வணக்கம் ப்ளாக்கர்ஸ். ’இந்த வணக்கம் தேர்தலுக்காக’- என நீங்கள் நினைத்தால், தவறான முன் உதாரணமாகிவிடும். இந்த ரெட்டையும் வெளியூர்காரனும் ஒவ்வொரு தலைவரையும் கைக்கு வந்தபடி எழுதி குழப்பி வருவது நீங்கள் அறியாததல்ல!
இது வரை அவர்கள் எழுதிய பதிவுகள், விஜய், கேப்டன் மற்றும் தற்போதைய முதல்வர் பற்றி படித்ததும், ஆம்... அவர்கள் சரியான பாதையில் பயணிக்கின்றனர், என்று என்அன்னை சோனியா மீது ஆணையாக,அடக்கமாகக் கூற கடமைப்பட்டுள்ளேன்
நான் பலசில வருடங்களாக, தமிழக காங்கிரஸ் தலைவராக பணியாற்றி வருவது, பலருக்கு உறுத்துகிறது. ஏன்?. எனக்கே அவ்வப்போது உறுத்துகிறது! அதையெல்லாம் பார்த்தால் தொழில் பண்ணமுடியுமா?தமிழர்களின் நலனுக்காக, பிறந்த நாட்டை விட்டு, இங்கு வந்து ரத்தம் சிந்தும்(?) என் அன்னைக்கு, உயிரைவிடத்தயாராக இருக்கும் நான் ஏன் தலைவனாக இருக்ககூடாது?..!
காங்கிரஸில் ஏழெட்டு கோஷ்டிகள் இருப்பதாக மீடியாக்கள் கூவுகின்றன.அவர்களுக்கு நான் ஒன்று கூற கடமைப்பட்டுள்ளேன்.
"நீங்கள் கூறுவது சுத்தப் பொய்!
உண்மையில் எங்களுக்கே தெரியாமல் ஏகப்பட்ட கோஷ்டிகள் இருக்கின்றன. அதை கணக்கெடுக்கத்தான் நாங்கள் உட்கட்சி தேர்தல் நடத்தினோம். ஆனால் ஓட்டுப் போடும் தொண்டர்களை விட போட்டியிட்ட நபர்கள் அதிகமாக இருந்ததால் வழக்கம் போல டெல்லி சொல்வதையே கேட்டுக்கொண்டோம்.இந்த பிரச்சினையை சரி செய்வதற்காக டெல்லி மேலிடத்தில் கோள்மூட்டி விடுவதற்கென்றே தனி கோஷ்டி ஒன்றை உருவாக்கி அதில் எல்லாக் கோஷ்டியை சேர்ந்தவர்களும் இடம்பெற செய்ய முயற்சி செய்தேன்,
உங்களுக்குப் புரியவில்லை இல்லையா? எனக்கும் புரியவில்லை ..அதனால்தான் நானே தலைவராக தொடர்கிறேன்!
சரி இன்னொன்று கேட்கிறேன்!
தமிழகமுதல்வரின் கட்சியில் கோஷ்டிகள் இல்லையா? , அதிமுக-வில் கோஷ்டிகள் இல்லையா?. எங்களை மட்டும் ஏன் இப்படி பிரிக்கிறீர்கள்? எங்களின் குறிக்கோள், ’தமிழர்களுக்கு பணி செய்துகிடப்பதே’ என்பதை ஏன் உணர மறுக்கிறீர்கள்?
சமீபத்தில் ஒருவர், என் விளையாநிலத்தை, பாகம் பிரித்து விற்பதற்கு முயற்சித்தது என் அன்னைக்குத் தெரியும்.
ஆனால், அதில் தோல்வி அடைந்ததைக்கண்டு மனம் வருந்திய மகான்(?)களில் நானும் ஒருவன்.
மத்தியில் ஆளும் காங்கிரஸ்...மாநிலத்தில் ஏன் இல்லை?. இதை நான் கேட்கவில்லை.. மக்கள் கேட்கிறார்கள்!
வச்சிக்கிட்டா வஞ்சகம் பண்றோம் ...தெரிந்தால் சொல்லமாட்டோமா?
மக்களுக்கு என்ன செய்தது என கேட்கிறார்கள் அற்பர்கள். என்ன செய்யவில்லை நாங்கள்?.
ஈழத்தமிழரை கொன்றொழிக்க, ஆயுதங்கள் விற்ற வகையில், அந்நியச்செலவாணி ஈட்டவில்லையா?.
