RSS

அட்ரஸ் மாறிப்போச்சு மிஸ்டர் பட்டாபட்டி!


முன் குறிப்பு :

யோவ் பட்டாபட்டி !யாரோ ரெண்டு பேர் உனக்குப் போட வேண்டிய லெட்டரை எனக்கு அனுப்பிச்சிட்டாங்கய்யா..கொஞ்சம் என்னன்னு பாரு!

************************************************************************************************
லெட்டர் 1


அன்புள்ள பட்டாபட்டிக்கு,

வணக்கம். இதுவரைக்கும் தமிழ் சினிமா பயங்கர கறுப்பா நிறைய பேரை பார்த்திருந்தாலும் கறுப்பா பயங்கரமா இருக்கிறது நான் மட்டும் தான். பத்து வருஷத்துக்கு ஒரு முறை என் படம் எதுனா சூப்பர் ஹிட் ஆயிடும், அதுவும் என்னால இல்ல. எவனாச்சும் நல்ல டைரக்டர் நல்ல கதையோட சிக்கிருப்பான்.

தொப்புள்ல பம்பரம் மட்டுமே விட தெரிஞ்ச என்னை ரிக்கி பான்டிங், தோனி ரேஞ்சுக்கு கேப்டன்னு கூப்பிட்டு என்னை நம்பியும் முட்டாப் பசங்க ரசிகர் மன்றம் வச்சு வாழ்ந்துகிட்டிருந்தாங்க.அவனுகளோட அரசியல் ஆசைல மண் அள்ளிப் போடக்கூடாதேங்கிற நம்பிக்கைல நானும் கட்சி ஆரம்பிச்சேன். பாருங்க பட்டாபட்டி சார் அன்னிலேருந்து எனக்கு கிரகம் ஸ்டார்ட் ஆயிடுச்சு! கிரகத்துக்கு ஒரே ஒரு சீட் ஜெயிச்சு எம்.எல்.ஏ வும் ஆயிட்டேன்.திடீர்னு ஒரு நாள் என் கல்யாண மண்டபத்தை இடிச்சுப் போட்டு என்னையே ஒன் வே ல போக வச்சுட்டானுங்க!

என் கட்சிக்கார பயலுக ஒரு தடவ என் படத்தைப் பார்த்திருந்தாலே ஒவ்வொரு படமும் 100 நாள் ஓடிருக்கும்.ஆனா அவனுகளும் தெளிவாதான் இருந்திருக்கானுங்க.

பார்லிமெண்டுக்கு தேர்தல் நடந்தப்போ என்னை நம்பியும் என் கூட கூட்டணி வச்சிக்கலாம்னு சில கேனப் பயலுக சுத்திக்கிட்டு இருந்தானுக. அவனுகளையும் எகத்தாளமா கழட்டி வுட்டுட்டேன். மக்களை நான் தப்பா கணிச்சுட்டேனா இல்லை அவங்க என்னை சரியா புரிஞ்சுக்கிட்டாங்களான்னு தெரியலை..சமீப காலமா நாங்க டெபாசிட்டே வாங்கறதில்ல!நானும் என் அண்ணியும்...சே..தொண்டர்களோட அண்ணியும் , என் மச்சானும் சேந்து குடும்ப அரசியல் பண்ணக் கூடாதுன்னு முடிவு பண்ணினோம். ஒண்ணும் வேலைக்கு ஆகல! வர்ற தேர்தலுக்கு சுப்பிரமணிய சாமி கட்சி கூட என்னோட கூட்டணி வைக்க மாட்டானுங்க போல தெரியுது!

