RSS

ப.மு.க தலைவர் பட்டாபட்டி கைது.


தினக்குசும்பு பத்திரிக்கையின் தலைப்புச் செய்திகள்.


(அள்ளித்தந்த வானம் விவேக் ஸ்டைலில் படிக்கவும்...)

ப.மு.க ரெண்டாக உடையுமா...தமிழக மக்கள் துக்க்க்க்க்கம்...!

பட்டாபட்டி நாடாவை கழட்டுனது நாங்கதானுங்கோஓஓஒ...மார் தட்டுகிறார்கள் வெளியூர்காரனும் ரெட்டைவால்ஸும்...

ப.மு.க, தேர்தலுக்கு வாக்காளர்களுக்குக் கொடுத்த நிதியில் கள்ளநோட்டைக் கலந்து விட்டது யார்? கட்சித் தொண்டர்கள் தலைவரிடம் வீராவேசம்.

மகளிர் அணித் தலைவிக்காக சண்டை போட்ட ப.மு.க தலைவர்கள். பட்டாபட்டி உள்ளே நுழைந்ததால் அடிதடி. இரு தலைவர்கள் உயிர் ஊஊஊஊஊசல்....!

ப.மு.க வின் சின்னம் பட்டாபட்டி யாருக்குக் கிடைக்கும்... சோழி உருட்டி தேர்தல் ஆணையம் தேர்வு.

கடைசியாக வந்த தகவலின் படி ரெட்டைவால்ஸின் பிரதமர் பதவிக்கு ஆபத்து இருப்பதால் ப.மு.க நிறுவனரும் தலைவருமான பட்டாபட்டி அவர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.வராமல் அடம்பிடித்த பட்டாபட்டியை போலிஸார் அடித்து துவைத்துத் தொங்கப் போட்டனர்.இதனால் மக்கள் பெரும் நிம்மதி அடைந்தனர்
 
இந்தக் கைது சம்பவத்தை முன்னின்று நடத்திய டி.ஜி.பி.க்கு தங்கப் பதக்கம் வழங்குவதாக பிரதமர் ரெட்டைவால்ஸ் அறிவிப்பு. இந்தக் கைது சம்பவத்தைப் பற்றிப் பொது மக்கள் என்ன நினைக்கிறார்கள்.


அயனாவரம் அம்புஜம்: பட்டாபட்டிய தூக்கி ஜெயில்ல மட்டும் போடாதீங்கோ..அப்டியே என்ணைக் கொப்பரைல வறுத்து ..அன்னியன் படத்துல காட்டுவாளே அந்த மாதிரியெல்லாம் செய்துடுங்கோ..கடன்காரன்! தேர்தலப்போ அவன் சின்னத்தை வரைஞ்சு வீட்டு காம்பவுண்ட் சுவரையே நாறடிச்சுட்டான்.



கூடுவாஞ்சேரி கோயிந்த சாமி : நாட்டுல ஜனநாயகம் செத்துப் போச்சு...ராணுவ ஆட்சி வரணும்.

மாம்பலம் மன்னாரு : அய்யோ ராசா போய்ட்டியே...(மேற்கொண்டு அந்த ஒப்பாரியைக் காதுகளால் கேட்க முடியவில்லை)

சாந்தோம் சின்னசாமி : குவார்ட்டர் குடு சொல்றேன்!

கல்பாக்கம் கல்பனா: யாரது பட்டாபட்டி? ஆதித்யா டி.வி.காம்பியரா?

நுங்கம்பாக்கத்தில் ஒரு கல்லூரி மாணவி : Actually..This is a great tragedy you know...and...I luvvvv shah rukh.... when is his new release........?

