RSS

ஆபரேஷன் எயிட்' ஓ கிளாக்


பார்லிமெண்ட்டில் அந்த பெண் அமைச்சர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் உட்கார்ந்திருந்தது அவர்களுக்கு பயங்கர எரிச்சலாக இருந்தது. தூர்தர்ஷனின் லோக் சபா சேனலில் அடுத்த வருஷம் நடக்கப்போகும் அமைச்சரினியின் மாநில சட்டசபை தேர்தலைப் பற்றி விவாதித்துக்கொண்டிருந்தது அவர்கள் எரிச்சலை இன்னும் அதிகப்படுத்தியது.

"நான் சொல்லலை சகா...இந்தம்மாவுக்கு சட்டசபை தேர்தல் தான் முக்கியம். எண்பத்தியாறு போலீஸ்காரனுங்க செத்தது பத்திக் கூட ஒரு கவலையும் இல்லாம உக்காந்திருக்குது.இந்த மாதிரி ஆளுங்களையெல்லாம் சும்மா விடக் கூடாது. ஆபரேஷனை சரியான சமயத்துல நடத்திக் காட்டணும்.இல்லைன்னா ஊருக்கே போக முடியாது. அவ்வளவு கேவலப்படுத்திருவானுங்க.!"

ரவி சொல்லி முடித்தபோது தேவன் டி.வியையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். தேவன் மனதில் ஆயிரம் எண்ணங்கள். ஏன் நம் தேசம் மட்டும் இப்படி இருக்கிறது? எங்கு பார்த்தாலும் கமிஷன்.கொஞ்சமாக சில்லறை புரட்டுபவனை அடித்துத் துவைத்து அதே நேரத்தில் ஆயிரம் கோடி ரெண்டாயிரம் கோடி என்று கொள்ளை அடிப்பவனை ஏ கிளாஸில் அடைத்து சல்யூட் அடிக்கும் போலீஸ். தேர்தலின் போது கூச்சமே பார்க்காமல் காசை வாங்கிப் போட்டுக் கொண்டு அடுத்த வேலையை பார்க்கத் துடிக்கும் ஜனங்கள். இதெற்கெல்லாம் விடிவே கிடையாதா?

முதலில் இந்த ஆபரேஷனை வெற்றிகரமாக முடித்துக் காட்ட வேண்டும். அது தான் முக்கியம். தன் மக்களிடம் தங்களை முழுவதுமாக கொண்டு சேர்க்கப் போகும் செயல் திட்டம்.

இந்த ஆபரேஷனுக்கு என்ன பேரு வச்சிருக்கீங்க சகா?" -ரவி

"ஆபரேஷன் எயிட்' ஓ கிளாக். சரியா பத்து நிமிஷத்துக்குள்ள எல்லாம் முடியணும். இல்லைன்னா பேஜார் ஆயிடும். உங்களோட உதவியும் தேவைப்படும். ஃபோன் ரீசார்ஜ் பண்ணிட்டீங்க இல்ல...?

" எல்லாம் பெர்ஃபெக்ட் சகா! சரியா எட்டு மணிக்கு நான் மிஷினை ஆன் பண்ணிடனும். உடனே எனக்கு பாஸ்வேர்ட் குடுத்துடுவீங்க இல்ல..!"

"நிச்சயமா! நாம செய்யப் போற இந்த காரியம் நிறைய பேர் வயித்தெரிச்சலைக் கொட்டணும். எப்படி இவங்களால முடிஞ்சதுன்னு தன்லையை பிச்சிக்கணும்.நல்லவங்களை ஆண்டவன் கை விட மாட்டார் ரவி!"

"அதே தான் சகா! போன தடவை மாதிரி சொதப்பிடக் கூடாது. கடைசி நேரத்துல அந்த லாரி டிரைவர் மட்டும் ஹெல்ப் பண்ணலைன்னா....என்னால யோசிச்சுப் பார்க்கவே முடியலை சகா!

"விட்டுத் தள்ளுங்க...நாளைய பொழுது நமக்கானது. என்னோட கவலையெல்லாம் பொது மக்களைப் பத்திதான். எத்தனை நாளைக்கு இந்த மாதிரியான கஷ்டங்கள்? இந்த அரசாங்கம் சிந்திக்கவே செய்யாதா?

தொலைக் காட்சியில் இப்பொழுது அந்த பெண் அமைச்சர் ஆவேசமாக உரையாற்றிக் கொண்டிருந்தார்.ரவியும் சகாதேவனும் டி.வியை பார்த்த படியே நகைத்தனர்.

"என்ன ஆவேசம்? இநத நடிப்பை பார்த்துதான் சகா மக்கள் ஏமாந்து போறாங்க!"

"ஹூம்! நமக்கு இந்த பொது ஜனங்களும் முக்கியமில்லை. அரசாங்கமும் முக்கியமில்லை! நம்ம லட்சியம் தான் முக்கியம் ரவி.சரி அப்போ நாளைக்கு காலைல எட்டு மணிக்கு...ஓகே!"

