RSS

சில காதல் கவிதைகள் அலுப்பதேயில்லை




சில காதல் கவிதைகள் அலுப்பதேயில்லை
நிலா வானம் கடல்தீரம்
வெற்றுத்தாள்களில் மந்திரம்
உச் கொட்டும் கதவுகள்
அலமாரியில் உறங்கும் நினைவுகள்
யாருக்காக இதெல்லாம்
வேற்றுக்கிரகவாசிகளுடன் தொடர்பு கொள்ளலாகாது
என்கிறான் ஸ்டீஃபன் ஹாகிங்க்ஸ்
முன்னாள் காதலிகளோடும் என்கிறான் தனபால்
தனபால் பொய் சொல்வதரிது
தனபால் காதலில் தோற்றவன்
மீண்டும் மீண்டும் தோற்றவன்
தோற்றவன் சொல்லுக்கு மதிப்பதிகம்
தோற்றுப்போன காதல்களே கவனிக்கப்படுகின்றன
காதல்கள் தெய்வீகமானவை
தெய்வீகமானவை அனைத்தும் பொய்கள்
பொய்களால் காதல் உருவாகிறது
உலகம் உருண்டை என்பது விஞ்ஞானம்
விஞ்ஞானம் விளக்கம் கேட்டு நிற்கிறது
விளக்கங்கள் சொற்களாலானது
சொற்கள் இடம் மாறுகின்றன
இடம் மாறுதல் இயற்கை
இயற்கை புதிரானது
எல்லாப் புதிர்களுக்கும் விடைகளுண்டு
விடையில்லாப் புதிருக்கு வாழ்க்கை எனப் பெயர்
எனினும் சகவாசியே!
சில காதல் கவிதைகள் அலுப்பதேயில்லை
*************************************************************************************
  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Tuesday, November 30, 2010

    சமீபத்தில சாருவ, எங்கேயாவது கிட்டக்க பார்த்தியா?..

    இரண்டு ஏலுமிச்சம்பழம் வாங்கி..பிழிந்து... விளக்கெண்ணையோடு சேர்த்து..
    சூரிஉஅன் வரும்முன், வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால்.. இந்தநாள் மட்டுமில்லை.. எல்லா நாளும் இனிதாய் கழியும்..

    கவிதைக்கும் எனக்கும் காத தூரன் என்பதையும் தன்னடக்கத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன்..

  1. Veliyoorkaran

    Tuesday, November 30, 2010

    @Rettaivals.//
    சில காதல் கவிதைகள் அலுப்பதேயில்லை.///

    உண்மைதான்..!
    காதல் கவிதைகள் காதலிகளை போல..!
    சில காதல் கவிதைகள் அலுப்பதே இல்லை...,
    அவ்வபோது சில காதலிகளும்..!

  1. Veliyoorkaran

    Tuesday, November 30, 2010

    @@Rettaivals.//
    தனபால் பொய் சொல்வதரிது
    தனபால் காதலில் தோற்றவன்
    மீண்டும் மீண்டும் தோற்றவன்
    தோற்றவன் சொல்லுக்கு மதிப்பதிகம்
    தோற்றுப்போன காதல்களே கவனிக்கப்படுகின்றன.//

    தனபாலுக்கு பதில் நீ வெளியூர்க்காரன்னு போட்ருக்கலாம்...! :)

  1. Veliyoorkaran

    Tuesday, November 30, 2010

    @@Rettaivals.//
    காதல்கள் தெய்வீகமானவை
    தெய்வீகமானவை அனைத்தும் பொய்கள்
    பொய்களால் காதல் உருவாகிறது.//

    Good one dude.. :)

    Real treat after a long gap. :)

  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Tuesday, November 30, 2010

    @Veliyoorkaran said...
    Good one dude.. :)
    Real treat after a long gap. :)
    //

    நல்லா ஏத்திவிடு.. விடாதே..

    ஆமா.. உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா?.. சத்தமே காணோம்?

