மானங்கெட்ட தொண்டனுக்கு,
நான் தான் கேப்டன் பேசறேன்..!.. அக்காங் ..!
டேய் டேய் நில்லுங்கடா...ஏண்டா எல்லாப் பயலும் இப்டி தலைதெறிக்க ஓடறீங்க....இருங்கடா ...இது நான் நடிச்ச சினிமா இல்லடா..தேர்தல் பிரச்சாரம்...அதுவும் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம்...அக்காங்..!
எப்படா ஆட்சியைப் பிடிப்போம்..நாமளும் எம்.எல்.ஏ மந்திரி ஆகி நால்லா சம்பாதிக்கலாம்னு கனவோட இருக்குற என் ரசிகக் கண்மனிகளா...உங்க ஆசை கூடிய சீக்கிரம் நிறைவேறிடும்...! என் கால் கவுட்டி மேல சத்தியமா நாம கண்டிப்பா ஜெய்க்கிறோம்..!.. அக்காங்..!
நாம ஜெய்ச்சிருவாமான்னு சந்தேகமா கேக்குற சனியன் புடிச்ச ஈத்தரைங்களுக்கு நான் ஒன்னே ஒன்னு சொல்லிக்கறேன்... போன தேர்தல்ல நாம வாங்கின ஓட்டுசுமார் முப்பது லட்சம். தக்காளி அதுல பாதி பேரு என்னோட எதாச்சும் ஒரு சினிமாவ ஒரே ஒரு தடவ பார்த்துருந்தா கூட நான் நல்ல துட்டு பார்த்துட்டு ஓரமா போய் தண்ணிய போட்டுட்டு சத்தமில்லாம படுத்துருப்பேன்....இப்ப பாரு அரசியலுக்கு வந்துட்டேன்..இதெல்லாம் உங்களுக்கு தேவையா..? ஒழுங்கா என் படத்த பார்த்துருக்கலாம்ல....?.. இப்ப இவன் தோத்து போய்ட்டா மறுபடியும் சினிமால நடிக்க வந்துருவானேன்கர பயத்துலயாச்சும் மக்கள் எனக்கு வோட்டு போடுவாங்கடா..நான் ஜெய்ச்சிருவேன்...!
அதானால நீ தேவையில்லாம பயந்து என்னையும் பயமுறுத்தாத...இப்பல்லாம் பயம் வர்றப்ப முன்னாடி மாதிரி மடில படுத்து அழுக என் பொண்டாட்டி வேற விட மாட்டேன்கர... ஊசிப்போன சாராய நாத்தம் அடிக்குதாம் என்மேல.. எங்க விட்டேன்..ஆங்...எலெக்சன்ல ஜெய்க்கிறது...அதனால நீ தைரியமா போய் நீ எலெக்சன் வேலைய பாரு...! நாம ஜெய்க்கிறோம்..!
முதள்ள தனியா நின்னோம்...மக்கள் ஓரளவுக்கு ஓட்டுப் போட்டாங்க.அப்புறம் ஆண்டவனோட கூட்டணி வச்சோம்.லேசா மூஞ்சிய திருப்பினாங்க... இனிமேயும் தனியா நின்னா வைகொ ராமதாஸுக்கு அடுத்தபடியா நாம தான் காமெடி பீஸுன்னு நினைச்சி காரி துப்பிட்டு கழுவி ஊத்திட்டு போயிருவாங்கே..மூளையும் கலரும் கம்மியா இருந்தாலும் உன் தலைவன் ஆக்சன் ஸ்டாருடா... வெச்சேன் பார்த்தியாகூட்டணிய..!