"ஒகே சகா!"

இவ்வளவு பெரிய காரியத்தை கம்ப்யூட்டரிலேயே முடிக்கப் போவதின் சந்தோஷத்தில் ரவிக்கு தலை கால் புரியவில்லை. தன் அப்பா தாத்தா பட்ட கஷ்டமெல்லாம் கண் முன் நிழலாடியது. தாத்தா மட்டும் உயிரோடு இருந்திருந்தாரென்றால் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்?

**********************************************************************************************************************************

மறு நாள் காலை மணி ஏழு ஐம்பது.

"சகா நான் மிஷின் ஆன் பண்ணிட்டேன். !"

"ரொம்ப கவனம் ரவி. யு.பி.எஸ் ஆன் ல தானெ இருக்கு.நெட் கனெக்ஷன் செக் பண்ணிட்டீங்கள?"

"எவ்ரிதிங் ஆல்ரைட் சகா! இன்னும் சரியா எட்டு நிமிஷம் இருக்கு.

7.55
7.56
7.57
.
.
.

மணி எட்டு .

"வாட்ஸ் ஹேப்பனிங் சகா..? க்விக்! "

சகாதேவனுக்கு இதயத்துடிப்பு அதிகமானது.மீண்டும் மீண்டும் முயற்சித்தான்.பலனில்லை.

" ரவி...இங்க வொர்க் அவுட் ஆகலை. நீங்க கொஞ்சம் உடனே ட்ரை பண்ணுங்க. "

"பாஸ்வேர்ட் சொல்லுங்க சகா....! என்னால முடிஞ்சதை பண்றேன்."

பாஸ்வேர்ட் டைப் செய்வதற்குள் நிமிடங்கள் கரைய ஆரம்பித்தன.

மணி 8.06

8.07
.
.
8.09
.
.
8.09.55

எல்லாம் முடிந்து போனது. இன்னும் ரவி மற்றும் சகாதேவன் கண்களில் ஏமாற்றத்தின் மிச்சம் அகலவில்லை.

"எப்படி சகா....? எப்படி இது சாத்தியம்? எல்லாமே சரியாதானே இருந்தது. கரெக்டாதானே லாக் இன் பண்ணினோம். கரெக்டா தானே ட்ரை பண்ணினோம். அப்படியும்...."

ரவிக்கும் சகாதேவனுக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை.

"மான்யுவலா ஏதாச்சும் பண்ண முடியுமா? நேர்ல யாரையாவது அனுப்பிருந்தீங்களா?"-ரவி.

இல்லை ரவி. அதுக்கு டைம் இல்லை. அதுவுமில்லாம நேர்ல போயும் வேஸ்ட் தான். கொஞ்ச நேரத்தில் டி.வி போட்டு பார்க்கலாம்.என்ன நடந்ததுன்னு தெரிஞ்சிக்கலாம்.

இனிமேல் ஊருக்கு எப்படிப் போவது என்ற கவலையில் இருவரது முகமும் பரிதபாகரமாக வெளிறிப் போயிருந்தது.

சற்று நேரம் கழித்து ஒன்பது மணி செய்திகளில்

"தீபாவளிக்கு தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கிய பத்தே நிமிடங்களில் எல்லா ரயில்களிலும் எல்லா டிக்கெட்டுகளும் தீர்ந்துவிட்டன." என அந்த பெண்மனி வாசித்து முடித்தபோது இருவரின் கண்களிலும் நீர் தளும்பாத குறை.

ரவி பெருமூச்சுடன் "டி.வி பார்த்தீங்களா சகா!கொடுமை.அப்படியே ஒரு எட்டு கோயம்பேடு போய் ட்ரை பண்ணனும் சகா!" என்றான்.

அடுத்த படையெடுப்பு ஆரம்பமானது.

எந்திரன் - சூப்பர் சோனிக் பாடல்கள்



தமிழ்நாட்டின் அடுத்த ஃபீவரின் டெம்பெரேச்சர் எகிற ஆரம்பித்திருக்கிறது.இன்றைக்கு மதியத்துக்குள் மட்டும் கூகிளில் ஐந்தரை மில்லியனுக்கும் அதிகமான தேடல்கள். வேறென்ன ...? எந்திரன் பாடல்கள் தான். புதிய இன்ஸ்ட்ருமென்ட்கள் , புதிய சத்தங்கள் என மீண்டும் ரஹ்மானிடம் இருந்து ஸ்பெஷல் ஆல்பம். "Neither a Shankar film, Nor a Rajini film " என விமர்சிக்கப்பட்ட சிவாஜியிலிருந்து பாடம் கற்றுக் கொண்டிருப்பார்கள் போல. முழுக்க முழுக்க ஷங்கர் பட பாடல்களாகத் தான் தோன்றுகிறது.