.
.
.
முக்கியச் செய்தி : நாடா இல்லாத பட்டாபட்டியை இன்றிரவு 8.30 செய்திகளில் காணத்தவறாதீர்கள்

மிலிட்டரி ஹோட்டலில் வெட்டு வெட்டென்று வெட்டிக் கொண்டிருந்த வெளியூர்காரன் ராணுவ தளபதியாகவும் செயல் படுவார் என்று நம்பத் தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவனுகளெல்லாம் யாருன்னு தெரியனுமா..அப்போ முதலில் நீங்க இதைப் படிச்சிருக்கணும்.
  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Wednesday, February 03, 2010

    கைது செய்யப்பட்ட பட்டாபட்டியார் தப்பி ஓட்டமா?
    திடுக்கிடும் தகவல்..
    வாங்கத் தவறாதீர் "தினக் குசும்பு "..

    பட்டாபட்டி தப்பியோடியதை தொடர்ந்து , வெளியூர் மற்றும்
    ரெட்டை , திருப்பதியில் தலைமறைவு..

    ( சுட சுட செய்திகள்.. பட்டாபட்டியார் தப்பி ஓடியதால் இன்னுமுதல்
    பேப்பர் விலை 28 ரூபாயக நிர்ணயிக்கப்பட்டுள்ளது..

    பங்க் -ல பெட் ரோல் தட்டுப்பாடு.. மக்கள் அவதி...)

  1. வெளியூர்க்காரன்

    Wednesday, February 03, 2010

    திரு.மாண்பிமிகு பிரதமர் ரெட்டைவால்ஸ் ஐயா அவர்களுக்கு வணக்கம்...பட்டாப்பட்டி என்ற பெயர் க்ரிப்பான ரௌடிகளுக்கு மட்டுமே வைக்கப்படும் பெயர் என்பதால் அது பிஞ்சு நெஞ்சு கொண்ட எதிர்க்கட்சி தலைவர் திரு.பட்டு அவர்களுக்கு செட் ஆகாத காரணத்தால் அவருக்கு அக்ரகாரத்தில் முறுக்கு சுட்டு விக்கும் பட்டாபி என்ற பெயரை சூட்டி சரித்திரத்தில் நீங்க புகழை பெறச்செய்ய வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்..தவிர நேற்று வந்த பெட்டியில் மூன்று C க்கள் கம்மியாக இருந்ததாக அறிந்தேன்...அதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வர விழைகிறேன்..(எண்டா நாயே மிஸ் ஆவுது...இந்த டகுல்பாச்சா வேலையெல்லாம் என் கைல வேண்டாம்..நான் மொள்ளமாரிலையே முடிச்சவிக்கி...ராங் காட்ன...அப்புறம் வடைதான்.... ).இப்படிக்கு ..என்றும் தங்கள் காலடியில் பணி செய்து கிடக்கும் ஊழியன்...வெளியூர்காரன்...

  1. வெளியூர்க்காரன்

    Wednesday, February 03, 2010

    என்னை இந்தியாவின் ராணுவ தளபதியாக அறிவித்த ஆசியாவின் வருங்கால மற்றும் வாழ்நாள் பிரதமர் தமிழகத்தில் பிறந்த ஏசுநாதர் அய்யா திரு ரெட்டைவால்ஸ் அவர்களுக்கும் எதிர்க்கட்சி தலைவர் அஞ்சாநெஞ்சன் சிங்கத்தை மிரள வைக்கும் குரல் கொண்ட திரு பட்டாபி என்கிற பட்டாப்பட்டி அய்யா அவர்களுக்கும் என் இதயபூர்வமான நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்...உங்கள் இருவருக்கும் சேவை செய்ய காத்திருக்கிறோம் என்று இந்திய ராணுவத்தின் சார்பில் உறுதியளிக்கிறோம்....நன்றிகளும் வணக்கங்களும்...