இப்போ நான் என்ன செய்யலாம் பட்டாபட்டி சார்? கௌரவமா கட்சியை கலைச்சிட்டு மதுரைக்குப் போய் ரைஸ்மில் நடத்தலாமா..? இன்னுமொரு பத்து வருஷம் வெய்ட் பண்ணி ஒரு ஹிட் படம் குடுக்கலாமா..என் வாழ்க்கைல ஒரு ஒளி ஏத்தி வைங்க பட்டாபட்டி சார்

இப்படிக்கு

தமிழ் சினிமாவின் நிரந்தர போலீஸ் ஆபீசர்



















************************************************************************************************************

லெட்டர் 2

மிஸ்டர் பட்டாபட்டி..

எனக்க்கு யார்கிட்டயும் எப்பவும் ரெக்வெஸ்ட் பண்ணிப் பழக்கமில்ல. ஆனா நீங்க எல்லாத்துக்கும் சொல்யுஷன் சொல்லுவீங்களாமே. நான் அந்த காலத்து கான்வென்ட் கேர்ல். நல்லா டான்ஸ் பண்ணுவேன். நல்லா நடிப்பேன். ரொம்ப வருஷமா எம்.ஜி.ஆர் கட்சியை அவர் செத்தப்புறம் நான் தான் மெய்ன்டெய்ன் பண்றேன்! தமிழ்நாட்டுக்கு ரெண்டு டெர்ம் சி.எம்மா இருந்திருக்கேன் . ஆனா பாருங்க பட்டாபட்டி இப்போ தமிழக மக்கள் ஒரு மைனாரிட்டி அரசால பயங்கர துன்பத்துல இருக்காங்க.You know what நான் ஒரு இரும்பு மனுஷி! எல்லாருக்கும் அம்மா. ஆனா எனக்கும் ரெஸ்ட் தேவை தானே..அதுக்காக கொடநாட்ல போய் ரெஸ்ட் எடுத்தா இந்த மைனாரிட்டி மீடியா ரொம்ப பேசறானுங்க. மைனாரிட்டி கூட்டணி கட்சிக் காரனுங்களும் வெளில வேற போக மாட்டேங்குறானுங்க.( ஸாரி..ஒவ்வொரு தடவையும் மைனாரிட்டி என்கிற வார்த்தை அதுவாவே சேந்துக்கும் ..கண்டுக்காதீங்க)

எல்லாத்துக்கும் மேல என் கட்சி எம்.எல்.ஏக்கள் எல்லாம் சேந்து குரூப் குரூப்பா மைனாரிட்டி ஆளுங்கட்சில சேந்து எங்களையே மைனாரிட்டி எதிர்க்கட்சி ஆக்கிடறானுங்க. இந்த மைனாரிட்டி எஸ்.வி.சேகர் வேற ஆளுங்கட்சி கூட்டத்துக்குப் போய் அடிக்கடி மானத்தை வாங்கறார். விலைவாசியை எதிர்த்துப் போராடலாம்னா காங்கிரஸ் கோவிச்சுக்கும். ராமதாஸ் கட்சியோட கூட்டணி வச்சிக்கிறதுக்கு பதிலா நான் திரும்ப சினிமாவிலேயே நடிக்கப் போயிடுவேன். பா.ஜ.க அட்டர் வேஸ்ட். வைகோவையும் கம்யூனிஸ்ட்களையும் துரத்திவிட்டாலும் போக மாட்டேங்குறாங்க.

சிங்கபூர்ல ஹோட்டல் என்ன ரேட் போகுது...? சாரி பழக்க தோஷம். இப்போ நான் என்ன பண்ணலாம் பட்டாபி? யோசிச்சு நிதானமா எங்கயாவது போய் ஆறு மாசம் ரெஸ்ட் எடுத்து பொறுமையா சொன்னாக் கூட போதும். ஏதாவது ஏடாகூடமா பதில் சொன்னீங்கன்னா அடுத்த ஆட்சில நடு ராத்திரில தூக்கிடுவேன் ஜாக்கிரதை!

இப்படிக்கு

இத்ய தெய்வம் டாக்டர் பொதுச்செயலாளர் புரட்சி தலைவி etc etc....