அயல்நாட்டு உறவை பேணிக்காக்க, குட்டாச்சி.. சாரிப்பா.. குஷ்டாச்சி..சே.. விடுங்க..அவரை விடுவிக்கவில்லையா?.
அமெரிக்காவின் அறிவுரைப்படி, போபால் மக்களுக்கு வாய்கரிசி கொடுக்கவில்லையா?.
வரலாற்றை மறக்கக்கூடாது. மேலும் , இந்துமுஸ்லீம் உறவுக்காக, ’கான்-ஐ காந்தி-யாக்கவில்லையா’?.
கேட்கிறார்கள் கேள்வி.
ஏன் இந்த கூட்டணி?. இது உங்கள் மனதில் தோன்றும். அன்னையின் புதல்வனுக்கு அஷ்டசனி நடப்பதால், கலைஞருடன் கூட்டு சேர்ந்தோம். அதையும் அரசியல் ஆக்கிவிட்டார்கள், ஆறறிவு அற்றவர்கள்.
கூட்டணி பேச, என் மகனை அழைத்துச்சென்றேனாம்?. இதில் என்ன தவறு?. பாங்கில பணம் பெறும்போது, பாதுகாப்புடன் செல்வதில்லையா?. 60 வருட ஆட்சிக்கட்டிலில், இந்தியா எப்படி முன்னேறி உள்ளது?. சிந்தியுங்கள்..
வரும் தேர்தலில், மனைவிக்கு சீட் ஒதுக்கியதாக சிலர் கூவல்.
விலைவாசி கன்னாபின்னா என்று உயர்ந்து, நடுத்தரமக்கள் , பிச்சைக்காரார்கள் ஆகிவருகின்றனர். அந்த வளர்ச்சி என்னையும் பாதிக்காதா?. மக்களுக்குக்காக, படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, அரசியலில் புகுந்த எனக்கு மனைவியைத்தவிர யார் துணை(?)புரிவார்? ஒரு குடும்பதில், கணவன் மற்றும் மனைவி வேலைக்குப்போவது தவறா?.. கேட்கிறேன். மனசாட்சிப்படி பேசுங்கள் மனிதர்களே.
எங்கள் தலைவர் ராகுல்ஜீக்கு பெண் பார்த்து, அடுத்த காந்தியை, நாடு பெறும் வரை, மகன் மற்றும் மனைவியுடன், எங்கள் தலைவி சோனியாவுக்கு உழைப்பதே என் கடமை. இந்தக் கூட்டத்தில், சிலர் சங்கு கூதுகிறார்கள். இதற்கெல்லாம் பயந்தவர்களா, காங்கிரஸ்காரர்கள்? நாங்கள் ஊதாத சங்கா?.
ஆகவே, ஒவ்வொரு வாக்காளரும், உங்கள் பொன்னான ஓட்டை, காங்கிரஸ்-க்கு அதாவது.. தங்கபாலு காங்கிரஸ்க்கு போட்டு, வெற்றிபெறச்செய்யுங்கள். உங்களுக்கு சேவைசெய்ய நாங்கள் இருக்கிறோம்.
வாழ்க அன்னை.. வளர்க தங்கபாலு கோஷ்டி!
( யோவ்.. போட்டோ.. மகனையும் அப்படியே எடுயா.... தக்காளி.. அடுத்த அஞ்சு வருஷம்.. ம். கு^%$@#ஞ்சவெச்சு, தண்ணி குடிச்சாவது, பதவியை விட்டு இறங்ககூடாது.. ஏழுமலை வெங்கடேசா.. தேர்தல் முடிஞ்சதும் உனக்கு முடி(?) காணிக்கை செலுத்துகிறேன். அதுவரை, மக்களை.... அப்படியே வெச்சிருய்யா பெருமாளே.. )
Written By Pattapatti
*************************************************************
கொழுத்தாடு பிடிப்பேன் – அ.முத்துலிங்கம்
-
ஓம் கணபதி துணை
The Immigration Officer 94/11/ 22
200, St Catherene Street
Ottawa, Ont
K2P2K9
( Please translet Sri Lankan Tamil Language )[image: A.Mu...
8 hours ago



24 விமர்சனங்கள் & விமர்சிக்க:
என்னது தங்கபாலு தண்ணிலாரி மோதி செத்துட்டாரா...?