  1. ஜெயந்த் கிருஷ்ணா

    Tuesday, November 30, 2010

    சில காதல் கவிதைகள் அலுப்பதேயில்லை

  1. Arun Prasath

    Tuesday, November 30, 2010

    ஒரு மார்கமா நல்ல தான் இருக்கு

  1. கருடன்

    Tuesday, November 30, 2010

    யார் பெத்த புள்ளை தெரியல இப்படி பொலம்புது... பாவாம்... அதுக்கு இரண்டு புள்ளை தாளம் போடுது...யோ பட்டா வா நாம எப்பவும் போல யாராவது சிக்கரானா பாக்கலாம்... இவனுங்க லவ் பண்ணி சாகட்டும்...ச்சீ... வாழட்டும்.. :))

  1. Anonymous

    Tuesday, November 30, 2010

    சில அல்ல..
    பல காதல் கவிதைகள் அலுப்பதேயில்லை..

  1. Veliyoorkaran

    Tuesday, November 30, 2010

    @@@இந்திரா said...
    சில அல்ல..
    பல காதல் கவிதைகள் அலுப்பதேயில்லை..///

    காதல் கவிதைகள் மட்டுமல்ல இந்திரா...
    காதல் சம்பந்தப்பட்ட எதுவுமே அலுப்பதில்லை..
    ஆம்.,அவை அலுப்பதே இல்லை..!

    பீலிங் பத்திரி ரைடுடன்
    வெளியூர்க்காரன் :)

  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Tuesday, November 30, 2010

    Veliyoorkaran said...

    @@@இந்திரா said...
    சில அல்ல..
    பல காதல் கவிதைகள் அலுப்பதேயில்லை..///
    //


    சரி..சரி...


    :-)

  1. கருடன்

    Tuesday, November 30, 2010

    @Veliyoorkaran

    //காதல் கவிதைகள் மட்டுமல்ல இந்திரா...
    காதல் சம்பந்தப்பட்ட எதுவுமே அலுப்பதில்லை..
    ஆம்.,அவை அலுப்பதே இல்லை..!//

    பட்டா பாருயா பீல் பண்றாராம்... ல்வ்வுனு சொன்னாலே இந்த பய ஓவரா நெஞ்ச நக்கரான்... இதுல ரிப்ளை வேற போடராரு...

  1. ♔ℜockzs ℜajesℌ♔™

    Tuesday, November 30, 2010

    ரைட்டு , என்ன மோ சொல்ல வரிங்க ஆனா ஒன்னுமே பிரியல . . .

  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Tuesday, November 30, 2010

    TERROR-PANDIYAN(VAS) said...

    @Veliyoorkaran

    //காதல் கவிதைகள் மட்டுமல்ல இந்திரா...
    காதல் சம்பந்தப்பட்ட எதுவுமே அலுப்பதில்லை..
    ஆம்.,அவை அலுப்பதே இல்லை..!//

    பட்டா பாருயா பீல் பண்றாராம்... ல்வ்வுனு சொன்னாலே இந்த பய ஓவரா நெஞ்ச நக்கரான்... இதுல ரிப்ளை வேற போடராரு...
    //

    டெரர்.. இப்ப பாரு.. நான் சொன்னதுக்கோ..இல்ல ரெட்டை சொன்னதுக்கோ உருகினானா?..

    விடு.. பய மந்திரிச்சு விட்டமாறி சுத்திகிட்டு இருக்கான்..

    வராமலா போயிடுவான்...

  1. எஸ்.கே

    Tuesday, November 30, 2010

    //விடையில்லாப் புதிருக்கு வாழ்க்கை எனப் பெயர்//
    அற்புதம்!

  1. செல்வா

    Tuesday, November 30, 2010

    //தோற்றவன் சொல்லுக்கு மதிப்பதிகம்
    தோற்றுப்போன காதல்களே கவனிக்கப்படுகின்றன
    காதல்கள் தெய்வீகமானவை//

    அப்படின்னா லவ் பண்ணி தோத்து போனாதான் உலகம் மதிக்கும்னு சொல்லுறீங்களா ..?

