(மானங்கெட்ட) உடன்பிறப்பே, - A VELIYOORKARAN ARTICLE

|


அன்பு உடன்பிறப்பே.,


மு க எழுதுவது..

தேர்தலும் வந்துவிட்டது...உன் நினைவும் எனக்கு...!

என் செய்ய போகிறோம் என் கழக கண்மணியே...

நாம் என் செய்ய போகிறோம்..?

நாற்பதென்றார்கள்..முடியாதேன்றேன்..! ஐம்பதென்றார்கள்., முடிந்தால் பாரென்றேன்..! அறுபதென்றார்கள்.,மூஞ்சியை திருப்பி கொண்டேன்...! தக்காளி தூக்கிவிடுவோம் ராசாத்தியையும் கனிமொழியையும் என்றார்கள்...! பதறி போய் கொடுத்தே விட்டேன் என் கழக கண்மணியே..நான் குடுத்தே விட்டேன்...!

என் கழகமே அவர்கள்தானடா என் கண்மணியே...அவர்களை விட்டு நான் தனியே என் செய்வேன்...?

சில பட்டாபட்டி டவுசர் அணிந்த, கையில் பீடி வைத்த கோமான்கள் நம்மை ஏளனம் செய்யக்கூடும்! கலங்கிவிடாதே! அவர்களின் தீஞ்சொற்களை தீக்கிரையாக்க வேண்டாமா?

எப்படி சந்திக்கபோகிறோம் இத்தேர்தலை..மக்கள் விரோத தேர்தல் ஆணையத்தின் கிடுக்கிபிடிக்கிடையில் எப்படி மாற்ற போகிறோம் வாக்கு பெட்டிகளை..?

ஊழல் கலைஞரின் ஆட்சி முடியபோகிறதென சுடுகாட்டு நரிகளின் ஊளை ஆரம்பித்து விட்டது..மனசை திடமாக்கி கொள்..கண்மணியே...நாம் திராவிடர்கள்...நாம் பார்க்காத தேர்தல்கள் இல்லை..புறப்படு களம் நோக்கி..இந்த ஐந்தாண்டில் என்னடா செய்தீர்கள் கயவர்களே என மக்கள் காரி காரி மூஞ்சியில் உமிழ்வார்கள்...கழகக்கொடி எடுத்து மூஞ்சியை துடைத்துகொள்...கயவர்களில் சிலர் காரும்போது சளியும் சேர்ந்து வரும்..மனம் தளராதே...அதையும் துடைத்து ஜோப்பில் வைத்துகொள்...அன்னை தெரசா வழி வந்தவர்கள் நாம்..எச்சிலை துடைத்து எறிந்துவிட்டு சிரித்துக்கொண்டே வாக்கு கேள்..ஊழல் கட்சியை சேர்ந்த நாயே வெளியே போ என்பார்கள்..விம்மாதே...!

ஆம்.நாம் ஊழல் கட்சிதான்..யார் செய்யவில்லை ஊழல்..உன் தங்க தலைவன் நான் செய்யாத ஊழலா.?..இல்லை என் அன்பு தம்பி கன்னகதுப்பு துரைமுருகன் அடிக்காத காசா..? அல்லது சிரிச்ச மூஞ்சி ஆற்காடு வீராசாமிதான் உஷார் பண்ணாத துட்டா...என் அவ்ளோ தூரம் செல்கிறாய் என் அன்பு தம்பி..நான் பார்த்து டவுசரை நனைத்து நனைத்து விளையாடிய என் அன்பு பேரன் தயாநிதி அடிக்காத கோடிகளா...? இது அரசியல் தம்பி...நான் செய்வது வியாபாரம்..நாங்களெல்லாம் அடித்த பணத்தை பூசுனாபோல அடித்து பொத்துனாப்ல பாக்கெட்டில் போட்டுக்கொள்ளவில்லை!..? அந்த திறமை நம் ராசாவிடம் இல்லாதது தான் என் வருத்தமே...யாராலையும் உஷார் பண்ண முடியாத என் மகள் கனியையே உஷார் பண்ணியவர், மணியையும் உஷார் பண்ணிவிடுவார் என்று நம்பினேன்..லூசு கபோதி இப்புடி எங்கள வைத்துல அடிச்சு பாடையில ஏத்திட்டான்..மன்னித்து விடு உடன்பிறப்பே...கோவத்தில் கெட்டவார்த்தைகள் உள்நுழைந்துவிட்டது..!

ஊழலில் அறிவியலை புகுத்தியவர்கள் நாம்...எதோ ஒருமுறை ஸ்பெக்ட்ரம் ஊழலில் மாட்டிவிட்டோம் என பதறுதல் தவறு...எதிலும் மாட்டவில்லை இதில் மாட்டிவிட்டோம்..அவ்வளவே...காங்கிரஸ் மத்திய சர்க்கார் வரும் சூன் மாத இறுதியில் ஆ .ராசா குற்றமற்றவர் எனவும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனவும் அறிவித்து அவரை விடுதலையாக்கும்..அதற்கான ஆவணங்களும் கோப்புகளும் தயாரிக்கப்பட்டு மத்திய சர்க்காருக்கு அனுப்பட்டுவிட்டன...ஆகவே அரசியலில் மாட்டியதுதான் தவறே அன்றி, ஊழல் புரிவது தவறில்லை என கொள்..!

கூச்சமில்லாமல் கழகத்துக்கு வக்காலத்து வாங்கு..!

இன்னொரு முறை இரவு முழுதும் கண்விழித்து காமிராவெல்லாம் செட் பண்ணி கத்திக்கொண்டே ஜெயிலுக்குப் போவது கஷ்டமடா கண்மணியே.!

இதுதான் என் கடைசி தேர்தல் என்பேன்! இன்னும் மூன்று தேர்தலுக்கும் அதையே சொல்வேன்! கண்டுகொள்ளாதே கண்மணி! நீ இளிச்சவாயன் என்பதை மட்டும் மனதில் நிறுத்து. வீட்டை மறந்து கட்சி பணி செய்! நீ சிந்திக்க ஆரம்பித்தால் நானும் என் குடும்பமும் எங்கேயடா செல்வோம்?

ஆகவே திராவிட முன்னேற்ற கழகம் இத்தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும்..நான் இறக்கும் தருவாயில் மாநில சர்க்கார் ஒரு மகனிடமும், மத்திய சர்க்கார் ஒரு மகனிடமும் இருக்க வேண்டும்..இதுவல்லவோ உனக்கும் நம் தமிழினத்திற்கும் பெருமை..!

வரலாறு படைத்தவன் நான்..என்னை வாழ வை உடன்பிறப்பே..!

எனக்காக இதை மட்டும் செய் என் உடன்பிறப்பே..எப்போதும் போல, இது நான் உன்னிடம் மன்றாடி கேட்கும் என் இறுதி வேண்டுகோள்..!

நான் சொல்லுவதை எல்லாம் நீ திறம்பட செய்து முடிப்பாய் என எனக்குத்தெரியும் ..உன்னிடம் நான் மனம்திறந்து ஒன்றே ஒன்றை மட்டும் கேட்க வேண்டும்...!

அட அறிவுகெட்ட முட்டா பய மவனே ..இன்னுமாடா நீ என்ன நம்புற..?

கலைஞர் மு.கருணாநிதி

திராவிட முன்னேற்ற கழகம்..

--- Written by Veliyoorkaran
****************************************************

116 விமர்சனங்கள் & விமர்சிக்க:

பாரதசாரி said...

முட்டாளாக இருப்பது மக்களின் பிறப்புரிமை:-)

சாமக்கோடங்கி said...

எழுந்து நின்று விசிலடித்துக் கைத்தட்ட தோன்ற வைத்த பதிவு.. தல பின்னிட்டிங்க..

இதைக் கலைஞரே மேடை போட்டு வாசித்தாலும், கை தட்டி ஆர்ப்பரிக்கும் கூட்டம் தான் தமிழ் நாட்டில் உள்ளது என்று தெரியாதா கண்மணியே..