என்னய்யா பட்டாப்பட்டி சொல்ற...? :)
@@@ஏழுமலை வெங்கடேசா.. தேர்தல் முடிஞ்சதும் உனக்கு முடி(?) காணிக்கை செலுத்துகிறேன்.///
அவன சட்டைய கயட்டிட்டு கூடத்துல உக்கார வெச்சு நடு மண்டைல ஒரு பூனைய விட்டு நக்க சொல்லுயா...மிச்சம் ஒட்டிருக்கற மசுரும் சொல்லிக்காம பூ போல வந்துரும்..! தக்காலி ப்ளேடு செலவாச்சும் மிச்சம்..! :)
@@நான் பலசில வருடங்களாக, தமிழக காங்கிரஸ் தலைவராக பணியாற்றி வருவது, பலருக்கு உறுத்துகிறது. ஏன்?. எனக்கே அவ்வப்போது உறுத்துகிறது! ///
Ha..Ha..Good one..! :)
என்னது தங்கபாலு தண்ணிலாரி மோதி செத்துட்டாரா...?
என்னய்யா பட்டாப்பட்டி சொல்ற...? :)
//
யோவ்.. தண்ணி லாரி மோதினது என்னமோ உண்மைதான்.. ஆனா.. ஹி.ஹி செத்தது.... சாதிக் பாட்ஷாயா...!!
// தேர்தல் முடிஞ்சதும் உனக்கு முடி(?) காணிக்கை செலுத்துகிறேன். //
எங்கே இருக்குற முடியை ன்னு சொல்லவே இல்ல பட்டா ..ஓஹோ %ஞ்சு முடியை தானே ??
நெஞ்சு மூடின்னு சொல்ல வந்தேன் ...வெளியூர் தப்பா நினைச்சிராதே ..எனக்கு பட்டா மாதிரி அசிங்கமா பேச வராது ...
யார் ஸ்பெக்ரம் பாட்ஷாவா?
// மக்களுக்குக்காக, படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, அரசியலில் புகுந்த எனக்கு //
படிப்ப பாதில நிறுத்தினது சரி ..அதுக்காக பாதி ஷேவ் செய்து கிட்டு இருக்கும் போது ஏன் எந்திருச்சு வந்த ..இப்ப பாரு மண்டைல சுத்தி முடி இருக்கு நடுவுல மட்டும் முடி இல்ல ...
//குட்டாச்சி.. சாரிப்பா.. குஷ்டாச்சி..//
குட்டாச்சி.... குஷ்டாச்சி...குஷ்ட்டரோகி ..ச்சே ..சீ ..குட்ரோச்சி ..எனக்கும் வர மாட்டுதே பட்டா ..தமிழ் தப்பா எழுதின கழக"கனி"கள் கோவபடுவான்களே
//ஈழத்தமிழரை கொன்றொழிக்க, ஆயுதங்கள் விற்ற வகையில், அந்நியச்செலவாணி ஈட்டவில்லையா?.
அயல்நாட்டு உறவை பேணிக்காக்க, குட்டாச்சி.. சாரிப்பா.. குஷ்டாச்சி..சே.. விடுங்க..அவரை விடுவிக்கவில்லையா?.
அமெரிக்காவின் அறிவுரைப்படி, போபால் மக்களுக்கு வாய்கரிசி கொடுக்கவில்லையா?.
வரலாற்றை மறக்கக்கூடாது. மேலும் , இந்துமுஸ்லீம் உறவுக்காக, ’கான்-ஐ காந்தி-யாக்கவில்லையா’?///
இந்த சாதனைக்காகவாவது தங்கவாலு நுனில குஞ்சாமணி கட்டனும்யா....
//பட்டாபட்டி....
March 17, 2011 10:18 AM
This post has been removed by the author.
Veliyoorkaran
March 17, 2011 10:23 AM
This post has been removed by the author.//
எக்குதப்பா வாந்தி எடுத்திருக்கானுக, ஆனா அடுத்தவன் பாக்குறதுக்குள்ள கிலீனும் பண்ணிருக்கானுக.....
//தமிழர்களின் நலனுக்காக, பிறந்த நாட்டை விட்டு, இங்கு வந்து ரத்தம் சிந்தும்(?) என் அன்னைக்கு,//
யாரு ரத்தம் மச்சி? :)
//உயிரைவிடத்தயாராக இருக்கும் நான் ஏன் தலைவனாக இருக்ககூடாது?..! //
மாப்ள, இங்க ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகிபோச்சு போல!
