RSS

யாவுமாலான இவ்வுலகம்



வேதியியல் படிப்பித்தவர்  அணுக்களாலானது என்றார்

இயற்பியல் ஆசிரியர்  கதிர்களாலானது என்றார்

தமிழ் கற்பித்தவர்  வார்த்தைகளாலானது என்றார்

வரலாறு பயிற்றுவித்தவர்  சம்பவங்களானது என்றார்

புவியியல் போதித்தவர் கற்களாலானது என்றார்

கணிதம் கற்பித்தவர் எண்களாலானது என்றார்

தத்துவம் பேசியவர்  எண்ணங்களாலானது என்றார்

நாடகம் கற்பித்தவர் காட்சிகளாலானது எனவும்

மதத்தைப் போதித்தவர் விதியாலனதெனவும் உரைத்தனர்.

நேற்றிரவு உலகம் கனவில் வந்தது.

எதனாலானதென கேட்டபொழுது

நகைத்தபடி கனவிலிருந்து அகன்றது உலகம்.

யாவுமாலான இவ்வுலகம் பொய்களாலும் ஆனது

*************************************************************************
  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Thursday, May 13, 2010

    ரெட்டை, நமக்கு திருப்பி கிடச்சுட்டான்லே..
    அதை கொண்டாட்டி, பதிவுலகம் நம்மளை மதிக்காது மக்கா..

    எனவே..வரும் சனிக்கிழமை, சிங்கை மற்றும் சென்னையை சேர்ந்த
    மாபெரும் பதிவர்கள்..கண்ணகி சிலை முன்,
    கும்மியடிக்க கூடலாம் என பொதுக்குழு முடிவு செய்துள்ளது..

  1. jillthanni

    Thursday, May 13, 2010

    பக்கா பக்கா...
    நல்லாயிருக்கு...

  1. Veliyoorkaran

    Thursday, May 13, 2010

    You suppose to post this one in Athmaa..!

    You cheater...!

    Nowadays you started forgetting Aathma..!

  1. Veliyoorkaran

    Thursday, May 13, 2010

    @@@@எதனாலானதென கேட்டபொழுது
    நகைத்தபடி கனவிலிருந்து அகன்றது உலகம்.
    யாவுமாலான இவ்வுலகம் பொய்களாலும் ஆனது///

    பின்ர வாத்யாரே...சோக்கா கீதுமே..!!

  1. Unknown

    Thursday, May 13, 2010

    பிரமாதம் சார் ...

  1. அரபுத்தமிழன்

    Thursday, May 13, 2010

    எல்லோரையும் கேட்டீங்க, பதிவர்களைக் கேட்க வில்லையே :-)

    நல்லாருக்கு சிந்தனை.

  1. Aba

    Thursday, May 13, 2010

    பின்னிட்டிங்க போங்க... வாலுன்னா சும்மாவா?

  1. MUTHU

    Friday, May 14, 2010

    ரெட்டை ரொம்ப நல்லா எழுதி இருக்க

  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Sunday, May 16, 2010

    ஆனா.. ரெட்டை..அப்பப்ப வரே.. ஒரு பதிவ போடறே..
    காணாம போறே.. என்ன நடக்குது?.

  1. Rettaival's Blog

    Sunday, May 16, 2010

    ஆணி அதிகமய்யா...நேத்து மதுரை...இந்த வாரமும் கொஞ்சம் அலைய வேண்டியிருக்கு! நல்லா வெய்ட்டா யாராவது வரண்டிழுத்தா சொல்லு...வந்து கும்மில கலந்துக்கறேன்!

  1. Rettaival's Blog

    Sunday, May 16, 2010

    Thanks jilthanni...(வெயிலுக்கு அப்புறம் என்ன பேரு வைக்கிறேன்னு பார்க்கணும்!)

    K.R.P.Senthil, Kari, and Muthu!

  1. Rettaival's Blog

    Sunday, May 16, 2010

    அரபுத்தமிழன் said...

    எல்லோரையும் கேட்டீங்க, பதிவர்களைக் கேட்க வில்லையே :-)

    நல்லாருக்கு சிந்தனை.

    ********************************************
    பதிவர்களை கேட்டிருந்தா என்ன சொல்லியிருப்பாங்க அரபு தமிழன்?

  1. தேசாந்திரி-பழமை விரும்பி

    Monday, May 17, 2010

    //பதிவர்களை கேட்டிருந்தா என்ன சொல்லியிருப்பாங்க//
    பின்னூட்டங்களால் ஆனது ;)

  1. அரபுத்தமிழன்

    Tuesday, May 18, 2010

    //பின்னூட்டங்களால் ஆனது//

    :-))

    மட்டுறுத்தலில்லாததுவா ?

Post a Comment