//சில பட்டாபட்டி டவுசர் அணிந்த, கையில் பீடி வைத்த கோமான்கள் நம்மை ஏளனம் செய்யக்கூடும்! கலங்கிவிடாதே!//

ஆமாம், அப்படியே இருட்டில் முக்காடு போட்டுக் கொண்டு கருப்பு வெள்ளையில் புகைப்படம் எடுத்துக் கொண்டு உள்ளூரில் இல்லாத சிலபேர் செய்யும் நக்கல் நையாண்டிகளைக் கண்டு துவண்டு விடாதே....

பட்டாபட்டி.... said...

சில பட்டாபட்டி டவுசர் அணிந்த, கையில் பீடி வைத்த கோமான்கள் நம்மை ஏளனம் செய்யக்கூடும்! கலங்கிவிடாதே! அவர்களின் தீஞ்சொற்களை தீக்கிரையாக்க வேண்டாமா?
//

நல்லவர்களை, உலகம் திட்டுவது சகஜம்தான்..
கலங்காதே பட்டாபட்டி..

நிரந்தர முதல்வர் மேல் துதிபாடி, நீதியை(?) நிலைநாட்ட பாடுபடுடா செல்லம்...

பட்டாபட்டி.... said...

அட அறிவுகெட்ட முட்டா பய மவனே ..இன்னுமாடா நீ என்ன நம்புற..?
//

யோவ்.. ஓவர் குசும்புயா உனக்கு!!!

பட்டாபட்டி.... said...

என்ன எளவோ சொல்லிக்கோ.. ஆனா மறக்காம உதயசூரியனுக்கு ஓட்டுப்போட்டு,
கழகத்தில ஐக்கியமாகிக்கோ..

-இப்படிக்கு கழக அடிமைகள்

Veliyoorkaran said...

@@@பாரதசாரி
முட்டாளாக இருப்பது மக்களின் பிறப்புரிமை:-)///

வாழ்த்துக்கள் :)

Veliyoorkaran said...

@@@சாமக்கோடங்கி
எழுந்து நின்று விசிலடித்துக் கைத்தட்ட தோன்ற வைத்த பதிவு.. தல பின்னிட்டிங்க..//

அன்பு கண்மணியே,, நீ தட்டிக்கொண்டே இரடா என் தங்கமே...!
உன் கைதட்டல்கள் திராவிடர்களின் உள்ளங்களில் பிரதிபளிக்கட்டும்...!
வெற்றி முரசு கொட்டட்டும்...!
நம் திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெறட்டும்...!
(இப்புடித்தான் புரியாம பேசி நாங்க ஆடியன்ச கொழப்பி எங்க கட்சில சேர்த்துடுவோம்...) :)

Veliyoorkaran said...

@@@பட்டாபட்டி....
என்ன எளவோ சொல்லிக்கோ.. ஆனா மறக்காம உதயசூரியனுக்கு ஓட்டுப்போட்டு,
கழகத்தில ஐக்கியமாகிக்கோ..-இப்படிக்கு கழக அடிமைகள்.///

ஏதாவது ஒரு அடிமையை இழுத்து வாரும் பட்டாபட்டியாரே...!
ரெட்டைவால்சில் ரெத்தம் பார்த்து வெகு காலமாகிவிட்டது...!

(வரவர ஏன்யா எவனும் நம்மக்கிட்ட சண்டைக்கு வரமாட்ரானுக...? ):)

ILLUMINATI said...

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தால காங்கிரெஸுக்கு 63 சீட் கொடுத்தது எல்லாம் ஒரு கேவலமே இல்ல.இத விட எவ்வளவோ கேவலம் எல்லாம் பார்துருக்கோம்.
எங்க தலைவன் சா(ணி)ணக்கியவாதி. எப்படி காங்கிரஸ சமாளிச்சாரு பார்த்தியா? அவரு சானக்கியத்த்தால தான் காங்கிரெஸ் எங்க கால்ல விழுந்து முன்ன சொன்ன 63 தொகுதிக்கே ஒத்துகிச்சு.
நம்புங்கய்யா,நம்புங்க ப்ளீஸ்..
யாராவது நம்புங்களேன்.

-இப்படிக்கு ஒரு திமுக அல்லக்கை.

ILLUMINATI said...

//வரவர ஏன்யா எவனும் நம்மக்கிட்ட சண்டைக்கு வரமாட்ரானுக...?//

ஏலேய்,நீ ரொம்ப நாள் நெட் வராததால பழைய ரூல் எல்லாத்தையும் மறந்துட்ட போல...
அவனுகளா எப்படா வந்தாணுக?நாம தான இழுத்து போட்டு வெட்டுவோம்.:)

Veliyoorkaran said...

@@@ILLUMINATI
எப்படி காங்கிரஸ சமாளிச்சாரு பார்த்தியா? அவரு சானக்கியத்த்தால தான் காங்கிரெஸ் எங்க கால்ல விழுந்து முன்ன சொன்ன 63 தொகுதிக்கே ஒத்துகிச்சு.////


பலே வெள்ளையத்தேவா...! அப்படி சொல்லடா என் சிங்கமே..!
நாம் அங்கே காலில் விழுந்து சோனியாவின் காலை சப்பியது தமிழகத்தில் ஒருவனுக்கும் தெரியக்கூடாது..
அப்படியே சமாளியடா என் சின்னஞ்சிறு சிறுத்தையே...! :)

Veliyoorkaran said...

@@@@ILLUMINATI
ஏலேய்,நீ ரொம்ப நாள் நெட் வராததால பழைய ரூல் எல்லாத்தையும் மறந்துட்ட போல...
அவனுகளா எப்படா வந்தாணுக?நாம தான இழுத்து போட்டு வெட்டுவோம்.:)///

அப்டியா சொல்ற..யோவ் பட்டாப்பட்டி நம்ப குண்டர் படைய விட்டு பதிவுலகத்துல இருக்கற எல்லா திமுக அல்லகைங்க ப்ளாக்லயும் இந்த லிங்க குடுத்து சண்டைக்கு இழுக்க சொல்லுயா..அவன் எவ்ளோ பெரிய டோமரா இருந்தாலும் சரி...!:)

பட்டாபட்டி.... said...

Heeeee

பட்டாபட்டி.... said...

அக்குள்ள மஞ்ச துண்டை வெச்சுக்கிட்டு  போனா,  ராமதாஷ் கிட்ட இருந்து  1  தொகுதி  வாங்கிக்கொடுப்பாரா  தலைவரு!

ILLUMINATI said...

//நாற்பதென்றார்கள்..முடியாதேன்றேன்..! ஐம்பதென்றார்கள்., முடிந்தால் பாரென்றேன்..! அறுபதென்றார்கள்.,மூஞ்சியை திருப்பி கொண்டேன்...! தக்காளி தூக்கிவிடுவோம் ராசாத்தியையும் கனிமொழியையும் என்றார்கள்...! பதறி போய் கொடுத்தே விட்டேன் என் கழக கண்மணியே..நான் குடுத்தே விட்டேன்...! //

தப்பா போச்சே மாப்ள! கூட்டிக் கொடுத்தே விட்டேன்னு இல்ல இருக்கணும்? :)

ILLUMINATI said...

//
என் கழகமே அவர்கள்தானடா என் கண்மணியே...அவர்களை விட்டு நான் தனியே என் செய்வேன்...? //

ஏலேய், அண்ணன மதிக்க மாட்டுராணுகடா...
மொழியே தெரியாம அண்ணன் அயல்நாட்டுக்கு ச்சே வடமாநிலத்துக்கு போய் கஷ்டப்படதுக்கு இவ்ளோ தான் மருவாதையா?
கொளுத்துல ஒரு கட்டிடத்த ...

- மதுரை அல்லக்கை...

ILLUMINATI said...

//ஊழலில் அறிவியலை புகுத்தியவர்கள் நாம்...எதோ ஒருமுறை ஸ்பெக்ட்ரம் ஊழலில் மாட்டிவிட்டோம் என பதறுதல் தவறு...எதிலும் மாட்டவில்லை இதில் மாட்டிவிட்டோம்..அவ்வளவே//

சர்க்காரியா சர்க்காரியா என்று மாநிலமே குமுறிய போது எப்படி சரக்கடித்துவிட்டு வாந்தியிலே படுத்துக் கிடந்து தேர்தல் வேலை பார்த்தாயோ,அதைப் போலவே இந்த முறையும் ஸ்பெக்ட்ரம் பிரச்சனையை மறக்க ரம் அடித்துவிட்டு வேலை பார் என் தங்கமே...