அது உயிரா இல்ல மயிரானு எனக்கு ஒரு சின்ன டவுட்.முன்னதுன்னா அவன இப்பயே செத்துற சொல்லு.பின்னதுன்னா... ;)
//உங்களுக்குப் புரியவில்லை இல்லையா? எனக்கும் புரியவில்லை ..அதனால்தான் நானே தலைவராக தொடர்கிறேன்! //
ஹாஹா,இது தான்யா டாப்பு...
//மக்களுக்கு என்ன செய்தது என கேட்கிறார்கள் அற்பர்கள். என்ன செய்யவில்லை நாங்கள்?.
அமெரிக்காவின் அறிவுரைப்படி, போபால் மக்களுக்கு வாய்கரிசி கொடுக்கவில்லையா?. //
அதான!அது மட்டுமல்லாமல், அமெரிக்காவுக்கு சொம்பு தூக்க வசதியாக, காசு கொடுத்து அணு ஒப்பந்தத்தை ஆதரிக்க சொல்லவில்லையா? இல்ல, எங்கள் தானை தலைவன் ராகுல் மேல் வழக்கு தொடுத்தான் என்பதற்காக வேலை வெட்டியில்லாத சிபிஐ பசங்களை விட்டு MLA வீட்டை தேட சொல்லவில்லையா? இல்லை, அடுத்தவன் உரையை படித்து அசடு வழிய சிரிக்கலையா? ஸ்பெக்ட்ரம் விசயத்தில் ஒன்றுமே நடக்கவில்லை என்று சொல்லிவிட்டு கோர்ட் பொடதியில் பொளேர் என்று அடித்த பின் அசடு வழிய சிரிக்கவில்லையா? நான் ஒரு செல்லாக்காசுங்க என்று பிரதமரையே மீடியாவிடம் பேச வைக்கவில்லையா?
என்ன செய்யவில்லை காங்கிரஸ் ?
ஆகையால் தமிழர்களே, இந்த முறை எங்களுக்கே ஓட்டுப் போட்டால்,குறையே இல்லாத வகையில் உங்கள் அனைவரது குறைகளையும் 'தீர்த்து' வைக்க காங்கிரஸ் தான் ஒரே வழி என்று உணர்ந்து வோட்டு போடுங்கள்.
CBI raids MLA who filed complaint against Rahul
WikiLeaks controversy: Did Congress buy MPs for Trust Vote?
@@@@ILLUMINATI
என்ன செய்யவில்லை காங்கிரஸ் ?
ஆகையால் தமிழர்களே, இந்த முறை எங்களுக்கே ஓட்டுப் போட்டால்,குறையே இல்லாத வகையில் உங்கள் அனைவரது குறைகளையும் 'தீர்த்து' வைக்க காங்கிரஸ் தான் ஒரே வழி என்று உணர்ந்து வோட்டு போடுங்கள்.////
காங்கிரஸ் வேணாம் மச்சி...! நீ சொல்றது கரெக்டு..அனா அவங்களுக்கு பதில் யார சென்ட்ரல்ல உக்கார வெக்க போறோம்..! பி ஜே பி ...? இல்ல மம்தா பேனர்ஜிய ஜெய்க்க வெச்சிர்லாமா...? இல்ல அவங்களையும் உனக்கு புடிக்கலைனா லாலுவ ப்ரைம் மினிஸ்டரா போட்டறலாம்..? என்னா சொல்ற...?
தற்போதைய இந்தியாவில் காங்கிரஸ் அப்டீங்கற தெரு நாய விட்டா ,அடிச்சுக்காம நிலையான ஆட்சி தர்றதுக்கு வலுவான எதிர்க்கட்சி இல்லைங்கறதுதான் நிதர்சனம்.. ! நீ அவனுங்கள காரி காரி துப்பிட்டு வேற வழியில்லாம வாக்கபடதான் வேணும்... !
Unfortunately we dont have a strong second option to choose our central government..!
(இடதுசாரி கம்முனிஸ்ட்டுகளை பற்றி நான் எதுவும் எழுதவில்லை என்பதை கவனத்தில் கொள்க...) :)
வேற வழியில்லாம வாக்கபடதான் வேணும்... !
Unfortunately we dont have a strong second option to choose our central government..!
//
மேஜர் சுந்தரராஜன் பேசறாப்லயே இருக்குயா..!! நீ பேசு மச்சி...!!!