  1. வெளியூர்க்காரன்

    Wednesday, February 03, 2010

    டேய் ரெண்டு பெரும் என்ன வேலை பார்க்க விடுங்கடா டேய்...காலைலேர்ந்து மெயில் கூட செக் பண்ணாம ப்லாக்லையே உக்காந்துருக்கேன் .இந்த எலவுக்குதான் ப்ளாக் பக்கமே வர்றதில்ல..... :)

  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Wednesday, February 03, 2010

    இந்த பதவிக்காக எவ்வளவு போராட்டங்கள்? , சிறைச்சாலைகள் ,
    உயிர் பலிகள் , தீ குளிப்புகள் , இழந்த கொழுந்தியாக்கள்..
    அவ்வளவு சீக்கிரம் பதவிய துறந்துவிடுவேனா?...

    போர்.போர்... வீரப் படையினரே.. ஆயுத்தமாகுங்கள்..
    உடலை கண்ட துண்டமாக வெட்டி காக்கைக்கு போடுங்கள் ( சே.. சிங்கையில காக்காய் இல்லையா .. சரி..)
    கழுகுக்குப் போடுங்கள் , காட்டாற்றில் வீசுங்கள்..

    வேல்.. வேல் .. வீர வேல்...

  1. வெளியூர்க்காரன்

    Wednesday, February 03, 2010

    ரெட்டைவால் அய்யா நீங்க உம்னு சொல்லுங்க...அந்த பட்டாபிட்ட மன்னிப்பு கேட்டுட்டு நாம வெளில போய்டுவோம்..என்னிக்கா இருந்தாலும் சிக்குவான்..வெயிட் பண்ணி போட்டு தள்ளிரலாம்...என்ன சொல்றீங்க..என்ன ராணுவ அமைச்சராக்க சொல்லி அவன்ட்ட கேட்ருக்கேன்...நீங்க ஏதும் எதிர்ப்பு தெரிவிக்காதீங்க..ராணுவம் என் கைக்கு வர்றது உங்க கைக்கு வர்ற மாதிரி...கொஞ்ச நாள்ல இராணுவ புரட்சில பட்டாபிய போட்ருவோம்..என் ஒன்னும் பேசாம இருக்கீங்க...எதாச்சும் சொல்லுங்க ரெட்டை..அவன போட்டபரம் நீங்கதான் மீண்டும் பிரதமர்...என்ன சொல்றீங்க...

  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Wednesday, February 03, 2010

    யோவ்.. ஆப்கானிஷ்தான் போ- னு அரைமணி நேரமா கத்திட்டுருக்கேன்..

    சதி பண்றாங்களாமா.. சதி.. தோல உரிச்சுப்புடுவேன்...

  1. வெளியூர்க்காரன்

    Wednesday, February 03, 2010

    பட்டாபட்டி.. said...@///
    இர்ரா இர்ரா போறேன்...ரொம்பதான்...இருடி உனக்கு வெக்கறேன் ஆப்பு...ரெட்டை..நீ கெளம்பு..இப்போ பட்டாபட்டியாள நாடு கடத்தப்பட்றோம் ...கூடிய சீக்கிரம் ஆட்டைய கலைச்சு நாம ஆட்சிய புடிக்கறோம்...யு டோன்ட் வொர்ரி லா...

  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Wednesday, February 03, 2010

    டிக்..டிக்..டிக்..டிக்..டிக்... பட்டாபட்டி கவுண்டிங்க் ஸ்டார்ட்...

  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Wednesday, February 03, 2010

    யோவ்.. பசிக்குதைய்யா..
    நீங்க ஆப்கானிஷ்தான் பாத்து போயிட்டேயிருங்க..ஆமா.. வடக்கு திசை தான்..
    நீங்க 'போய் சேர்ந்தத' தினக் குசும்பு-ல பார்த்து தெரிஞ்சுக்கிறேன்..

  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Wednesday, February 03, 2010

    எங்கையா ரெட்டை... சத்தமே கானோம்..
    உள்ள அடி ஓவரோ...?

    ச்சோ..ச்சோ.. என் கண்கள் கலங்குகிறது..