ஏண்டா நாயே கட்சி ஆரம்பிச்சேன்னு என்ன பார்த்து எல்லாரும் கேக்றாங்க.சொல்றேன் கேட்டுகங்க.. தமிழ்நாட்டு அரசியல் என் கம்மங்கோட்டை மாதிரி நாறி போய் கெடக்கு...! இது சுத்தபடுத்தனும்னு இங்க இருக்கற முப்பத்தியாறு நடிகர்கள்ல யாருக்காச்சும் தோணுச்சா...! என் பொண்டாட்டிக்கு தோணுச்சு..அவதான் சொன்னா..மச்சான் மச்சான் கட்சி ஆரம்பிங்க கழுவுவோம்னு...எதடின்னு கேட்டதுக்கு, நாட்டை மச்சான் நாட்டைன்னு சொன்னா..! எனக்கு பொண்டாட்டி பேச்ச கேக்குறது அறவே புடிக்காது..அதனால இருபது வருசமா கவுட்டி கிழிய கிழிய கால தூக்கி தூக்கி சண்ட போட்டு மொறைச்சு மொறைச்சு பார்த்து சம்பாரிச்ச காசெல்லாம் எறக்கி ஆரம்பிச்சேன் பாரு கட்சிய...!
மெரண்டுட்டா என் பொண்டாட்டி...ஏன் மச்சான் நான் சொல்ற எதையுமே கேக்கமாட்ரீங்கன்னு..! அப்ப சொல்ல ஆரம்பிச்சேன் அவகிட்ட, தமிழ்நாட்ல மொத்தம் இருநூத்தி முப்பத்தி...,அவ அதுக்குள்ள அவ தம்பிகிட்ட போய் சொல்றா, உன்ட்ட அப்பவே சொன்னேன்ல, எனக்கு இந்த கருவாபய வேணாம், லுச்சாதனமா எதுனா பொலம்பிகிட்டே இருக்கானு...கேட்டியான்னு அழுதுகிட்டே பொலம்ப ஆரம்பிச்சிட்டா...! நான் என்ன பண்றதுன்னு தெரியாம போய் தண்ணியடிச்சிட்டு வழக்கம் போல வாந்தி எடுத்துட்டு தூங்கிட்டேன்..! அப்ப நெனச்சேன் பொண்டாட்டி கையாள செருப்படி வாங்கற நம்மள மாதிரி ஆம்பளைங்களுக்கு நம்ம கட்சில அடைக்கலம் குடுத்து குவார்டர் வாங்கி குடுக்கனும்னு...! இதோ இப்ப இந்தளவுல வளைந்து நிக்கறேன்...!
இத ஒரு மேடைல சொன்னதுக்கு ஒரு எதிர்க்கட்சி பத்திரிக்கைகாரன் என்ன பார்த்து கேக்றான்..கட்சி ஆரம்பிச்ச சரி..அது என்ன தேசிய முற்போக்கு திராவிடம்..அதுக்கு என்ன அர்த்தம் சொல்லுன்னு..? நான் அந்த பத்திரிக்கைகாரன பார்த்து ஒன்னு கேக்றேன்...?
கண்ணு சிவக்க, புருவத்தை தூக்கி தூக்கி முறைச்சு பேசறது எவ்வளவு கஸ்டம் தெரியுமா உனக்கு...?
இதுக்கு பதில் சொல்ல சொல்லு அவன..அதுக்கப்றம் நான் அவனுக்கு பதில் சொல்றேன்..தேசிய முற்போக்கு திராவிடம்னா என்னான்னு...! அந்த மடபயகிட்ட நான் ஒன்னு கேக்குறேன்...அர்த்தம் தெரியாமயா என் பொண்டாட்டி அந்த பேர கட்சிக்கு வெக்க சொல்லிருப்பா..! கண்டிப்பா எதாச்சும் அர்த்தம் இருக்கும்..கட்சி ஆரம்பிச்ச புதுசுல என் மச்சான் சுதீஷ் கூட வந்து என்கிட்டே சொன்னாப்ல...கட்சி பேரு செம அர்த்தம் மச்சான்னு...! அப்பறம் எப்டிரா அர்த்தம் இல்லாம போகும் அறிவுகெட்டவனே...! யாருகிட்ட வந்து என்னா கேள்வி கேக்குற..?
எங்க விட்டேன்..ஏய் ச்சீ..அசிங்கமா நெனைக்காதீங்கடா..நான் பேசிகிட்ருந்தப்ப எங்க விட்டேன்னு கேக்குறேன்..
அக்காங்..புடிச்சிட்டேன்..!