//இதுதான் என் கடைசி தேர்தல் என்பேன்! இன்னும் மூன்று தேர்தலுக்கும் அதையே சொல்வேன்! //

அப்போல்லோவில் போய் படுத்துக் கொண்டு அப்பாவியாய் முதுகு வலிக்கிறது, முட்டி வலிக்கிறது, கு.... வலிக்கிறது என்றெல்லாம் கண்ணீர் விட்டு பிச்சை கேட்பேன். கண்டு கொள்ளாதே!
பெரியார் சாகும் வரை தடியெடுத்துக் கொண்டே ஒரு கையில் யூரின் பேக் வைத்துக் கொண்டே ஊர் ஊராய் பிரச்சாரம் செய்தார் என்று ஏளனம் செய்வார்கள்.
உனக்கு தெரியாதா கண்மணியே, அதெல்லாம் நல்லது செய்ய பாடுபடுபவர்கள் அனுபவிக்க வேண்டிய தொல்லை. அதெல்லாம் எனக்கு எதற்கு?
தலைவன் மொழிக்காகத் தான் ஆஸ்பத்திரியில் கிடக்கிறான் என்று சொல்லியே வோட்டு புடுங்க வழி பார்.
கனிமொழிக்காகத் தானே என்று ஏளனம் பேசுவார்கள்.கண்டு கொள்ளாதே.
பத்தவில்லை என்றால்,நீ அடித்தது போக மிச்சமிருக்கும் பணத்தை கொடுத்து வோட்டு கேள்.

இப்படிக்கு,
மானாட மயிலாட தந்த 'எழுச்சி' தலைவர்,
கலைஞர் மு.கருணா'நிதி' .

Veliyoorkaran said...

@@@ILLUMINATI
தப்பா போச்சே மாப்ள! கூட்டிக் கொடுத்தே விட்டேன்னு இல்ல இருக்கணும்? :)///

ஐயகோ அவமானபடுத்துகிறார்களே வீணர்கள்..!
அது கூட்டிகொடுப்பது இல்லையடா பதரே...பொத்துனாப்ல விட்டு கொடுப்பது..! கொழப்பி கொள்ளாதே...என்னை வார்த்தைகளால் கொல்லாதே...! :)

முகமூடி said...

சூப்பர்ங்கண்ணாவோவ்

Veliyoorkaran said...

@@@ILLUMINATI
ஏலேய், அண்ணன மதிக்க மாட்டுராணுகடா...
மொழியே தெரியாம அண்ணன் அயல்நாட்டுக்கு ச்சே வடமாநிலத்துக்கு போய் கஷ்டப்படதுக்கு இவ்ளோ தான் மருவாதையா?
கொளுத்துல ஒரு கட்டிடத்த ...
- மதுரை அல்லக்கை...///

உள்ள மூணு பீசாச்சும் இருக்கணும்..கொளுத்தரதுக்கு முன்னாடி கன்பார்ம் பண்ணிக்க..!

Veliyoorkaran said...

@@@முகமூடி
சூப்பர்ங்கண்ணாவோவ்.///

எலேய் இலுமி...இவன வெட்றா மொதல்ல..!
வக்காளி எவ்ளோ சொன்னாலும் திருந்தமாட்ரானுவோ ...! :(

பட்டாபட்டி.... said...

யோவ்.. வெளியூரு..

தலைவர் தள்ளூ வண்டில போய் கால்ல விழந்ததை பார்த்து, நீ வீட்டை விட்டு வரமாட்டேனு பல பேர்கிட்ட பந்தயம் கட்டியிருக்கேன்..
இப்ப எதுக்கு இங்கன் ஆடிக்கிட்டு இருக்க?

பட்டாபட்டி.... said...

அண்ணே லக்கி அண்ணே..
கலைஞர் கை சுத்தமானது நான் சொன்னா, எல்லாப்பயலும், பின்னாடி சிரிக்கரானுகண்ணே..

நீங்க வந்து,.......... அனானியா வந்தாலும் பரவாயில்லண்ணே..

வந்து, தலைவர் சுத்தம்னு சொல்லி, லைட்டா வாந்தி எடுங்கண்ணே.. புண்ணியமா போகும்...

பட்டாபட்டி.... said...

யோவ் ரெட்டை..
நீயெல்லாம் ப்ளாக்கராய்யா?..

ஒரு கமென்ஸ் மாடரேஷன் இல்லை.. என்ன கர்மமோ?..

போய்யா.. போய் டோண்டுகிட்ட இருந்து பழகு...
உனக்கு பிடிச்ச கமென்ஸ்சை பப்ளிஸ் பண்ணி பெரியமனசுசன் ஆவியா?.. அதை விட்டுப்புட்டு...

பட்டாபட்டி.... said...
This comment has been removed by the author.
பட்டாபட்டி.... said...

இன்னொரு முறை இரவு முழுதும் கண்விழித்து காமிராவெல்லாம் செட் பண்ணி கத்திக்கொண்டே ஜெயிலுக்குப் போவது கஷ்டமடா கண்மணியே.!
//

ஏண்ணே.. அதை போட்டோஷாப்ல போட்டு, துண்டு கலர் மட்டும் மாத்திக்கலாம்..
technology improved so much...ஹி..ஹி

ILLUMINATI said...

ஏலேய் வெளி,

முகமூடி போட்டுட்டு வந்து கமெண்ட் போடுரவனுகளுக்கு எல்லாம் நான் கமெண்ட் போட மாட்டேன்.ஏன்னா நான் தத்தி. பத்தாப்புல பிட்டு அடிச்சு தான் நானு பாஸ் ஆனேன்.அதனால என்னால பதில் சொல்ல முடியலன்னா சாய்ஸ்ல விட்டுருவேன். எதுக்கு பதில் சொல்லணும்ங்கறது என் உரிமை. இந்த கமெண்ட் moderation வச்சுருக்கிறதே எனக்கு பிடிச்ச (அல்லக்கை) கமெண்ட்ட மட்டும் போட தான்.நான் பதில் பேச மாட்டேன்.உங்களுக்கெல்லாம் நான் நிறைய ஹிட் வாங்குறனேன்னு பொறாம.நான் என்ன ச...வா சொன்னேன்?
நானு எருமை தான். கூடி வாழும் மிருகமா தான் இருக்க விரும்புறேன். ஆமா, நான் தலைகனத்தில தான் எழுதுறேன். ஏன்னா, நான் லோகல்லு, பத்தாப்பு பெயிலு, பிரபல பதிவரு..
அக்காங்..

இப்படிக்கு,
பத்தாப்பு பெயிலான பிரபல பதிவர்.

வானம் said...

உடன்பிறப்பே,
இப்படியான ஒன்றிரெண்டு சொரணையுள்ள பதிவர்கள் போடும் வெற்றுக்கூச்சலால் டாஸ்மாக்கிலும், மார்பாட தொடையாடவிலும் மயங்கிக்கிடக்கும் தமிழினம் எழுந்திடாது.
பட்டாபட்டியில் கையிலுள்ள துண்டுபீடியின் சூட்டினால் இந்த சூரியன் மங்கிடாது.
வீறு கொண்டு எழு.
நம் மக்களிடம் மறதியுண்டு அளவுக்கு அதிகமாக.
நம்மிடமோ ஸ்பெக்ட்ரம் பணமுண்டு அதைவிட அதிகமாக.
கலங்காமல் உழைத்து,
கழகத்தை அரியணையில் ஏத்து.
வாழ்க கழகம்,
வளர்க என் குடும்பம்.
மு.க

பட்டாபட்டி.... said...

நானு எருமை தான். கூடி வாழும் மிருகமா தான் இருக்க விரும்புறேன். ஆமா, நான் தலைகனத்தில தான் எழுதுறேன். ஏன்னா, நான் லோகல்லு, பத்தாப்பு பெயிலு, பிரபல பதிவரு..//

அடடே.. லோக்கல்னா, வாயிலியே கால் கழுவுவியா மச்சி?...

பட்டாபட்டி.... said...