புதிய மனிதா பூமிக்கு வா - ரஹ்மானுடன் எஸ்.பி.பி பாடியிருக்கும் பாடல். ரோபோவை உருவாக்கி வரவேற்கும் பாடல். ரஹ்மானின் குரலில் ஸ்லோவாக ஆரம்பித்து எஸ்.பி.பியின் குரலில் எகிறுகிறது. ரஹ்மானின் மகள் கதீஜாவும் இரண்டு வரிகள் பாடியிருக்கிறார் என்பது கூடுதல் விசேஷம். வழக்கமாக ரஜினியின் அறிமுகப் பாடலுக்கு எஸ்.பி.பி தரும் உற்சாகத்தை விட இரண்டு மடங்கு துள்ளலுடன் பாடியிருக்கிறார்.அதிலும் தாய் மொழியை தந்தை மொழியாக்கியது புதுமை.வைரமுத்து!

பூம் பூம் ரோபோ டா - நம்ம பழைய யோகி.பி உடன் ஸ்வேதா ,தன்வி மற்றும் கீர்த்தி சகதியா பாடியிருக்கிறார்கள். ரோபோவின் பெயர் சிட்டி எனத் தெரிகிறது.ஹீரோயிஸ பாடல்தான்.சிவாஜியின் தீ தீ பாடலின் வாசனை நிறைய.

அரிமா அரிமா- ஷங்கரின் டிபிகல் "முதல்வா முதல்வா ", மாயா மச்சீந்திரா டைப் பாடல். பாடல் கேட்கும் போதே அரச உடையோடு கிராஃபிக்ஸில் ஆயிரம் பேரோடு கனவில் டூயட் பாடுவார்கள் என தெரிகிறது. ஹரிஹரனும் சாதனா சர்கமும் கஷ்டப்பட்டு பாடியிருக்கிறார்கள்.

கிளிமஞ்சாரோ - ஜாவித் அலி ,சின்மயி கூட்டணி.உடனடியாக ஹிட் ஆகும் வாய்ப்புண்டு.முதல் முறை உங்களுக்கு கேட்கும்போது பாடல் வரிகள் புரிந்து விட்டால் நீங்கள் செம்மொழி ஆராய்ச்சித் தலைவராக முயற்சி செய்யலாம்.அவசர அவசரமாக பாடியிருக்கிறார்கள்.

இரும்பில் ஒரு இதயம் - ரஹ்மானுடன் காஷ் 'ன் க்ரிஸ்ஸி தமிழும் ஆங்கிலமும் கலந்து கலக்கியிருக்கும் பாடல். முதலில் எரிச்சலை தந்து, பின் தாளம் போட வைத்து விடுகிறது.இளமையான ரஹ்மானின் குரல் , வித்தியாசமான சத்தங்கள் என ஒரு Complete party song.

தீம் ம்யூசிக் - எலெக்ட்ரிக் ட்ரம்ஸ், வெஸ்டெர்ன் வயலின் , கர்நாடக தகிட தகிட என மிரட்டும் ஃப்யுஷன் இசை. ஆனால் ஏற்கெனவே கேட்டது போல் இருக்கிறது.

காதல் அணுக்கள்- ஆல்பத்தின் ஹைலைட். மெதுவாக ஸ்ட்ரிங்க்ஸில் ஆரம்பித்து அலட்சியமாக விஜய் பிரகாஷின் குரலிலும் பின்பு அட்டகாசமாக ஸ்ரேயா கோஷலிலின் குரலிலும் பாடல் நொறுக்கி எடுக்கிறது. பாடல் நெடுக வரும் ஸ்ட்ரிங்ஸும் பாடல் வரிகளும் மனதை அள்ளுகிறது.ரொம்பவும் அழகான பாடலுக்கு அற்புதமாக உயிர் கொடுத்திருக்கின்றனர் விஜய் பிரகாஷும் ஸ்ரேய கோஷலும்.

சிலிக்கன் சிங்கம், நியூட்ரான் எலெக்ட்ரான் உன் நீலக்கண்ணில் மொத்தம் எத்தனை ?, சூப்பர் சோனிக் சூப்பர் ஸ்டார் என ரஜினிக்காக தேடித் தேடி வார்த்தைகளைப் பிடித்திருக்கிறார்கள்.

ஓபனிங் சாங் இம்சைகள் , ஏழையாக இருந்து பணக்காரனாகும் பாடல் என ரஜினிகாந்த் படக் கட்டுப்பாடுகள் ஏதும் இருப்பதாக தெரியவில்லை. அதே போல் ரோபோ என்பதற்காக பாடல்களை சின்தஸைஸர் குரல்களில் வெறுப்பேற்றாமல் எலெக்ட்ரிக் ட்ரம்ஸ், வித்தியாசமான பீட்டுகள் என எதிர்பார்ப்பை உணர்ந்து செய்திருக்கிறார்கள். அதனாலேயே எந்திரன் - A step ahead than satisfaction!
***********************************************************************************