:-)
///ஏழுமலை வெங்கடேசா.. தேர்தல் முடிஞ்சதும் உனக்கு முடி(?) காணிக்கை செலுத்துகிறேன். /////
யோவ் பட்டாபட்டி, **$$ண்டி பொடைப்பா இருந்தா இப்படித்தான் யோசிக்கத்தோணும்.
///சமீபத்தில் ஒருவர், என் விளையாநிலத்தை, பாகம் பிரித்து விற்பதற்கு முயற்சித்தது என் அன்னைக்குத் தெரியும். ////
அதை யாருமே வாங்க முயற்சிக்கவில்லை என்பது என் குருஜீ பட்டாபட்டிக்கும் தெரியும்.
@@@பட்டாபட்டி....
மேஜர் சுந்தரராஜன் பேசறாப்லயே இருக்குயா..!! நீ பேசு மச்சி...!!! ///
ச்சே..சீரியசா நாட்டுக்கு ஒரு மெசேஜ் சொல்லலாம்னு பார்த்தா பொசுக்குனு பல்பு குடுத்துட்டானுக..ஏன்டா இந்த ப்ளாக்ல மட்டும் எல்லாம் அடுத்தவன கலாய்க்கற வெறி புடிச்சு அலையறீங்க..?
( என்ன போட்டுடீங்கள்ள., வக்காளி இன்னிக்கு எவனையாச்சும் வலுவா போடாமா நான் போகமாட்டேண்டா..?) :)
வென்று.. உன்னோட கமெண்டுக்குமேல, ஒரு பீஸு, வானம் மாறி தொங்கிட்டு இருக்கு பாரு.. அதைப்போடு.. புச்சா, என்னைய குருஜீனு சொல்லுது..
கேட்டதும் எனக்கு பயம்ம்ம்ம்ம்ம்ம்மா இருக்கு.. பயப்பட்டா என்ன பண்ணுவோம்?..
போட்டு தள்ளீட்டு, அப்பால நாட்டு நடப்பை பத்தி நீயும் நானும் திரும்பவும் பேசுவோம்..
:-)
@@@வானம்
யோவ் பட்டாபட்டி, **$$ண்டி பொடைப்பா இருந்தா இப்படித்தான் யோசிக்கத்தோணும்.//
அட ஆமாம்..நான் கவனிக்கலையே இத..!
ஆமாம், குண்டி புடைப்பா இருந்தான்னு போடறதுக்கு ஏன்யா இந்த பையன் இவ்ளோ வெக்கபட்றான்..? :)
வெளியூரு..உனக்கு வலது மூளை வேலை செய்ய ஆரம்பிச்சுதுன்னா..பயங்கரமா சீரியஸ் ஆயிடற...அதுவும் இலுமி எப்பவெல்லாம் வர்றானோ..உனக்கு ஒரு மாதிரி ஆயிடுது!
பட்டாபட்டி மாதிரி மூளைக்கு வி.ஆர்.எஸ் கொடுத்துரு!
(ஒரே கமெண்ட் ல மூணு பேரை ஓட்டி எவ்வளவு நாளாகுது!)
ஆமாம், குண்டி புடைப்பா இருந்தான்னு போடறதுக்கு ஏன்யா இந்த பையன் இவ்ளோ வெக்கபட்றான்..? :)
//
ஹி..ஹி.. டீசெண்டாமாம்..
வெளியூரு..உனக்கு வலது மூளை வேலை செய்ய ஆரம்பிச்சுதுன்னா..பயங்கரமா சீரியஸ் ஆயிடற...அதுவும் இலுமி எப்பவெல்லாம் வர்றானோ..உனக்கு ஒரு மாதிரி ஆயிடுது!
பட்டாபட்டி மாதிரி மூளைக்கு வி.ஆர்.எஸ் கொடுத்துரு!
(ஒரே கமெண்ட் ல மூணு பேரை ஓட்டி எவ்வளவு நாளாகுது!)
//
ஹா..ஹா..
பட்டாபட்டி மாதிரி மூளைக்கு வி.ஆர்.எஸ் கொடுத்துரு!
//
..
ஹி..ஹி. மூளைய, ஓய்வெடுக்க கொடைநாடு அனுப்பியிருக்கேன்..
அதுவுமில்லாம.. இப்ப எதுக்குய்யா அது?..
அம்மணக்குண்டி ஊர்ல, பட்டாபட்டிய போட்டுக்கிட்டு திரியறமாறி..!!!
Post a Comment