  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Thursday, March 18, 2010

    ரெட்டை.. சான்ஸே இல்ல..
    ஆமா.. இந்த நேரத்தில் பதிவ , போடனுமுனா,
    இந்த ரெண்டு பேருக்கு.. எவ்வளவு அவசரம் இருந்திருக்கும்?..
    அப்புறம் வாரேன்..

  1. ILLUMINATI

    Thursday, March 18, 2010

    // பாருங்க பட்டாபட்டி சார் அன்னிலேருந்து எனக்கு கிரகம் ஸ்டார்ட் ஆயிடுச்சு!//
    மக்கா,கெரகம் ஸ்டார்ட் ஆவல.ஷிப்ட் ஆயுடுச்சு,நம்ம கிட்ட இருந்து அவருக்கு.....

  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Thursday, March 18, 2010

    விஜயகாண்டுக்கு பட்டாபட்டி பதில்..
    அண்ணே..உங்க பிரச்சனை புரியுது.. நானு கொஞ்ச நாளா, ஒரு பெரிய பிரபல பதிவருடன் பேச்சு
    வார்த்தை நடத்திகொண்டி இருந்ததால்..உங்கள் கேள்வியை பார்க்கவில்லை..
    அதற்கு மன்னித்துக்கொள்ளுங்கள்.. ( சரிண்ணே. மன்னிப்பு ஆங்கிலம்தான்.. உனக்கு புடிக்காதுதான்..பாரு.. கட்சி கொடிமாறி, கண்ணு
    சிவந்திருச்சு)..
    பிரச்சனையே உன்னாலதான்..பேசாமா அண்ணிய , மச்சானை பிரச்சாரத்துக்கு கூட்டிக்கிட்டு போ..
    வெள்ள கலர்னு ஓட்டு கன்பார்ம்..

    இல்ல..

    நேரா.. மூணூ பேரும் ஆப்கானிஷ்தான் போங்க..நீ நடுவுல..இடது பக்கம் மச்சான்.. வலது பக்கம் அண்ணி..
    இப்ப என்ன பண்ற.. சட்டைய கழட்டி..6 பேக்கை காமி..( ஆமாமா.. தொந்திக்கு பின்னாடியிருக்குது.. அதேதான்)
    கோவத்தில சுடுவானுக.. பயப்படாதே..தலைய கொஞ்சம சாயி..
    ரெண்டு விக்கெட்டும் அவுட்..
    திரும்பி வா.. போலிஸ் ஜெயலட்சுமிக்கு வாழ்வு கொடுக்கிறேனு தண்ணிய போட்டுட்டு அறிக்கை விடு..
    எல்லாப் பயலும் குத்துவானுக.. ( யோவ்.. எங்கேனு மக்களுக்கு தெரியுமையா..நீரு கவலைப்படாதே..)

  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Thursday, March 18, 2010

    உங்களுக்கு பதில் சொல்ல ஒரு நல்ல மனுசன் இருக்காரு அம்மா..
    எனக்கு எப்படி தெரியுமுனா , அவருக்கு புடிச்ச 10 பெண்மணிகள்ல உங்களையும்.
    ஒருவரா போட்டு.. புண்ணியம் தேடின, பித்தனம்மா அவரு..

    ஒரே குறை என்னான, தண்ணி அடிக்க மாட்டாரு..அதைய மட்டும்
    சரி பண்ணிட்டா, தோட்டத்தில ஒரு மூலையில் , ரூம் போட்டு
    கொடுத்துடலாம்மா...

    அப்புறம், நீங்க கொட நாடுக்கு ஓய்வுக்கு போனிங்கினா.. கையோட அவர
    கூட்டிகிட்டு போகலாம்மா.. கையில கிடைப்பதை வைத்து சமையல் பண்றதுல கில்லாடி..

    என்ன.. கையில ஒரு குச்சி மட்டும் எடுத்துக்குஙக.. அவரு ஆனந்தமா குதித்து விளையாடிட்டு இருப்பாரு..
    மேலும்.. ஆரஞ்சு பச்சிடி சாப்பிட்டா எப்படியும் அடைச்சிக்கும்.... அப்ப குச்சி யூஸ் ஆகும்மம்மா..