அதனால நான் சொல்லிக்கறது ஒன்னே ஒண்ணுதான்..தமிழ்நாட்ல இருநூத்தி முப்பத்தி நாலு தொகுதி இருக்கு, அதுல ஒவ்வொரு தொகுதிலயும் முன்னூத்தி பதினைஞ்சு பார்பர் ஷாப் இருக்கு, ஐநூத்தி முப்பத்தி ஆறு டெய்லர் கடை இருக்கு, நானூத்தி எழுபத்தி மூணு மளிகை கடை இருக்கு, அறுபத்தி ஆறு மருந்து கடை இருக்கு,எதுக்கு இந்த கணக்கெல்லாம் இவன் இப்ப சொல்றான்னுதான யோசிக்கற...வேற என்ன சொல்றதுன்னு தெரிலடா எனக்கு..சொல்ல தெரிஞ்சா சொல்லிரமாட்டேன்.. !
அதனால ரொம்பல்லாம் டீட்டைல் கேக்காத..நான் கொலம்பிருவேன்...எனக்கு தேவை இந்த தேர்தல்ல நான் எப்டியாச்சும் ஜெய்ச்சாகனும்..சொன்ன நம்பமாட்ட, இந்த தேர்தல்ல எப்டியாச்சும் ஜெய்ச்சிர்லாம்னு சொல்லி என் பொண்டாட்டியோட தாலி நகை வரைக்கும் வாங்கி அடகு வெச்சிருக்கேன்..இதுல தோத்தேன் ,சோத்துக்கு சிங்கி அடிக்க வேண்டியதுதான்...அதுலயும் என் மச்சான் சுதீஷ் ரொம்ப மோசம்..கடுப்புல நான் குடிக்கற சரக்குல சயனைட கலந்தாலும் கலந்துருவான்..அதனால தயவு செஞ்சி எனக்கு வோட்டு போடுங்க...நம்ம கட்சி கொள்கை ஜெய்ச்சாகனும்..
என்ன எது நம்ம கொள்கையா...?
சொல்றேன் கேட்டுக்க..,
தமிழ்நாட்ல மொத்தம் முப்பத்தி ஆறாயிரத்து முன்னூத்தி நாப்பத்தி நாலு கக்கூஸ் இருக்கு..,
டேய் டேய் இருங்கடா...சொல்லி முடிச்சர்ரண்டா..ஏண்டா எல்லாரும் இப்டி ஓடுறீங்க...?
புரட்சி கலைஞர் விஜயகாந்த்
A article by Rettaivals and Veliyoorkaran.
********************************************************************************
35 விமர்சனங்கள் & விமர்சிக்க:
டேய் மச்சான், அந்த 1,22,452.10 ஆட்டோ ல ஒண்ண இங்க அனுப்பு
//தமிழ்நாட்ல மொத்தம் முப்பத்தி ஆறாயிரத்து முன்னூத்தி நாப்பத்தி நாலு கக்கூஸ் இருக்கு..,//
எதுக்கு இப்ப தொண்ட கிழிய கத்துற ..உனக்கு கக்கூஸ் அள்ளுற contract வேணுமா ரெட்டை ...கேப்டன் ஜெயிச்சா உனக்கு தான் அந்த கான்டிராகட் சரியா ..அதுக்கு போய் ஏன் இந்த கோவம்
:))))
கேப்டன் கேடட் ஆன கதை!
http://hooraan.blogspot.com/2011/03/blog-post_06.html
@@@@இம்சைஅரசன் பாபு..
எதுக்கு இப்ப தொண்ட கிழிய கத்துற ..உனக்கு கக்கூஸ் அள்ளுற contract வேணுமா ரெட்டை ...கேப்டன் ஜெயிச்சா உனக்கு தான் அந்த கான்டிராகட் சரியா..அதுக்கு போய் ஏன் இந்த கோவம்..///
மிகவும் திறமையாக மொக்கை போடுகிறீர்கள் திரு இம்சை அரசன் பாபு அவர்களே..!
(படிக்கும்போதே எரிச்சல் பத்திகினு வருது..! ஏண்டா இப்டி மொக்க கமென்ட் போட்டு கொல்றீங்க...?..)