இப்படியான ஒன்றிரெண்டு சொரணையுள்ள பதிவர்கள் போடும் வெற்றுக்கூச்சலால்
//
இது ஓவரு.. எப்பய்யா எங்களுக்கு சொரணை இருக்குனு சொல்லியிருக்கோம்?.. ஹி..ஹி

Veliyoorkaran said...

@@@ILLUMINATI
ஏலேய் வெளி,
ஏன்னா, நான் லோகல்லு, பத்தாப்பு பெயிலு, பிரபல பதிவரு..
அக்காங்.இப்படிக்கு,
பத்தாப்பு பெயிலான பிரபல பதிவர்.///

அய்யோ நாராயணா...எண்டா இப்போ பத்து வரிக்கு மொக்கை போடற...! இப்ப உன்ட்ட நான் என்னடா கேட்டேன்..கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம எண்டா லூசு மாதிரி என்னென்னமோ சொல்ற..! உன்ன போடணும்டா மொதல்ல...!:)

பட்டாபட்டி.... said...

ஏண்ணே.. போட்டோவில தலைவர், சைடா திரும்பி பார்க்குறாரே.. யாரையா இருக்கும்?..

Veliyoorkaran said...

@@@வானம்
பட்டாபட்டியில் கையிலுள்ள துண்டுபீடியின் சூட்டினால் இந்த சூரியன் மங்கிடாது.//

Good one dude..! :)

Veliyoorkaran said...

@@@பட்டாபட்டி....
ஏண்ணே.. போட்டோவில தலைவர், சைடா திரும்பி பார்க்குறாரே.. யாரையா இருக்கும்?..///

Sona aunty...?

ஆமாம்..சோனா ஏன்யா ஆஸ்திரேலியா போனா..?

ILLUMINATI said...

இல்ல மச்சி, பிரபல பதிவர் ஒருத்தர் மாதிரி பேச ப்ராக்டிஸ் பண்ணி பார்த்தேன்.ஹிஹி...
பிரபல பதிவரா இருக்குறது ரொம்ப டஃப் யூ நோ? :)

Veliyoorkaran said...

@@@ILLUMINATI
இல்ல மச்சி, பிரபல பதிவர் ஒருத்தர் மாதிரி பேச ப்ராக்டிஸ் பண்ணி பார்த்தேன்.ஹிஹி...பிரபல பதிவரா இருக்குறது ரொம்ப டஃப் யூ நோ? :)///

யார்ரா அந்த லூசு..? எதுக்கு இப்புடி சுயசரிதை பாடுது அது...! அது லிங்க்க குடு...? :)

பட்டாபட்டி.... said...

ஆமாம்..சோனா ஏன்யா ஆஸ்திரேலியா போனா..?
//

அறுக்கதான் மச்சி.. இதையெல்லாம் பொதுவில சொன்னா, பெண்ணடிமைனு சொம்பத்தூக்கிட்டு வருவானுக.. அப்புறம் பட்டாபட்டில உச்சா போயிடுவேன்.. அக்காங்...

வானம் said...

////பட்டாபட்டி....
March 10, 2011 10:59 AM
இப்படியான ஒன்றிரெண்டு சொரணையுள்ள பதிவர்கள் போடும் வெற்றுக்கூச்சலால்
//
இது ஓவரு.. எப்பய்யா எங்களுக்கு சொரணை இருக்குனு சொல்லியிருக்கோம்?.. ஹி..ஹி/////

என்னது உனக்கு சொரனை இல்லையா? அப்ப பட்டாபட்டி பிரபல பதிவர் போல...
அப்படீன்னா சாரி கேட்டுகிறேன்

பட்டாபட்டி.... said...

யார்ரா அந்த லூசு..? எதுக்கு இப்புடி சுயசரிதை பாடுது அது...! அது லிங்க்க குடு...? :)//

ஏன்.. போய் முடி வெட்டி விடப்போறியா?.. விடு மச்சி.. நம்மக்கு ஓட்டு போடனும்னு தலையால பொறுப்பை கொடுத்திருக்காரு தலீவரு.. அதை விட்டுப்புட்டு, மண்டைய ஆட்டிக்கினு....

பட்டாபட்டி.... said...

என்னது உனக்கு சொரனை இல்லையா? அப்ப பட்டாபட்டி பிரபல பதிவர் போல...
அப்படீன்னா சாரி கேட்டுகிறேன்
//

இது நல்ல பையனுக்கு அடையாளம்.. சரி..சரி அப்படியே இன்னும் நாலு தொகுதி சேர்த்து வாங்கிக்கொடு.. ஆமாய்யா.. ராமதாஸுகிட்ட இருந்து புடிங்கித்தான்..


அன்புடன் சோனியா அடிமை...

பட்டாபட்டி.... said...

ஏம் மச்சி.. தலீவரு இப்படி பேசறாரே.. சே.. இவர் முடியாட்சியின் கீழ் நாம இருக்கு எம்புட்டு புண்ணியம் பண்ணியிருக்கனும்?...

ILLUMINATI said...

ஏலேய் வெளி,
உனக்கு அண்ணன தெரியாதா? உலகப் படங்களை எல்லாம் அக்கு வேறு ஆன்ட்டி வேறா ச்சே ஆணி வேறா பிரிச்ச அண்ணன தெரியாதா? சொம்புங்களுக்கு தெரிஞ்சா உன்னை கட்டி வச்சு....
குமுற குமுற அடிப்பாணுகளே..
சரி விடு,மெயில் அனுப்புறேன் வாங்கிக்க... :)

வானம் said...

//இது நல்ல பையனுக்கு அடையாளம்.. சரி..சரி அப்படியே இன்னும் நாலு தொகுதி சேர்த்து வாங்கிக்கொடு.. ஆமாய்யா.. ராமதாஸுகிட்ட இருந்து புடிங்கித்தான்..


அன்புடன் சோனியா அடிமை.../////

அஞ்சாவே எடுத்துக்கோ. ஆனா அதுல நாலு இத்தாலில இருக்கும். ஒண்ணு சுவிட்சர்லாந்துல இருக்கும்.

பட்டாபட்டி.... said...

அஞ்சாவே எடுத்துக்கோ. ஆனா அதுல நாலு இத்தாலில இருக்கும். ஒண்ணு சுவிட்சர்லாந்துல இருக்கும்.
//

யோவ்.. சூனா மானா.. இத்தாலில போயி இட்லி அவிக்கவா கேட்டேன்..
என் மூச்சு தமிழ்..
என் நாடு தமிழ்நாடு..
நான் தமிழன்..
அதனால.பார்த்துயா.. ஆந்திரானாலும் பரவாயில்ல.. அட்ஜஸ் பண்ணிக்கிறேன்.. இத்தாலி ரொம்ப தூரம்யா.. ஹி.ஹி

பட்டாபட்டி.... said...

டீவீட்ட்ட்ட்ட்ட்


ஒரே மேடையில் ஜெயலலிதா - விஜய் - விஜயகாந்த்!#நல்லவேளை.. திருநள்ளாரு போலாம் என இருந்தேன்.. வாழ்க தேர்தல்

Rettaival's said...

ஏலேய் வெளி,

முகமூடி போட்டுட்டு வந்து கமெண்ட் போடுரவனுகளுக்கு எல்லாம் நான் கமெண்ட் போட மாட்டேன்.ஏன்னா நான் தத்தி. பத்தாப்புல பிட்டு அடிச்சு தான் நானு பாஸ் ஆனேன்.அதனால என்னால பதில் சொல்ல முடியலன்னா சாய்ஸ்ல விட்டுருவேன். எதுக்கு பதில் சொல்லணும்ங்கறது என் உரிமை. இந்த கமெண்ட் moderation வச்சுருக்கிறதே எனக்கு பிடிச்ச (அல்லக்கை) கமெண்ட்ட மட்டும் போட தான்.நான் பதில் பேச மாட்டேன்.உங்களுக்கெல்லாம் நான் நிறைய ஹிட் வாங்குறனேன்னு பொறாம.நான் என்ன ச...வா சொன்னேன்?
நானு எருமை தான். கூடி வாழும் மிருகமா தான் இருக்க விரும்புறேன். ஆமா, நான் தலைகனத்தில தான் எழுதுறேன். ஏன்னா, நான் லோகல்லு, பத்தாப்பு பெயிலு, பிரபல பதிவரு..
அக்காங்..