  1. Veliyoorkaran

    Thursday, March 18, 2010

    ஆகா வெறும் வாய்ல அவுல அள்ளி போட்டுட்டியே....பத்த வெச்சிட்டியே ரெட்டை...இந்த பய பட்டாப்பட்டி இன்னும் முப்பது நாளைக்கு இத விட மாட்டானே..லெட்டர் மாறி போனதுக்கு தகவல் தொடர்பு துறை அமைச்சர எல்லாம் போட்டு கிழிப்பானே...என்னென கொடுமைகள் நடக்கபோகுதோ நாராயணா....!

  1. ஜெய்லானி

    Thursday, March 18, 2010

    //என் கட்சிக்கார பயலுக ஒரு தடவ என் படத்தைப் பார்த்திருந்தாலே ஒவ்வொரு படமும் 100 நாள் ஓடிருக்கும்.ஆனா அவனுகளும் தெளிவாதான் இருந்திருக்கானுங்க.//

    அந்த கருமாந்திரத்தை தியேட்டருல வேற பாக்கனுமாங்கிற நல்ல என்னம்தான் காரணம்

  1. ஜெய்லானி

    Thursday, March 18, 2010

    //யோசிச்சு நிதானமா எங்கயாவது போய் ஆறு மாசம் ரெஸ்ட் எடுத்து பொறுமையா சொன்னாக் கூட போதும்//
    அப்படியே எனக்கும் கெட நாட்டில ரூம் போட்டு குடுத்தீங்கனா யோசிக்க வசதியா இருக்கும்

  1. ஜெய்லானி

    Thursday, March 18, 2010

    //வர்ற தேர்தலுக்கு சுப்பிரமணிய சாமி கட்சி கூட என்னோட கூட்டணி வைக்க மாட்டானுங்க போல தெரியுது!//

    அவர் கட்சியில அவர் மட்டும்தானயா இருக்காரு!! ஏன் இந்த காண்டு?

  1. ஜெய்லானி

    Thursday, March 18, 2010

    //வைகோவையும் கம்யூனிஸ்ட்களையும் துரத்திவிட்டாலும் போக மாட்டேங்குறாங்க.//

    எங்க போவேன் ,உங்கள விட்டா யாரு இருக்கா. (சிவாஜி ஸ்டைலில் படிக்கவும்)

    ஆத்தா ஆடு வளத்தா, கோலி வளத்தா ஆனா பண்ணிகுட்டி வளக்கல என்ன வளத்தா ஹாங்.. (கமல் ஸ்டைலில் படிக்கவும்)

    உன் ஆட்டத்த தான்பார்க்க முடியல நேரிலயாவது பாத்துகிட்டு கிடக்கேனே அதும் பத்தலயா கண்டிப்பா போய்தான் ஆகனுமா (எம் ஆர் ராதா ஸ்டைலில் படிக்கவும்)

  1. Rettaival's Blog

    Thursday, March 18, 2010

    பட்டு..இன்னும் ரெண்டு மூணு லெட்டர் அட்ரஸ் மாறி வந்திருக்கு...அனுப்பட்டா...~

  1. Rettaival's Blog

    Thursday, March 18, 2010

    ஜெய்லானி...வர வர இலுமி மாதிரி ஆயிட்ட நீ...வரிக்கு வரி கலாய்க்க ஆரம்பிச்சுட்ட...! வெரி குட்! இப்படியே மெய்ன்டெய்ன் பண்ணீங்கன்னா அடுத்த ஆஸ்கர் நமக்குதான்!