@@@ஊரான
கேப்டன் கேடட் ஆன கதை!
http://hooraan.blogspot.com/2011/03/blog-post_06.html..///
மிகவும் சிறந்த பதிவு..அருமையாக எழுதியுள்ளீர்கள்...!
அடிக்கடி இது போன்ற பதிவுகளை தொடர்ந்து எழுதுங்கள்...! :)
@@@தனி காட்டு ராஜா
:))))..///
இந்த பையனுக்கு இத படிச்சோன்ன சிரிப்பு வருதாம்...!
அதான் ஸ்மைலி போட்ருக்காப்ள...!
(அப்டித்தான அண்ணன்...?) :)
@@@ganesh
டேய் மச்சான், அந்த 1,22,452.10 ஆட்டோ ல ஒண்ண இங்க அனுப்பு..//
அப்டியே அந்த ஆட்டோல நீனும் ஏறி நேரா மூத்தற சந்துக்கு வந்துரு மச்சி..! :)
//A article by Rettaivals and Veliyoorkaran.//
ஒரு போட்டோவ போட்டு நாலு வரி எழுதுவதருக்கு ரெண்டு பேரு ...(இன்னும் வயிறு பத்திகிட்டு எரியட்டும் ...)
''அவ அதுக்குள்ள அவ தம்பிகிட்ட போய் சொல்றா, உன்ட்ட அப்பவே சொன்னேன்ல, எனக்கு இந்த கருவாபய வேணாம், லுச்சாதனமா எதுனா பொலம்பிகிட்டே இருக்கானு...கேட்டியான்னு அழுதுகிட்டே பொலம்ப ஆரம்பிச்சிட்டா...! நான் என்ன பண்றதுன்னு தெரியாம போய் தண்ணியடிச்சிட்டு வழக்கம் போல வாந்தி எடுத்துட்டு தூங்கிட்டேன்..!''
சிரித்துக்கொன்டே இருந்தேன்
asaththalaana kaamadip pathivu..vaaltthukkal
கேப்டனக் கலாய்ச்சிட்டாங்கலாம்.
ஏண்டா ஈத்தரைங்களா எல்லாவனையும் இப்படியே நக்கல் பண்ணா, பொறவு எவன் தான் நாட்டக் காப்பாத்துறது???
பருப்பு (a) Phantom Mohan
March 12, 2011 12:10 AM
கேப்டனக் கலாய்ச்சிட்டாங்கலாம்
*****************************************************************
கண்டுபுடிச்சுட்டாராமாம்!
Rettaival's
March 12, 2011 1:25 AM
பருப்பு (a) Phantom Mohan
March 12, 2011 12:10 AM
கேப்டனக் கலாய்ச்சிட்டாங்கலாம்
*****************************************************************
கண்டுபுடிச்சுட்டாராமாம்!
//
ஹி..ஹி.. இன்னாங்கடா நடக்குது இங்கே..
ஒருத்தன் என்னடானா, துப்பறியறீங்களானு சொல்றான்.. அதுக்கு இவன், ஆமா.. கண்டுபிடிச்சிட்டியானு சொல்றான்..
ஏன்?..
கேப்டனை விட்டு, காலை தூக்கச்சொல்லனுமா?
கட்சி ஆரம்பிச்சமா, சம்பாரிச்சமா, இடம் வாங்கிப்போட்டமா,
மனைவி, துணைவி வெச்சுக்கிட்டு, போய் சேர்ந்தமானு இருக்கனும்..
ஏவனாவது நாட்டை திருத்தறேன், ங்கொய்யா.. பீக்காட்டை, சுடுகாட்டா மாத்தறேனு வந்தீங்க.. அரைப்படி மிளகாய் எடுத்து, கவட்டியில வெச்சுடுவோம்..
அக்காங்...
ஏன் மச்சி.. நீயாவது எனக்கு ஓட்டு போடேன்... தொண்டை தண்ணி வத்திப்போச்சி...
உடன்பிறப்பே.
நமீதாவை அனுப்பி, மச்சானைப் பிரித்தால்
பிரேமலதா, கத்துவாரா.. இல்லை கதறுவாரா?.