இப்படிக்கு,
பத்தாப்பு பெயிலான பிரபல பதிவர்.
***********************************************************************
yaaruyya athu....ippadi kolappuranungale

வானம் said...

//இது நல்ல பையனுக்கு அடையாளம்.. சரி..சரி அப்படியே இன்னும் நாலு தொகுதி சேர்த்து வாங்கிக்கொடு.. ஆமாய்யா.. ராமதாஸுகிட்ட இருந்து புடிங்கித்தான்..


அன்புடன் சோனியா அடிமை...////

அன்புமகன் அன்புமணி: யோவ் பட்டா, எனக்கு ஸ்பெக்ட்ரம் மணியும் கெடைக்கல, ஸ்டெப்னியா கனியும் கெடைக்கல. அப்புறம் என்ன ம...ண்ணாங்கட்டிக்குய்யா இன்னும் நாலு சீட்டு அதிகமா குடுக்கணும்?

Veliyoorkaran said...

@@@@Rettaival's
***********************************************************************
yaaruyya athu....ippadi kolappuranungale./////

நம்ம ஜாக்கி சேகர் அண்ணனாம்டா...! இப்புடித்தான் பதிவு எழுதுவாப்லாயாம்..!:)

இத படிச்சு பாருவேன்..!
http://www.jackiesekar.com/2010/10/100.html

ILLUMINATI said...

ஏலேய் என்னல அண்ணன் பேர திடு திப்புன்னு உடைச்சுபுட்ட?அண்ணன் (இருக்கிற கொஞ்ச நஞ்ச) மானம் மரியாத என்னல ஆவுறது?மன்னிப்பு கேட்டு அண்ணன் காலில விழுல..

ILLUMINATI said...

அப்புறம் அண்ணன் ஜாக்கியின் "டீஜெண்டா" பதிவுகள் எல்லாம் இருக்கும் போது,இந்த பதிவை கொடுத்து அசிங்கப்படுத்த நினைத்த வெளியை கண்டிக்கிறோம்.நீங்க கவலைபடாதீங்க ஜாக்கி அண்ணே,கனிஞ்ச மரம் தான் கல்லடி படும்.
-இவன்,
பிட்டு மன்றம்,
ஜாக்கி அல்லக்கை.

பட்டாபட்டி.... said...

யோவ் பட்டா, எனக்கு ஸ்பெக்ட்ரம் மணியும் கெடைக்கல, ஸ்டெப்னியா கனியும் கெடைக்கல. அப்புறம் என்ன ம...ண்ணாங்கட்டிக்குய்யா இன்னும் நாலு சீட்டு அதிகமா குடுக்கணும்?
//

பின்னாடி கொஞ்சம் இடம் இருக்கு.. வாங்கி செருக்கிக்கலாம்னு பார்த்தேன்.. சரி விடு.. வெச்சு பொழச்சுப்போ. ஹி..ஹி...

Veliyoorkaran said...

@@@ILLUMINATI
நீங்க கவலைபடாதீங்க ஜாக்கி அண்ணே,கனிஞ்ச மரம் தான் கல்லடி படும்.///

"ஜாக்கிசேகர்" அண்ணன் அவர்களை எங்களுடன் சண்டையிட வருமாறு "வைக்கிங்வெளியூர்காரன்" அன்புடன் அழைக்கிறான்...! :)

Veliyoorkaran said...

@@@பட்டாபட்டி....

யோவ் பட்டாப்பட்டி...ஜாக்கி அண்ணன் நம்மகூட எல்லாம் சண்ட போடா வருவாப்லையா..?

அப்டி சண்டை வெச்சா யாரு பட்டாப்பட்டி ஜெய்ப்பா...? அண்ணனா இல்ல நானா....? :)

(டேய் இப்டியே போனா அமைதியா போகும்,,எவனாவது உள்ள பூந்து ஏத்தி விடுங்கடா...அப்பத்தான் வெறி ஏறும்..! )

பட்டாபட்டி.... said...

எங்களுடன் சண்டை//

கத்தி கத்திச் சண்டையா?.. போய்யா.. போய்.. உங்க தலீவனுக்கு கள்ள ஓட்டு
போட, ரெடி ஆகு....

Veliyoorkaran said...

@@@பட்டாபட்டி....
பின்னாடி கொஞ்சம் இடம் இருக்கு.. வாங்கி செருக்கிக்கலாம்னு பார்த்தேன்.. சரி விடு.. வெச்சு பொழச்சுப்போ. ஹி..ஹி...//

ஹா ஹா பட்டாப்பட்டி பேக் டு பார்ம்...! நச்சு வாத்யாரே...! :)

Veliyoorkaran said...

@@பட்டாபட்டி....
கத்தி கத்திச் சண்டையா?.///

நம்ம ஜாக்கி அண்ணன் ஜாக்கி..!
நான் வைக்கிங்கு...!
நீ என்னய்யா பட்டாபட்ட்டி..? :)

பட்டாபட்டி.... said...

யோவ்.. நம்ம த்லைவன் ,இன்னா சொல்லிக்கிராரு?

சண்டை போட்ட ரத்தம் வரும்..நாத்தமடிக்குமுனு, நேத்துகூட டீவீல பேசினார்ரே.. மறந்துக்கினியா?..

சத்தமே இல்லாம, நுங்கை பிதுக்கி , பல கோடி அடிச்ச நம்மகிட்ட யாருயா சண்டைக்கு வருவா?..

விடு..விடு...

பட்டாபட்டி.... said...

நம்ம ஜாக்கி அண்ணன் ஜாக்கி..!
நான் வைக்கிங்கு...!
நீ என்னய்யா பட்டாபட்ட்டி..? :)
//

நான் பூம்புகார் ஜட்டி பனியன்கள்...கேள்வியை பாரு..!!!

பட்டாபட்டி.... said...

@ரெட்டை
@வெளியூர்
@இலுமி

தங்கபாலுவும், தலைவரும் தொகுதி பங்கீடு பத்தி பேசராங்கலாம்..
இந்த ப்ளாக்கை யாராவது வந்து கேட்டா, ஓனர் வெளிநாடு போயிட்டாருனு சொல்லிடு..
:-)

Jey said...

கால் கட்டு போட்டவுடனே, தக்காளி, என்னமா பொருமுறான்யா...

நீ கண்டினியூ மாப்ள, ஏதும் பிராப்ளம்னா, பட்டாபட்டி நாடாவக் குடுத்தாவது காப்பாத்துவான்.

விக்கி உலகம் said...

தலைவரே சூப்பரு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சாணக்கியனுக்கே சாணக்கியம் சொல்லிக்கொடுத்த அரசியல் சாணி.. சே... ஞானி, அரசியலின் அரிச்சுவடி, இந்தியாவின் விடிவெள்ளி, தமிழகத்தின் நிரந்தர முதல்வர், தமிழினத்தலைவர், களிங்கர்ஜீ அவர்களின் அனல் பறக்கும் அதிரடி அரசியல் ஆட்டத்தின் விளைவாக, காங்கிரஸ் கட்சி 63 சீட்களை பெருமையுடன் பெற்று களிங்கர்ஜீ அவர்கள் துணையுடன் மக்களுக்கு தொண்டாற்றி மகிழ்ந்திட துடியாய் துடித்துக் கொண்டு இருக்கிறது..................

