RSS

சிம்பு & டி.ஆர் இணைந்து கலக்கும் "எப்பா..."(கண்ணீர் சிந்த வைக்கும் ஒரு ஹாரர் மூவி)


சுனாமிக்குப் பிறகு சென்னை மக்களை பீதியடைய வைக்கும் சில விஷயங்களில் டி.ஆர் படமும் சிம்பு படமும் ஒன்று.ரெண்டு பேரும் சேர்ந்து "பா" படத்தை ரீமேக் செய்யவிருக்கிறார்கள் என்று பி.பீ.சி(பிரிட்டிஷ் பீலா கார்ப்பரேஷன் )வெளியிட்ட செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன,


"எப்பா..." படத்தைப் பற்றிக் கேட்டதற்கு அமிதாபுக்குத் தான் எந்த விதத்தில் குறைந்தவனென்றும், என் படங்களைக் கண்டு அன்றைக்கு அமிதாப்,தர்மேந்திரா,ராஜேஷ் கண்ணா போன்றவர்களே அலறினார்கள் என்றும் என் படங்கள் சரமாரியாக வசூலை அள்ளுவதைக் கண்டு பயப்படாத இந்தி நடிகர்களே இல்லை என்றும் டி.ஆர் கூறினார்.


மேலும் படத்தைப் பற்றி சிம்பு கூறும் போது படத்தின் மேக்கப் செலவு,அதாவது ஷேவிங் செலவு 25 லட்சம் என்றும் செட் போட்டு வீணடித்த செலவு மட்டுமே 2 கோடி என்றும் கூறினார்.மேலும் படத்தைப் பற்றிக் கூறிய செய்திகளைக் கேட்ட நிருபர் அங்கேயே நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கீழே விழுந்து விட்டதால் "எப்பா..." படத்தைப் பற்றிய அரிய தகவல்கள் கிடைக்காமல் போயின. ஆனாலும் ரசிகர்களின் உணர்வுகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக இதோ "எப்பா படத்தின் ஸ்டில்.
 




பின் குறிப்பு :


ஜாக்கிரதை...ஒரு வேளை இந்த படம் ரிலீஸ் ஆனாலும் ஆகலாம்...! அருகிலிருக்கும் ஆஸ்பத்திரியில் இடம் போட்டு வைக்கவும்

முக்கிய குறிப்பு : ஃபோட்டோவை எடிட் செய்தது திரு.ஆயில்யன்.(தகவல் தந்த பெனாத்தல் சுரேஷுக்கும் ஆயில்யனுக்கும் நிறைய நன்றிகள்)
  1. போவாஸ்

    Thursday, December 17, 2009

    கலக்கலோ கலக்கல்.superuuuuuu

  1. குப்பத்து ராசா

    Friday, December 18, 2009

    உருண்டு உருண்டு சிரித்தேன்

  1. பினாத்தல் சுரேஷ்

    Friday, December 18, 2009

    உங்களுக்கு மின்னஞ்சலில் வந்த போட்டோதானே இது? இதைச் செய்தது நண்பர் ஆயில்யன். பெயர் தெரிந்திராவிட்டாலும், உங்கள் உழைப்பு என்பதுபோலத் தோற்றமளிக்கும் பதிவுகளைத் தவிருங்கள்.

  1. Rettaival's Blog

    Friday, December 18, 2009

    சுட்டிக் காட்டியதற்கு நன்றி திரு.பெனாத்தல் சுரேஷ். By the way எனக்கு இதை ஈ மெய்லில் அனுப்பியது "வெளியூர்காரன்" எனும் நண்பன்.நண்பர் ஆயில்யனுக்கு ஸ்பெஷல் நன்றிகள் மற்றும் வாழ்த்துகள்.

  1. வெளியூர்க்காரன்

    Friday, December 18, 2009

    இந்த வாலு பயலுக இப்டிதான் பினாத்தல் சுரேஷ்...எதாச்சும் வாலுத்தனம் பண்ணிகிட்டே இருப்பானுக...ஆயில்யனுக்கு நன்றிகள்...வாழ்த்துக்களும்..சுட்டிக்காட்டியமைக்கு நன்றி...இனி இது போன்ற சிரிக்க வைக்கும் தவறுகள் தொடர்ந்து வரும்....சிரிச்சிட்டு விட்ருங்க....எங்களுக்கு எதுக்கு சாமி பேரு புகழெல்லாம்...நாலு பேரு சிரிச்சா போதும்....!

Post a Comment