ நடராஜன்

    Wednesday, February 03, 2010

    உங்க கட்சி கொடி கலர் சொன்னா கு(தொ)ண்டனுங்க சேர்க்க தோதா இருக்கும்.நேத்து கட்சி உள்பூசலால மஞ்ச கொடி,நீல கொடியான்னு ஒரே கன்பூசு.

    ராணுவ தளபதி எந்த ஓட்டல்ல ஒளிஞ்சிகிட்டு இருக்காருன்னு பார்த்துட்டு வாரேன்.

  1. Rettaival's Blog

    Wednesday, February 03, 2010

    ராணுவதளபதி கொஞ்சம் ஃபிகர் சோக்காளி...வ்வேவேவேனு கொஞ்சற பொன்னுங்ககிட்ட அடிவாங்குன கதையப் பத்திப் பேசப் போயிருக்காரு...ஹி ஹி...(இந்த மாதிரி தளபதி இருக்கிறது தான் நமக்கும் நல்லது)

  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Wednesday, February 03, 2010

    யோவ்.. நான் பெரிய மனுஷனய்யா.. தலைமைய.... ஒரு பதிவுக்காக விட்டுக்கொடுத்த பொன்மனச் செம்மல் என நாளை சரித்திரம் சொல்லும்..


    http://pattapatti.blogspot.com/2010/02/blog-post_1939.html

Post a Comment