  1. Rettaival's Blog

    Thursday, March 18, 2010

    இப்ப என்ன பண்ற.. சட்டைய கழட்டி..6 பேக்கை காமி..( ஆமாமா.. தொந்திக்கு பின்னாடியிருக்குது.. அதேதான்)
    கோவத்தில சுடுவானுக.. பயப்படாதே..தலைய கொஞ்சம சாயி..
    ரெண்டு விக்கெட்டும் அவுட்..
    திரும்பி வா.. போலிஸ் ஜெயலட்சுமிக்கு வாழ்வு கொடுக்கிறேனு தண்ணிய போட்டுட்டு அறிக்கை விடு..
    எல்லாப் பயலும் குத்துவானுக.. ( யோவ்.. எங்கேனு மக்களுக்கு தெரியுமையா..நீரு கவலைப்படாதே..)

    //////////////////////////////////////////////

    LOL....MUDIYALAIDA SAAMI!

  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Thursday, March 18, 2010

    @ரெட்டைவால் ' ஸ் said...
    //
    இதுக்கே தாங்கமுடியலேனா எப்படி..
    இப்பத்தான் Intervel- விட்டு இருக்கு..
    கிளைமாக்ஸ் பார்க்காம , தியேட்டர விட்டு வெளிய போயிடுவியா?..

    யோவ்.. கதவ இழுத்து சாத்துங்கையா.. திரும்பவும் முதல்ல இருந்து ஆரம்பிக்கலாம்..

  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Thursday, March 18, 2010

    @ரெட்டைவால் ' ஸ் said...
    பட்டு..இன்னும் ரெண்டு மூணு லெட்டர் அட்ரஸ் மாறி வந்திருக்கு...அனுப்பட்டா...~
    //

    இதென்னய்யா கேள்வி..
    நானும் கடைய தொறந்து வெச்சுட்டு.. யாராவது சண்டைக்கு வருவானுகளானு
    பார்க்கிறேன்..எவனும் மாட்ட மாட்டிங்க்கிறானுக..

    நீ அனுப்பு மச்சி..மீதிய நான் பார்த்துக்குறேன்..
    ( நம்ம கடை 10*10ய்யா.. ரொம்ப ஸ்டாக் வெக்க முடியாது..)
    அதனால, ஜோலி முடிஞ்சதும்...வந்து பாடிய கலெக்ட் பண்ணிட்டு போயிடு..

    நான் அனுப்புற பார்ட்டிக எல்லோரையும், ராணுவ மரியாதையோட, 21 குண்டு வெச்சு.. சாரியா.. ஒரு ப்ளோல வந்திடுச்சு..வெடிச்சு.....அப்புறம்தான் எரிக்கனும்..
    சொல்லிப்புட்டேன்.
    .
    .

  1. மங்குனி அமைச்சர்

    Thursday, March 18, 2010

    మన్న;ఆ ఔర్ల్తజ్ఞ్ల్ ఇస్ ల్సిఉట్ ;ఎలాక్ద్ ఫై అ యా ఫ్ద్యోఫ్ద్ఫ్కక్ ది రమ్మ సం ఇయిన్ అత్ఫ్క్మద్

    சே.. மன்னற பாத உடனே வாய் குளறுதுப்பா

  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Thursday, March 18, 2010

    @மங்குனி அமைச்சர் said...

    சே.. மன்னற பாத உடனே வாய் குளறுதுப்பா
    //

    குளறும்...குளறும்...எங்கேயா போய் தொலஞ்சே

  1. Rettaival's Blog

    Thursday, March 18, 2010

    மங்குனி அமைச்சர் said...
    మన్న;ఆ ఔర్ల్తజ్ఞ్ల్ ఇస్ ల్సిఉట్ ;ఎలాక్ద్ ఫై అ యా ఫ్ద్యోఫ్ద్ఫ్కక్ ది రమ్మ సం ఇయిన్ అత్ఫ్క్మద్
    *************************************

    மங்கு...ஃபுல் ஃபார்ம்ல இருக்க போல...ஆமா அதுக்கு ஏன்யா ஜாங்கிரியை பிச்சுப் போட்ருக்க!