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சில பட்டாபட்டி டவுசர் அணிந்த, கையில் பீடி வைத்த கோமான்கள் நம்மை ஏளனம் செய்யக்கூடும்! கலங்கிவிடாதே! அவர்களின் தீஞ்சொற்களை தீக்கிரையாக்க வேண்டாமா?//////////

அண்ணே தப்பு பண்ணிட்டீங்களே...... தப்பு பண்ணிட்டீங்களே...? அது வெறும் பட்டாபட்டி டவுசர் இல்லீங்க, நாடா இல்லாத பட்டாபட்டி டவுசர்......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////இன்னொரு முறை இரவு முழுதும் கண்விழித்து காமிராவெல்லாம் செட் பண்ணி கத்திக்கொண்டே ஜெயிலுக்குப் போவது கஷ்டமடா கண்மணியே.! /////////

ங்ணா இதெல்லாம் சரிதானுங்ணா..... ஆனா அந்தக் காமிரா ஜெயா டீவி காமிரான்னு சொல்லாம மறைச்சுட்டீங்களே........!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////பட்டாபட்டி....
March 10, 2011 1:03 PM
@ரெட்டை
@வெளியூர்
@இலுமி

தங்கபாலுவும், தலைவரும் தொகுதி பங்கீடு பத்தி பேசராங்கலாம்..
இந்த ப்ளாக்கை யாராவது வந்து கேட்டா, ஓனர் வெளிநாடு போயிட்டாருனு சொல்லிடு..
:-)//////////

அவரு இத்தாலில இட்டிலி சாப்புட்டுக்கிட்டு இருக்காருன்னு சொல்லிடுங்கய்யா.....

Rettaival's said...

ஜாக்கின்னா...குதிரை ஓட்டுறவய்ங்களா!

Veliyoorkaran said...

@@@பன்னிக்குட்டி ராம்சாமி
அவரு இத்தாலில இட்டிலி சாப்புட்டுக்கிட்டு இருக்காருன்னு சொல்லிடுங்கய்யா..///

எலேய் பன்னி..கமெண்ட் போட்டது போதும்..மொக்க போடாம நீ மொதல்ல கெளம்பு...!

(ங்கொய்யால..இவன் மட்டும் எவ்ளோ திட்னாலும் திருந்தவே மாட்ரானே..)

Veliyoorkaran said...

@@@Rettaival's
ஜாக்கின்னா...குதிரை ஓட்டுறவய்ங்களா!///

இல்ல மாப்ள..அது ஒரு கம்பெனி ஜட்டி..பணக்காரங்க போடறது...!
(அதாம்டா பணக்கார பசங்க ஜீன்ஸ் போட்டு தொடை வரைக்கும் எறக்கி விட்டுட்டு ஜட்டிய காமிப்பானுகள்ள..! அந்த கம்பெனி ஜட்டி..!) :)

Rettaival's said...

தக்காளி ... அதான் பட்டாபட்டி அவனுக்குப் போட்டியா நினைச்சு இந்த ஊத்து ஊத்தறானா...

நீ வுடு பட்டு...உன்கிட்ட நாடா இருக்கு...அவன் கிட்ட அது இருக்குதா? நீ கெலிச்சுட்டே பட்டு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////Veliyoorkaran
March 10, 2011 3:06 PM
@@@பன்னிக்குட்டி ராம்சாமி
அவரு இத்தாலில இட்டிலி சாப்புட்டுக்கிட்டு இருக்காருன்னு சொல்லிடுங்கய்யா..///

எலேய் பன்னி..கமெண்ட் போட்டது போதும்..மொக்க போடாம நீ மொதல்ல கெளம்பு...!

(ங்கொய்யால..இவன் மட்டும் எவ்ளோ திட்னாலும் திருந்தவே மாட்ரானே..)///////

யோவ் நான் திருந்திடேண்யா.... என் ப்ளாக்ல பாருய்யா எம்புட்டு திருந்தி இருக்கேன்னு...... (எவ்வளவு சொன்னாலும் ஒத்துக்கவே மாட்டேங்கிறாய்ங்களே.....?)

Veliyoorkaran said...

@@@பன்னிக்குட்டி ராம்சாமி
யோவ் நான் திருந்திடேண்யா.... என் ப்ளாக்ல பாருய்யா எம்புட்டு திருந்தி இருக்கேன்னு...... (எவ்வளவு சொன்னாலும் ஒத்துக்கவே மாட்டேங்கிறாய்ங்களே.....?)///

எலேய் அயோக்ய படவா..உன்னதான் போக சொன்னேன்ல..!
இன்னும் என்னடா பண்ற இங்க ..?

(ஆமாம்..ப்ளாக்லாம் எழுதுறியா நீ..சொல்லவே இல்ல என்கிட்டே...!)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////Veliyoorkaran

(ஆமாம்..ப்ளாக்லாம் எழுதுறியா நீ..சொல்லவே இல்ல என்கிட்டே...!)////////

ஆமாங்ணா நானும் ரொம்ப நாளா ப்ளாக் எழுதி சமூக சேவை செஞ்சுக்கிட்டு இருக்கேன்...... http://shilppakumar.blogspot.com/2011/03/blog-post_09.html

ILLUMINATI said...

வெளி,

ஏலேய்,நீ வைகிங்ன்னா எங்கண்ணன் சொம்பு ச்சே.. கிங்குலே.

ILLUMINATI said...

ஏன்யா யோவ்,இம்புட்டு பேசுறீங்களே,எங்க கொய்யா ச்சே அய்யாவை யாராவது மதிச்சீங்களா ?அய்யா டவுசர்தாசு எம்புட்டு வருத்தப்படுவார்?

ஒரு வேளை அவர் அறிக்கை விட்டா இப்படி இருக்குமோ?

திமுக ஒரு குடிகார அரசு. நாட்டில் இந்த அளவுக்கு வேற யாருமே ஊழல் செய்ததே இல்ல.
அதே நேரம், ஏழைகளுக்கு நிறைய நன்மை செய்ததும் இந்த அரசு தான்.
பொம்பளைங்க சீரியல் பாத்து சாக வழி பார்த்த இதே அரசு தான், புருசனுங்க குடல் வெந்து சாக வீதி எல்லாம் டாஸ்மாக் திறந்தது.
இது போதாதுன்னு குடும்பமே சாக ரேசன் அரிசியும் தந்தது.
அதனால எங்க கூட்டணி வெல்லும்.

ILLUMINATI said...

//CBI to question Kanimozhi before March 31//

இது என்னங்கடா புது குண்டா இருக்குது?டேய்,சோழமுத்தா,போச்சா?

ILLUMINATI said...

//
தொகுதிகளை அடையாளம் காண்பதில் நெருக்கடி: தி.மு.க., - காங்கிரஸ் அடுத்த பலப்பரீட்சை. வி.ஐ.பி., தொகுதிகளை பட்டியலிட்டு, அதை மற்ற கட்சியினர் கேட்கக் கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஒரு தொகுதியைப் பெறுவதில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவும்போது, குலுக்கல் முறையில் ஒரு கட்சிக்கு அந்த தொகுதியை ஒதுக்க திட்டமிட்டுள்ளனர்.
//

பேசாம, 'உள்ள வெளிய' மூலமா முடிவு பண்ணுங்களேன்.ரொம்ப சுளுவா இருக்கும். :)

Rettaival's said...

திமுக ஒரு குடிகார அரசு. நாட்டில் இந்த அளவுக்கு வேற யாருமே ஊழல் செய்ததே இல்ல.
அதே நேரம், ஏழைகளுக்கு நிறைய நன்மை செய்ததும் இந்த அரசு தான்.
பொம்பளைங்க சீரியல் பாத்து சாக வழி பார்த்த இதே அரசு தான், புருசனுங்க குடல் வெந்து சாக வீதி எல்லாம் டாஸ்மாக் திறந்தது.
இது போதாதுன்னு குடும்பமே சாக ரேசன் அரிசியும் தந்தது.
அதனால எங்க கூட்டணி வெல்லும்.

***************************************************************

இது தி.மு.க கழட்டிவிட்டா விடறதுக்கு தயாரிச்ச அறிக்கை! இவன் கைல எப்படியோ கிடைச்சிருக்கு!

இலுமி...காமிக்ஸ் படிச்சு படிச்சு துப்பறியும் நரி ஆயிட்டான் போல!

பட்டாபட்டி.... said...

ஹா.ஹா  பேசாமா இந்த தடவை  நமீதாவ விட்டு  செலக்ட்  பண்ணச் சொல்லலாம். ஹி  ஹி  தங்கபாலு  டீலு  ஓகேயா?

Rettaival's said...

கலா மாஸ்டர் அப்போவே சொல்லுச்சு... கலைஞருக்கும் தங்கபாலுக்கும் கெமிஸ்ட்ரி நல்லாவே இல்லைன்னு...எவனாச்சும் கேட்டானுங்களா? இப்போ பாரு இன்னிக்கு நைட்டு அடிதடி நடக்கப் போகுது!

