RSS

பெருநகரத் தனிமைகள்



முகவரி அற்ற கடிதங்களின் தொகுப்பு

ஜன்னல் வழி பறக்க எத்தனிக்கும் காகிதங்கள்

கனவுகளில் முட்டி மோதும் நினைவலைகள்

மையப்புள்ளி விலகிகொண்டே இருக்கிறது

அறை முழுக்க பரவி வரும் தனிமை

தனிமை மறக்க நிகழும் சந்திப்புகள்

சந்திப்புகள் தரும் அலுப்பு

அலுப்புகள் தரும் அனுபவங்கள்

ஊடுபாவும் ஒற்றைக் கதிரின் சலனம்

டம்ளரில் அடங்கிவிடும் தண்ணீர்

ஒளிவிலகல் பற்றிய எவனோ ஒருவனின் குறிப்புகளில்

மனவிலகல் பற்றியும் ஏதேனும் இருக்கக்கூடும்...

முன்னிரவு தரும் போதை

பின்னிரவு தரும் தத்துவம்

அதிகாலை தரும் ஆர்ப்பரிப்புகள் என

பெருநகரத் தனிமைகள் யாவும் பிரசித்தி பெற்றவை!

***************************************************************************
  1. Veliyoorkaran

    Saturday, July 17, 2010

    மச்சான் சூப்பர்டா...!

  1. ILLUMINATI

    Saturday, July 17, 2010

    //அறை முழுக்க பரவி வரும் தனிமை
    தனிமை மறக்க நிகழும் சந்திப்புகள்
    சந்திப்புகள் தரும் அலுப்பு
    அலுப்புகள் தரும் அனுபவங்கள்//

    இது சூப்பர். :)

  1. Anonymous

    Sunday, July 18, 2010

    Simply Superb

  1. Jey

    Tuesday, July 20, 2010

    //முன்னிரவு தரும் போதை

    பின்னிரவு தரும் தத்துவம்//

    இது நல்லருகே...( மூளைக்காரம்ப்போல, கவுஜயெல்லாம் எழுதுது)

  1. ரோஸ்விக்

    Saturday, July 24, 2010

    நல்லாயிருக்கிற மாதிரிதான் இருக்கு...


    //Veliyoorkaran said...
    மச்சான் சூப்பர்டா...!
    //

    ஆனா இவன் சொல்றதை நம்பாத... ஏதாவது ஜன்னல் வழியா போற அட்டு பிகரை பார்த்து சொல்லிருப்பான்.

  1. Yazhini

    Saturday, July 24, 2010

    A good work, but i feel some incompleteness.

  1. Rettaival's Blog

    Sunday, July 25, 2010

    உங்கள் கருத்துகளுக்கு நன்றி யாழினி!ஏதோ ஒன்று குறைவதை ஒத்துக்கொள்கிறேன்.அது என்ன என்றுதான் எனக்கும் தெரியவில்லை!

  1. Yazhini

    Sunday, July 25, 2010

    Kuraikalai kalainthu kavithaikalin meruku koota vazhthukkal

  1. Unknown

    Tuesday, August 03, 2010

    பெருநகரத் தனிமை துயரமானது.. ஏதோ ஒன்றல்ல நிறைய குறையும் தனிமைகள் கடக்கும்போது
    கூடவே வந்தும் விட்டன தனிமையற்ற சூழலிலும்...

  1. a

    Tuesday, August 03, 2010

    //பெருநகரத் தனிமைகள் யாவும் பிரசித்தி பெற்றவை!//

    அழகா சொல்லி இருக்கீங்க...

  1. Lali

    Wednesday, March 16, 2011

    முன்னிரவு தரும் போதை

    பின்னிரவு தரும் தத்துவம்

    அதிகாலை தரும் ஆர்ப்பரிப்புகள் என

    பெருநகரத் தனிமைகள் யாவும் பிரசித்தி பெற்றவை!


    உணர்ந்து உளறும் வரிகள்...
    கொடுமையும் இல்லை, இனிமையும் இல்லை.. இந்த தனிமை

Post a Comment