  1. செல்வா

    Tuesday, November 30, 2010

    //இயற்கை புதிரானது
    எல்லாப் புதிர்களுக்கும் விடைகளுண்டு
    விடையில்லாப் புதிருக்கு வாழ்க்கை எனப் பெயர்
    எனினும் சகவாசியே!
    சில காதல் கவிதைகள் அலுப்பதேயில்லை//

    ஐயோ , கலக்கிட்டீங்க போங்க ..!!

  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Tuesday, November 30, 2010

    ஐயோ , கலக்கிட்டீங்க போங்க ..!!
    //

    பார்த்து.. அப்படியே டோமர் ப்ளாக்ல் போய் எடுங்க.. இங்க ரொம்ப சுத்தம் பார்க்கிறவங்க...

  1. ILLUMINATI

    Tuesday, November 30, 2010

    // சில காதல் கவிதைகள் அலுப்பதேயில்லை //

    //காதல் கவிதைகள் காதலிகளை போல..!
    சில காதல் கவிதைகள் அலுப்பதே இல்லை...,
    அவ்வபோது சில காதலிகளும்..! //

    சில செருப்புகள் எம்புட்டு அடிச்சாலும் பிய்வதே இல்லை !

    அதுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது மச்சி! ;)



    //No matter who I am...What matters is How I am!//

    ஹெஹெ,ரெண்டுக்குமே பதில் ரொம்ப சிம்பிள்!

    முக்காடு போட்ட மூதேவி! ;)

    //அற்புதம்! //

    யோவ்,இதுல என்ன எழவு அற்புதத்த கண்டுட்ட நீ? எனக்கு தெரிஞ்'சாவனும்'!
    உன்னைய எல்லாம் ஒரு நாள் பூரா இந்த பயலோட அவன் தண்ணி அடிக்குறப்ப விட்டு கதவ பூட்டிடனும்.அப்ப தான் தெரிய வரும் உனக்கு...

    வாந்தின்னா என்னன்னு.. :P

  1. பன்னிக்குட்டி ராம்சாமி

    Tuesday, November 30, 2010

    ஓ கவிதையா.. சாரி சார்..சாரி..சார்.. படிச்சிட்டு வாரென்!

  1. பன்னிக்குட்டி ராம்சாமி

    Tuesday, November 30, 2010

    ////////பட்டாபட்டி.... said...
    ஐயோ , கலக்கிட்டீங்க போங்க ..!!
    //

    பார்த்து.. அப்படியே டோமர் ப்ளாக்ல் போய் எடுங்க.. இங்க ரொம்ப சுத்தம் பார்க்கிறவங்க... //////////

    எத?

  1. பன்னிக்குட்டி ராம்சாமி

    Tuesday, November 30, 2010

    ////Veliyoorkaran said...
    @Rettaivals.//
    சில காதல் கவிதைகள் அலுப்பதேயில்லை.///

    உண்மைதான்..!
    காதல் கவிதைகள் காதலிகளை போல..!
    சில காதல் கவிதைகள் அலுப்பதே இல்லை...,
    அவ்வபோது சில காதலிகளும்..! /////

    அப்போ ஆட்டோகிராப்பு வால்யூம் வால்யூமா இருக்குன்னு சொல்லு?

  1. தமிழ்த்தோட்டம்

    Thursday, December 02, 2010

    அருமையா இருக்கு பாராட்டுக்கள்

  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Friday, December 03, 2010

    பட்டாபட்டி.... said...

    தமிழ்த்தோட்டம் said...

    அருமையா இருக்கு பாராட்டுக்கள்

    //

    ஹி..ஹி ரொம்ப நன்றிங்க...

    நாங்க எங்க கடமைத்தானே செஞ்சோம்...

  1. Yazhini

    Sunday, December 05, 2010

    உச் கொட்டும் கதவுகள்????????

    A good try

  1. Anonymous

    Tuesday, December 21, 2010

    ha...ha..ha...
    what a panni people chi chi funny people...

Post a Comment