  1. பித்தனின் வாக்கு

    Friday, March 19, 2010

    // ஒருவரா போட்டு.. புண்ணியம் தேடின, பித்தனம்மா அவரு..

    ஒரே குறை என்னான, தண்ணி அடிக்க மாட்டாரு //
    யாரு இப்படி எல்லாம் பொய் பிரச்சாரம் செய்வது, வதந்திகளை நம்பாதீர். பித்தனார், புலித்தண்ணீருடன் தான் அருள் வாக்கு சொல்வார்.

  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Friday, March 19, 2010

    @பித்தனின் வாக்கு said...
    ஒரே குறை என்னான, தண்ணி அடிக்க மாட்டாரு //
    யாரு இப்படி எல்லாம் பொய் பிரச்சாரம் செய்வது, வதந்திகளை நம்பாதீர். பித்தனார், புலித்தண்ணீருடன் தான் அருள் வாக்கு சொல்வார்.
    //

    அண்ணே.. என்னண்ணே.. இன்னுமா புலிப்பாலை குடிக்கிறீங்க..
    வேண்டானே.. ப.மு.க. R&D ரிசல்ட்படி அது புலியோட ஓண்ணாவிலிருந்து
    தயாரிக்கப்படுதுண்ணே.

    பேசாமா, ”கெனிக்கென்.. இல்லாட்டி கால்ஸ்பெர்க்”-க, விடியகாலை 3 மணிக்கு அலாரம் வெச்சு குடிங்கண்ணே..
    உடம்புக்கு நல்லது..
    இது நான் சொல்லலே.. ஜக்கி வாசு தேவர் முத்லியார் சொன்னது..

  1. Veliyoorkaran

    Friday, March 19, 2010

    @@பட்டாபட்டி.. said...
    ”கெனிக்கென்.. இல்லாட்டி கால்ஸ்பெர்க்”-க, விடியகாலை 3 மணிக்கு அலாரம் வெச்சு குடிங்கண்ணே..உடம்புக்கு நல்லது..///

    யாரோட உடம்புக்குயா நல்லது..??

  1. ரோஸ்விக்

    Friday, March 19, 2010

    பட்டாபட்டி... ஹெனிக்கனுடன் ஆரஞ்சுபழத் தோல் பச்சடியும் சாப்பிடனுமா?? சந்தேகத்தை நிவர்த்தி செய்யவும்.

  1. ரோஸ்விக்

    Friday, March 19, 2010

    புலித்தண்ணீருடன் சொல்லும் அருள் வாக்கு தான் பித்தனின் வாக்கா தலைவா??

  1. முனைவ்வ்வர் பட்டாபட்டி....

    Friday, March 19, 2010

    ரோஸ்விக் said...

    பட்டாபட்டி... ஹெனிக்கனுடன் ஆரஞ்சுபழத் தோல் பச்சடியும் சாப்பிடனுமா?? சந்தேகத்தை நிவர்த்தி செய்யவும்.
    //
    அந்த தப்ப மட்டும் பண்ணிடாதீங்க அப்பு..
    முடிஞ்சா, பீர் கூட, பொறை சாப்பிடலாம்..
    .
    .
    ஆரஞ்சு பச்சடிய சாப்பிட்டுட்டு , தலையில கைய கிய்ய வெச்சுபுடாதே..( அப்புறம் ஸ்கூல் புள்ளைக வெண்ணிலாவைப்போல தலைனு ஆரம்பிச்சுடுவானுக)

  1. Veliyoorkaran

    Friday, March 19, 2010

    ஆரஞ்சு பச்சடி பழசுப்பு..இப்ப புதுசா க்ரோட்டன்ஸ் செடிய அரிஞ்சு போட்டு எதோ ஒரு தொக்கு பண்றாராம் அண்ணேன்...தேவாமிர்தமா இருக்குமாம்..வாங்க ஒரு எட்டு போய் சாப்டுட்டு வருவோம்..!!

Post a Comment