  1. வெளியூர்க்காரன்

    Wednesday, February 03, 2010

    எலேய் ரெட்டை...பட்டாபட்டி நம்மள குண்டு வெச்சு போட்டு தள்ள பிளான் பண்ணிடாண்டி...இன்னும் தூங்குனேன்னா விட்டுட்டு போயட்கிடே இருப்பேன்..எந்திரிச்சு தொலைடா எருமை...உனக்கு தேவ கொவ்டாவே தேவலாம் போல...

  1. Rettaival's Blog

    Wednesday, February 03, 2010

    சலாமியா தேசத்து மன்னர் என்னை சந்திக்க வந்துள்ளதால் பட்டாபட்டி பற்றிய அரிய தகவல்களோடு இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு பிரஸ் மீட்டில் சந்திக்கிறேன்.

    இப்படிக்கு

    பாரத மன்னர் ரெட்டைவால்ஸ்

    (ஜனநாயக காமெடிகள் இனி செல்லாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்)

  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Wednesday, February 03, 2010

    யோவ் காவல்துறை.. அந்த GPS -க் கொடு..
    என்னாலளே.. ஒரு பாயிண்டு மட்டும் முன்னாடி, பின்னாடி ஆடிக்கிட்டு இருக்கு..
    இன்னொறு பாயிண்டு செத்த பொணமாறி நகராமயிருக்கேயா?..

    சொன்ன மாறீ ஆப்கானிஷ்தான் போவாங்களா?
    எதுக்கும் ஒரு கண்ண, அவங்க மேல வெச்சுக்கோலே....

    இன்னும் ஒரு மணி நேரத்தில இடத்த காலி பண்ணலன வெய்யி , உள்ளயே போட்டுத்தள்ளிடுங்கலளே..
    நான் உள் நாட்டுக் கலவரமுனு அறிக்கை கொடுத்திடரேன்..

    யோவ்.. ரெண்டு மாலை எதுக்கையா?..

    போதும்.. போதும் ஒரு மாலை மட்டும்
    காச கரியாகத்லே மூதி....

    ரெண்டு பேருக்கும்..சேர்த்தாப்ல போட்டுடலாம்..
    ஆமா.. ஈ-யும் பீ-யும் இருந்தாங்க...அப்புறம் எதுக்கையா பிரிக்கீங்க...
    சிரிச்சுட்டே செத்த மாறீ கிராபிக்ஸ் பண்ணி பத்திரிக்கைக்கு அனுப்புலே...

  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Wednesday, February 03, 2010

    ரெட்டை.. நீரு தூங்கர மாதிரியே நடியுமய்யா..
    நாங்க பொட்டுத் தள்ளறப்போ ,
    நீரு சிரிச்சுட்டே போவிறா..... இல்ல அழுதுகிட்டே போவிறா னு
    வெள்ளக் காரங்கூட பந்தயம் கட்டிட்டு இருக்காபளே வெளியூரு...

    சூதனமா நடந்துக்கோங்கப்பு..

  1. ராஜ நடராஜன்

    Wednesday, February 03, 2010

    தலைப்பா பார்த்து எம்புட்டு சந்தோசமா இருந்தது.முதல் பின்னூட்டம் கவுத்திருச்சே!அவ்வ்வ்.......

  1. Rettaival's Blog

    Wednesday, February 03, 2010

    நடராஜன் ஜி ! பட்டாபட்டி ஒருவிதமான புதுவிதமான மனநோய்க்கு ஆளாகியுள்ளார்...அவர் தப்பி ஓடியது மட்டும்தான டி.வி. ல காமிச்சாங்க...ஒரு டீ.கடைல முறுக்குக்கு ஆசைப்பட்டு அம்போன்னு கைதானதை நம்ம ஊர் டி.வி. ல இல்லை நியூசிலாந்துல உள்ள ஒரு காமெடி சேனல் ல திரும்ப திரும்ப காமிக்கிறாங்களாம்

Post a Comment