செய் என்று துடிக்கும் புஜத்தை,
அடக்கிகொண்டு, அமைதி காக்கும் உடன்பிறப்பே.
நான் செய் என்றால் செய்யாமல் இருக்கும் அளவுக்கா
உனது மூளை, களவாடப்பட்டுள்ளது?.
நில் உடன்பிறப்பே. கழகம் உன் சொத்து..
காதல் என் சொத்து.
கவிதை முத்தை வாயில் வைத்து
நீ களம் நோக்கி புறப்படு.
கலைஞர் வருவார் காலையில்.
கவிதை ஒழுகும் வாயோடு..
சென்று வென்று வா நட்பே
செந்தமிழ் உறவோடு...
@@@Rettaival's
பருப்பு (a) Phantom Mohan
கேப்டனக் கலாய்ச்சிட்டாங்கலாம்
*****************************
கண்டுபுடிச்சுட்டாராமாம்!///////
ஹா ஹா...! ஏண்டா இப்டி எல்லா பயலும் நக்கல் புடிச்சு திரியறீங்க...? :)
@@@@பருப்பு (a) Phantom Mohan
ஏண்டா ஈத்தரைங்களா எல்லாவனையும் இப்படியே நக்கல் பண்ணா, பொறவு எவன் தான் நாட்டக் காப்பாத்துறது???////
நீ வா மச்சி நம்ம ரெண்டு பெரும் சேர்ந்து காப்பாத்துவோம்..!
( யோவ் பட்டாப்பட்டி..பிரியாணி செஞ்சி செஞ்சி போர் அடிக்குதுயா..இன்னிக்கு நெறையா பருப்பு போட்டு சாம்பார் செய்வோமா...?) :)
@@@@பட்டாபட்டி....
கலைஞர் வருவார் காலையில்.
கவிதை ஒழுகும் வாயோடு..///
உனக்குள் இவ்வளவு திறமையா...ஐயகோ...!
பட்டாபட்டியாரே நீர் இனிமேல் "பதிவுலகின் திருவள்ளுவர்" என அழைக்கபடுவீர்கள்..!
திருவள்ளுவர் பட்டாப்பட்டி வாழ்க...திருவள்ளுவர் பட்டாப்பட்டி வாழ்க...!
(டேய் ரெட்டை நான் சொல்லல சனியன் சகடைய ப்ளூட் வாசிக்க சொல்றதுன்னு...அது இதுதான்...இப்ப வாசிப்பான் பாரு பட்டாப்பட்டி...! ) :)
"ஓட்ட போட்டேன்னு சொல்லாதே. வித்தேன்னு சொல்லு"
அண்ணன் அஞ்சாசிங்கம் புட்டுபுட்டு வைக்கிறார்.
டேய் ரெட்டை நான் சொல்லல சனியன் சகடைய ப்ளூட் வாசிக்க சொல்றதுன்னு...அது இதுதான்...இப்ப வாசிப்பான் பாரு பட்டாப்பட்டி...! ) :)//
அடப்போயா வெண்ணை.. செத்த பொணத்துக்கு ப்ளூட் வாசிக்கமாட்டான் இந்த பட்டாபட்டி..
@@@பட்டாபட்டி....
அடப்போயா வெண்ணை.. செத்த பொணத்துக்கு ப்ளூட் வாசிக்கமாட்டான் இந்த பட்டாபட்டி..////
பொணம்னாலே செத்ததுதான..? அது என்னய்யா புதுசா செத்த பொணம்...? பொணம் மறுபடியும் செத்துச்சா...?
அப்பாவியாய் கேள்வி கேட்டு பாவமாய் மூஞ்சை வெச்சுப்போர் சங்கம்..! :)
@@@Anonymous
அண்ணன் அஞ்சாசிங்கம் புட்டுபுட்டு வைக்கிறார்.///
இது பன்னிகுட்டி ராமசாமி...! :)
//பட்டாபட்டியாரே நீர் இனிமேல் "பதிவுலகின் திருவள்ளுவர்" என அழைக்கபடுவீர்கள்..!//
திருவள்ளுவருக்கு சிலை வைத்த மாதிரி, தலைவர் பட்டாபட்டிக்கு 'உக்காந்த' மாதிரியே ஒரு சிலை வைக்க வேண்டுகிறேன். :)
அண்ணே என்ன அண்ணே "முற்போக்கு" அர்த்தம் தெரியாதா அதன் ஆதவன் படத்துல புறம்போக்கு அர்த்தம் வடிவேலு விளக்கமா சொல்லிட்டாரே
செய் என்று துடிக்கும் புஜத்தை,
அடக்கிகொண்டு, அமைதி காக்கும் உடன்பிறப்பே.