Veliyoorkaran said...

@@Rettaival's
கலைஞருக்கும் தங்கபாலுக்கும் கெமிஸ்ட்ரி நல்லாவே இல்லைன்னு... இப்போ பாரு இன்னிக்கு நைட்டு அடிதடி நடக்கப் போகுது!///

கலைஞர் தங்கபாலு, இவனுக ரெண்டு பேர் மண்டைலையுமே புடிச்சுகிட்டு சண்டை போட மசுரு இல்லையே மச்சி..க்ரிப்புக்கு எத புடிச்சு சண்ட போடுவானுக...? :)

( டேய் பட்டாப்பட்டி ....வேணாம்...சொல்லிராத...சொன்னா கேளு...! )

ILLUMINATI said...

@ரெட்ட,
யோவ்,போய்யா தமாசு...
டவுசர்தாசு பெட்டியே ச்சே பேட்டியே கொடுத்துருக்காரு.இந்த படிச்சு நாசமா போ!

தி.மு.க., அரசை எதிர்த்து போராடுவேன் : ராமதாஸ் பரபரப்பு பேட்டி
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=200812

ILLUMINATI said...

ஒரு சாம்பிள்...

ஐந்தாண்டு தி.மு.க., ஆட்சியில் நாலரை ஆண்டுகளுக்கும் மேலாக அந்தக் கட்சியையும், ஆட்சியையும் விமர்சித்தீர்கள். இப்போது எப்படி ஓட்டு கேட்பீர்கள்?

அவை அனைத்துமே ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள். இதை கலைஞரே சொல்லியிருக்கிறார். "தைலாபுரத்தில் இருந்து தைலம் வருகிறது'ன்னு சொல்லுவாரு

பட்டாபட்டி.... said...

ILLUMINATI

March 10, 2011 4:03 PM

@ரெட்ட,
யோவ்,போய்யா தமாசு...
டவுசர்தாசு பெட்டியே ச்சே பேட்டியே கொடுத்துருக்காரு.இந்த படிச்சு நாசமா போ!

தி.மு.க., அரசை எதிர்த்து போராடுவேன் : ராமதாஸ் பரபரப்பு பேட்டி
//

யோவ்.. இலிமி..

இழவு வீட்டுக்கு போயிருந்தியா?
தக்காளி.. அதை டவுசரு சொன்னது 6 ஆம் தேதி..
இன்னக்கு தேதி இன்னா?..

அவரு கண்டி பேசரப்போ, மினிட் கணக்குல அப்டேட் பண்ணி பேசிப்பழகு.. சொல்லீட்டேன்...

ILLUMINATI said...

இது மெகா தமாசு..

தி.மு.க., ஊழலற்ற, முறைகேடற்ற, அப்பழுக்கற்ற ஆட்சி நடத்தியது என உங்களால் பிரசாரம் செய்ய முடியுமா?

அந்த விமர்சனங்கள் இந்த நேரத்தில் தேவையில்லை. கூட்டணியில் இருந்து கொண்டு, இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல விரும்பலை. என்ன சொல்ல முடியும், சொல்லுங்க... ஆனா, ஏழை, எளிய மக்களுக்கு, உச்சகட்ட நன்மைகளைச் செய்திருக்கிறது இந்த அரசு. மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும், இந்த தி.மு.க., அரசால் பலனடைந்திருக்கிறது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். எந்த முதல்வரும் செய்யாத சாதனை இது.

Rettaival's said...

செய்திகளை முந்தி தருவது...இலுமினாட்டி!

யோவ் கலக்கறே! நியூஸ்பேப்பரில் வரும் கார்ட்டூனை மட்டும் தான் இலுமி படிப்பான் என்றாயே வெளியூர்காரா ...இப்போது என்ன சொல்கிறாய் இந்த பத்தரை மாற்றுத் தங்கத்தை!

ILLUMINATI said...

//அவரு கண்டி பேசரப்போ, மினிட் கணக்குல அப்டேட் பண்ணி பேசிப்பழகு.. சொல்லீட்டேன்...//

ஹாஹா...
இந்தா இது புதுசு..

பா.ம.க., தனி தேர்தல் அறிக்கை: ராமதாஸ் அறிவிப்பு
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=202695

ஆகாயமனிதன்.. said...

இதப் படிக்காதீங்க...(18+)

ILLUMINATI said...

யோவ், தனி அறிக்கை, நிழல் பட்ஜெட், நிழல் government ன்னு எங்கய்யா கலக்குறப்ப நானெல்லாம் எம்மாத்திரம்?

பட்டாபட்டி.... said...

ஆகாயமனிதன்..

March 10, 2011 4:15 PM

இதப் படிக்காதீங்க...(18+)
//

ஆகா.. விதி விதினு சொல்றாங்களே.. நம்புறீகளா?...
ஏண்ணே படிக்கவேண்டாமுனு சொல்லுறீக?

பட்டாபட்டி.... said...
This comment has been removed by the author.
பட்டாபட்டி.... said...

யோவ், தனி அறிக்கை, நிழல் பட்ஜெட், நிழல் government ன்னு எங்கய்யா கலக்குறப்ப நானெல்லாம் எம்மாத்திரம்?
//

அடப்பாவி.. அதுக்குத்தான் மரத்தை வெட்டினாரா?.. அது தெரியாம நானும் , ஏதோ இயற்கை, மழைனு வாய விட்டுப்புட்டேனே..!
:-(

Rettaival's said...

"ஆகாயமனிதன்"

- எப்டி பாஸ் தலைல ரெண்டு ஆண்டெனா இருக்குமா!

ILLUMINATI said...

//இலுமி...காமிக்ஸ் படிச்சு படிச்சு துப்பறியும் நரி ஆயிட்டான் போல!//

எப்படி மச்சி,நீ கவித எழுதி எழுதி முக்காடு போட்ட மாதிரியா? :)

இம்சைஅரசன் பாபு.. said...

ஹி ..ஹி ..நானும் வந்துட்டேன் படிச்சிட்டு வந்து விடுகிறேன்

பட்டாபட்டி.... said...

இம்சைஅரசன் பாபு.. has left a new comment on the post "(மானங்கெட்ட) உடன்பிறப்பே, - A VELIYOORKARAN ARTICL...":

ஹி ..ஹி ..நானும் வந்துட்டேன் படிச்சிட்டு வந்து விடுகிறேன்
//

ஆகா.. பயபுள்ள இது மாறி கமென்ஸ் போட்டா, இழுத்து வெச்சு அறுப்பானுகளே..
யோவ்.. ஓடிடு..க்விக்

Rettaival's said...

ILLUMINATI

March 10, 2011 4:23 PM

//இலுமி...காமிக்ஸ் படிச்சு படிச்சு துப்பறியும் நரி ஆயிட்டான் போல!//

எப்படி மச்சி,நீ கவித எழுதி எழுதி முக்காடு போட்ட மாதிரியா? :)

************************************************************************

யப்பா..இவன் பதில் சொல்ல முடியாதபடிக்கு கலாய்க்கிறானே...வெளியூரு ..நம்ம முக்காடு ரகசியத்தை வெளில சொல்லிடாத!

இம்சைஅரசன் பாபு.. said...

//ஹி ..ஹி ..நானும் வந்துட்டேன் படிச்சிட்டு வந்து விடுகிறேன்
//

ஆகா.. பயபுள்ள இது மாறி கமென்ஸ் போட்டா, இழுத்து வெச்சு அறுப்பானுகளே..
யோவ்.. ஓடிடு..க்விக்///

ஹி ..ஹி ...நான் என்ன புறமுதுகு காட்டி ஓட மாட்டேன் ..எங்க தலிவர் மாதிரி காலில் விழுந்து கெஞ்சி கூத்தாடி 63 சீட வாங்கினது மாதிரி ..நானும் காலில் வேணும்ன விழுவேன் தவிர ஓட மாட்டேன் மக்கா

பட்டாபட்டி.... said...

ஹி ..ஹி ...நான் என்ன புறமுதுகு காட்டி ஓட மாட்டேன் ..எங்க தலிவர் மாதிரி காலில் விழுந்து கெஞ்சி கூத்தாடி 63 சீட வாங்கினது மாதிரி ..நானும் காலில் வேணும்ன விழுவேன் தவிர ஓட மாட்டேன் மக்கா
//

தங்கபாலு பயலா நீ?.. நல்லா இருக்கியா செல்லம்?

பட்டாபட்டி.... said...

@Rettaival's



//இலுமி...காமிக்ஸ் படிச்சு படிச்சு துப்பறியும் நரி ஆயிட்டான் போல!//

எப்படி மச்சி,நீ கவித எழுதி எழுதி முக்காடு போட்ட மாதிரியா? :)

************************************************************************

யப்பா..இவன் பதில் சொல்ல முடியாதபடிக்கு கலாய்க்கிறானே...வெளியூரு ..நம்ம முக்காடு ரகசியத்தை வெளில சொல்லிடாத!

//

விடுயா..விடுயா..
இந்த மாசத்தோட சேர்ந்து 4 மாச வட்டி பாக்கி..

சொன்ன தேதிக்குள்ள வரலே.. தக்காளி.. இருக்குடி உங்களுக்கு...

இம்சைஅரசன் பாபு.. said...

//இந்த ஐந்தாண்டில் என்னடா செய்தீர்கள் கயவர்களே என மக்கள் காரி காரி மூஞ்சியில் உமிழ்வார்கள்...கழகக்கொடி எடுத்து மூஞ்சியை துடைத்துகொள்...//

ஏன் அதுக்கு மட்டும் கழக கோடி ..நம்ம பாட்டா கிட்ட இருந்து பட்டாபட்டிய உரிவிர வேண்டியது தானே ...(கொஞ்சம் கப்பு அடிக்கும் அவ்வளவு தான் )

இம்சைஅரசன் பாபு.. said...

//விடுயா..விடுயா..
இந்த மாசத்தோட சேர்ந்து 4 மாச//

ஹி ..ஹி ..யாரை 4 மாசம் ..?????????

இம்சைஅரசன் பாபு.. said...

//லூசு கபோதி இப்புடி எங்கள வைத்துல அடிச்சு பாடையில ஏத்திட்டான்..//

வயித்துல ஓங்கி அடித்தால் ..பின்னாடி சாணி தானே வரும் ....

இம்சைஅரசன் பாபு.. said...

//அட அறிவுகெட்ட முட்டா பய மவனே ..இன்னுமாடா நீ என்ன நம்புற..?//

என்ன ஒரு வில்லத்தனம் ......

Anonymous said...

pandaravada tamilan

neenga evlo than serupala adichalum, saniya karachi munjila oothi kari thupinalum, en kudumpatheye ammanama theruvula oda vitalum, ennoda kanmanigal thorathi thorathi adichalum tamilargale tamilgare ena neenga ena seidalum na sagaravara tamil tamil nu soliye kollaiadichite erupen

ரோஸ்விக் said...

டேய் நீங்க தி.மு.க. காரங்கன்னு கேள்விப்பட்டேன்... இப்போ சப்போர்ட் பண்றீங்களா? இல்ல கைமா பண்றீங்களா..?

ரோஸ்விக் said...

//என் கழகமே அவர்கள்தானடா என் கண்மணியே...அவர்களை விட்டு நான் தனியே என் செய்வேன்...? //

அவ்வளவு ஒன்னும் வயசாகிப்போகலை... வேணும்னா இன்னொரு கல்யாணம் பண்ணலாம். கட்சிக்கும் ஆள் சேர்த்தா மாதிரி இருக்கும்.

ரோஸ்விக் said...

//அல்லது சிரிச்ச மூஞ்சி ஆற்காடு வீராசாமிதான் உஷார் பண்ணாத துட்டா//

ஸ்பெல்லிங் மிஸ்டேக்குன்னு நினைக்கிறேன்... அது சிரிச்ச மூஞ்சியில்ல... சுரிச்ச மூஞ்சி. (வேணும்னா நாஞ்சில் சம்பத்-கிட்ட கேளு)

ரோஸ்விக் said...

//யாராலையும் உஷார் பண்ண முடியாத என் மகள் கனியையே உஷார் பண்ணியவர், மணியையும் உஷார் பண்ணிவிடுவார் என்று நம்பினேன்//

இது வேற நடந்ததா... உருப்பட்டுவிடும்...

ஹரிஹரன் said...

உங்களின் இந்த பதிவை தமிழ்நாடு டாக்கில் இணைத்துள்ளேன்.. இருந்தாலும் ஓவர் குசும்பய்யா உமக்கு கனியை உஷார் பண்ணியவர் மணியை உஷார் பண்ணுவதில் கோட்டைவிட்டுவிட்டார் என்று சொன்னதில்..

http://bit.ly/eMx4ab

Jayadev Das said...

\\அட அறிவுகெட்ட முட்டா பய மவனே ..இன்னுமாடா நீ என்ன நம்புற..?\\நான் ஒன்னும் உன்னை நம்பவில்லை தலைவா, தேர்தல் சமயத்தி நீ கொடுக்கும் பணம், கோழி பிரியாணி, சாராயம் இதற்க்கெல்லாம் நான் நன்றிக் கடன் பட்டவனாகி விடுகிறேன். ஓட்டுப் போடப் போகும் போது எனக்கு நேற்று நீ செய்த இந்த நன்மைகள் தான் ஞாபகத்துக்கு வருது, அஞ்சு வருஷம் நீங்க என்னை செருப்பால் அடித்தது மறந்து போய் விடுகிறது. தமிழன் நன்றியுள்ளவன் என்பது உங்களுக்கே தெரியும்தானே??

Anonymous said...

வீட்டுலே பெண்கள் யாரச்சும் கூப்பிட்டு உங்களுக்கு திருஷ்டி சுத்திப்போடச்சொல்லுங்க.... உண்மையில் நடந்து சம்பவம் ஒன்றை சொல்லுகிறேன். சிறிதும் கற்பனையில்லை. ஒரு முறை தனியறையில் தலைவர் கீழ் உள்ளாடை மாற்றும் சமயம் ஆர்வமிகுதியில் தொண்டர் ஒருவர் எட்டிப்பார்த்துவிட்டர் . அந்த தொண்டனை தே.... மவனே என்று வசவிட்டு வாழ்த்தியவர் இந்த கடிதம் கூட ஒரளவு அவர் எழுத கூட வாய்ப்புண்டு எனக்கு என்னவோ கற்பனையாக படவில்லை நீங்கள் எழுதியது.

senthil said...

hey rettaivalu un perla mattum thanu nenaichom unaku irukura kusumba patha athu unmaiyo nee antha anuman inathai sernthavanonu thonuthu .....keep it up rettai val payale.

பட்டாபட்டி.... said...

தனியறையில் தலைவர் கீழ் உள்ளாடை மாற்றும் சமயம் ஆர்வமிகுதியில் தொண்டர் ஒருவர் எட்டிப்பார்த்துவிட்டர் . அந்த தொண்டனை தே.... மவனே என்று வசவிட்டு வாழ்த்தியவர்
//

ஹி..ஹி.. நல்லவேளை.. அந்த தொண்டன், நம்ம வெளியூர்காரனு சொல்லமா விட்டதற்க்கு..!!

இதை படித்துவிட்டு டெலிட் பண்ணவும்..ஏன்னா.. இமேஜ் முக்கியம்..ஹி..ஹி

பட்டாபட்டி.... said...

senthil

March 11, 2011 12:33 AM

hey rettaivalu un perla mattum thanu nenaichom unaku irukura kusumba patha athu unmaiyo nee antha anuman inathai sernthavanonu thonuthu .....keep it up rettai val payale.

//

அண்ணே.. அப்படித்தான்ணே.. இந்த ரெட்டைப்பயலை , தூக்கிப்போட்டு மிதிங்கண்ணே..
சரிண்ணே,.. என்னமோ சொல்லியிருக்கீங்களே?.. இந்த இங்கிலீசு..அது இன்னா மேட்டரு?..

Hot Paradise said...

mudiyala...

Anonymous said...

it is too much crazy guys...

Post a Comment

 

©2009 Rettaival's Blog | Template Blue by TNB