நான் செய் என்றால் செய்யாமல் இருக்கும் அளவுக்கா
உனது மூளை, களவாடப்பட்டுள்ளது?.
நில் உடன்பிறப்பே. கழகம் உன் சொத்து..
காதல் என் சொத்து.
கவிதை முத்தை வாயில் வைத்து
நீ களம் நோக்கி புறப்படு.
கலைஞர் வருவார் காலையில்.
கவிதை ஒழுகும் வாயோடு..
சென்று வென்று வா நட்பே
செந்தமிழ் உறவோடு...
*****************************************
அடங்க மாட்றானே இவன்..
வெளி..(மானங்கெட்ட) பதிவுலக வாசர்களுக்கு பட்டாபட்டி எழுதுறதுன்னு ஒன்னு போடலாமா?
Rettaival's
@Pattapatti..//
அடங்க மாட்றானே இவன்..
வெளி..(மானங்கெட்ட) பதிவுலக வாசர்களுக்கு பட்டாபட்டி எழுதுறதுன்னு ஒன்னு போடலாமா?.////
எழுதிட்ருக்கேன் மச்சி..! நைட்டு போட்ரலாம்..! :)
ILLUMINATI has left a new comment on your post "(மானங்கெட்ட) தொண்டனுக்கு - கேப்டன் ரைட்டிங்-அக்காங...":
//பட்டாபட்டியாரே நீர் இனிமேல் "பதிவுலகின் திருவள்ளுவர்" என அழைக்கபடுவீர்கள்..!//
திருவள்ளுவருக்கு சிலை வைத்த மாதிரி, தலைவர் பட்டாபட்டிக்கு 'உக்காந்த' மாதிரியே ஒரு சிலை வைக்க வேண்டுகிறேன். :)
**************************************************************************
சிலையென்ன ....முதல்ல அவனுக்கு உலை வைக்கிறோம்...அப்புறமா பட்டாபட்டிக்கு விலை வைக்கிறோம்,!
எல்லாத்துக்கும் மேல மே 13 ம் தேதி பட்டாபட்டியை முதல்வராக்குறோம்...வெளியூரை எதிர்க்கட்சி தலைவராக்குறோம்! நான் தான் சபாநாயகர்! ஓக்கேவா!
யோவ் வெளி ..,
நீயா யா அப்பாவி ......,
/////// எழுதிட்ருக்கேன் மச்சி..! நைட்டு போட்ரலாம்..! : ///////
நடத்துங்க ..,ராசா ,தக்காளி எத்தனை பேர் ஜட்டி கிழிய போகுதோ ..,
//////// சிலையென்ன ....முதல்ல அவனுக்கு உலை வைக்கிறோம்...அப்புறமா பட்டாபட்டிக்கு விலை வைக்கிறோம்,! ///////
அறிவாலயம் பக்கத்துல வைங்க ..,நல்லா ரீச் ஆகும் ..,
/////// எல்லாத்துக்கும் மேல மே 13 ம் தேதி பட்டாபட்டியை முதல்வராக்குறோம்...வெளியூரை எதிர்க்கட்சி தலைவராக்குறோம்! நான் தான் சபாநாயகர்! ஓக்கேவா! ////////
அப்போ மகளிர் அணி ???????
ஐயோ... தேர்தல் களத்துக்கு இவனுக ரொம்ப சூடேத்துரானுகளே!!!
இவனுக எழுதுனது பொறுக்காம பட்டாபட்டிக்கு கவிதையெல்லாம் கூட வருதே...
மாப்ள முடியல மக்கள் பொழப்ப நெனச்சா கஷ்டமா இருக்கு!
Post a Comment